விபரீத விளையாட்டு- 17 கண்மணி கண் திறந்து பார்த்த போது மங்கலான வெளிச்சத்தில் ஒரு அறையில் இருப்பது தெரிந்தது. சிகப்பு நிறத்தில் மினுக் மினுக் என்று ஒளி வீசி கொண்டிருந்தது. எதோ ஒன்று அவளின் முன்னர் வைக்க பட்டிருந்தது அவள் உணர்ந்தாள். தான் ஒரு படுக்கையில் ஆடைகள் களையப்பட்டு படுக்க வைக்க பட்டுள்ளதையும் அவள் முன் ஒரு காமிரா வைக்க பட்டு இருப்பதையும் கண்டு அவள் இதயம் ஒரு நொடி நின்றது. ஐயோ என்ன ஆச்சு எனக்கு? இங்க என்ன நடக்குது? நான் இங்கே எப்படி வந்தேன்?என்ன யார் இப்படி செஞ்சது?என்று கையை நகர்த்தி பார்த்தாள். கை கால்கள் இருந்தனவே அன்றி அவைகள் அசையவில்லை.வலி உயிரை கொன்றது!தலை சுற்றலாக இருந்தது.தன கண்களை அகல விரித்து சுற்று முற்றம் பார்த்தாள். அரை கதவு பாதி திறந்திருப்பது தெரிந்தது. கொஞ்ச தூரத்தில் ஜான் இருப்பது தெரிந்தது. ஆனால் அவன் இவள் இருப்பதை உணரவில்லை. அவன் யாருடனோ பேசுவது கேட்டது ஆனால் அவளால் கத்த முடியவில்லை. ஜான் ஜான் என்று கத்தி பார்க்க முயன்றாள். ஜான் நான் இங்கே இருக்கேன் என்று கத்த முற்பட்டாள் ஆனால் அவளின் குரல் அவளுக்கே கேட்க முடியவில்லை. ஒருவனின் பின் பக்கம் தெரிந்தது?யார் அ