Skip to main content
விபரீத விளையாட்டு - 11 

தப்பு செய்யறவங்க யாரும் எனைக்குமே சுதந்திரமா வாழ முடியாது ஒன்னு தெரியுமா? குத்தம் செய்யறவேன் தன்னையே அறியாமல் எதாவது ஒரு சாட்சி வெச்சிருப்பான். அந்த உண்மை அவனை எப்படியாவது மாட்டிவிட்டுறும்.
ஒரு அலைவரிசையில் மதிய நேரம் தமிழ் சினிமா ஓடி கொண்டிருந்தது. சிவாஜி யின் கணீர் குரல் வசனம் ஒன்று தெளிவில்லாமல் யோசித்து கொண்டிருந்த செந்திலுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது.

நல்லவன் வாழ்வான்! தப்பு பண்ணவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும்! ராமுவின் வார்த்தைகள் அவன் காதில் ஒலித்து கொண்டிருந்தது.
தப்பு செஞ்சவங்களை மாட்டி விடனும் ஆனால் எங்கேருந்து ஆதாரம் சிக்குறது. ஜான் வீட்டில் இல்லை, கண்மணியுடன் தான் சென்றிருப்பான் என்று தெரியும். சரி வீட்டை துழாவ வேண்டியது தான் என்று முடிவு கட்டி ஒவ்வொறு பக்கமாக தேட ஆரம்பித்தான். அப்போது ஒரு துணி குவியலில் லேசாக அதிர்வு தெரிந்தது. எலி வந்து விட்டதா என்று எண்ணியவன் துணியை விலக்கி பார்த்தான். ஒரு செல் பேசி. மணி ஒலித்து கொண்டிருந்தது. செந்தில் சிரித்தான்.ஜான் தனக்கு தெரியாமல் ஒரு செல் இணைப்பு வைத்து இருக்கிறானா? எடுத்து பேசினான்  
ஹே கண்ணா! நான் கேட்டது என்னாச்சு?
அதிர்ந்து போனான் இது யார்? யார் பேசுறது?
அட பாவி முந்தாநாள் தான ரெண்டு பெரும் சிங்கபூரு ஓடி போவலாமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தே? நான் சாந்திடா!

செந்தில் விரைவாக சுதாரித்து கொண்டான்! அவன் மூளை வேகமாக வேலை செய்தது! இவள் மூலம் ஏதாவது உபயோகமான தகவல் கிடைக்கும் என்று எண்ணினான் பேச்சை வளர்த்தான்

ஓ!  சாந்தி! சாரி டார்லிங்! நேத்து ஒரே போதை அதான் என்னையே மறந்துட்டேன்! அதுல கூட உன்ன மறக்கலே! 

அட அட அட! என் ராஜா! பொய் சொன்னாலும் எனக்கு புடிக்கிற மாதிரி சொல்லுரடா! 
ஆமா நான் என்ன சொன்னேன்?
நொண்ண சொன்ன! மண்ணாங்கட்டி! டேய் சிஸ்டம் சரியில்லை பாட்டு கேக்க முடியல, புது படம் பாக்க முடியல சீக்கிரம் எவனையாச்சும் அனுப்பிவெக்கிறேன்னு சொல்லி இன்னியோட ரெண்டு நாள் ஆகுது !
அய்யயோ அத நான் மறந்தே போனேன்
இதெல்லாம் மறந்துடுவியே! உன் விஷயமா இருந்தா மறப்பியா?
ஐயோ டார்லிங்! சாரி  பார்த்தேன் இப்போவே அனுப்பவா? அனுப்பிடுறேன்! சீக்கிரமா அனுப்பிடுறேன்!

தங்கம்! சீக்கிரமா அனுப்பு! முக்கியமா! விலாசம் சொல்லும் போது அவன் கிட்ட இன்ஸ்பெக்டர் கருணா வீடுன்னு சொல்லிடாத! 

செந்தில் அதிர்ச்சி அடைந்தான்! கருணா! அவன் தானே ஜானின் பாஸ், அவன் வீட்டில் ஜானுக்கு இப்படி ஒரு இணைப்பா! பயங்கர ஜெகஜால கேடி தான் இவன்!

அது அது நம்ம ஆளு சிஸ்டம் அதுல ஏதாவது நோண்டி வெச்சேன்னு தெரிஞ்சா என்ன ஒரே போடா போட்டுடுவான்!ப்ளீஸ்  ப்ளீஸ் சீக்கிரமா அனுப்பிடு டா செல்லம்!

சரி சாந்தி முதல் வேலையா அவனை அனுப்பி விடுறேன்! போன் நம்பர் தர்றேன் அதுக்கு பேசிக்கோ
முக்கியமான விஷயம்! இது திருட்டு நம்பர் அதுனால இனி இந்த நம்பருக்கு போன் பண்ணாதே!நான் வேற நம்பர் தர்ற வரைக்கும் சும்மா இரு டார்லிங்! என்று சொல்லி இணைப்பை துண்டித்து விட்டான்!

கருணாவுக்கு 3 பொண்டாட்டிங்க! ஒருத்தருக்கும் இன்னொருத்தரை தெரியாது, அவனுக்கு ரெண்டு கீபுன்னு வெளியிலையும் தெரியாது-  ஜான் அன்று உளறியது நினைவிற்கு வந்தது! ஜானுக்கு அப்போ எப்படி தெரியும் இவன் பொந்தில் நுழையும் எலி யாச்சே தன்னோட முதலாளி பத்தி நல்ல தெரிஞ்சு வெச்சிருக்கான் என்று ஒருவாறு புரிந்து கொண்டான். நல்லதாய் போய் விட்டது இனி நடக்க வேண்டியதை சரியாக செய்வோம் என்று கடவுளின் மேல் பாரத்தை போட்டுவிட்டு நம்பரையும் குறித்து கொண்டான் அந்த எண் வந்த தகவலை செல்லில் இருந்து அழித்தான். செல் பேசியை மீண்டும் வைத்து விட்டு பொது தொலை பேசிக்கு சென்றான்.

சாந்தி மேடமா! நான் குமார் பேசுறேன், சிஸ்டம் பிராப்ளம் ன்னு   சொன்னிங்களா?
========================================================================

விபரீத விளையாட்டு - 12

நுங்கம்பாக்கத்தில் ஒரு பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு அது! பிரம்மாண்டமான வீடுகளையும் அதன் பரப்பளவையும் பார்த்தால் ஒரு ஊரே குடி ஏறலாம்! செந்தில் வாயில் காவலனிடம் தான் சாந்தியின் வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிவித்தான். 

செந்தில் கருணாவின் வீட்டிற்கு உள்ளே நுழைந்ததும் அவன் அந்த வீட்டை கண்டு வாய் பிளந்தான். தன்னை போன்ற அப்பாவி ஜனங்களைரத்தம் பிழிந்து சம்பாதித்து கொலை நுணுக்கம் சோட்ட சொட்ட பல நவீன வேலை பாடுகளுடன் அமைந்திருந்தது கருணாவின் 3 வது துணைவியின் வீடு.LCD, TV, DVD player, Home theater, Laptop, Desktop என்று ஆங்கிலத்தில் என்னென்ன கண்டு பிடிப்புகளோ அத்துணையும் அங்கு இருந்தது. தான் சேகரித்த தகவல்கள் ஆதாரமாய் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று ஊகித்து கொண்டான்.

இவளே இவ்வளவு பவிசுகளையும் பெற்றிருந்தால் இவளை தவிர மற்ற இருவர் வீடுகளும் எவ்வளவு காசு கொழுப்பில் திணறி கொண்டிருக்கும் என்று நினைத்து கொண்டான்.

மேடம் நான் ஜான் சார் சொல்லி இங்க வந்தேன், சிஸ்டம் செக் பண்ணிக்கலாமா? என்றான்.

வாங்க உள்ள வாங்க என்று அவனை தன் படுக்கை அரைக்கு அழைத்து சென்றாள்.தம்பி எந்த ஊரு?

எனக்கு சொந்த ஊரு  கோபி, இங்க கே கே நகர் பக்கத்திலே இருக்கேங்க என்று பொய் சொன்னான் செந்தில்.

சரி பாத்துகிட்டு இருங்க நான் போய் உங்களுக்கு குடிக்க எடுத்துகிட்டு வரேன் என்று சென்றாள்.

செந்தில் வேகமாக துழாவினான். இந்த கணினியின் பிரச்னை தெரிந்து போயிற்று. டீ.வீ. டீ  பிளேயரில் (DVD drive CD, அடைத்து கொண்டிருந்ததை கண்டு கொண்டான். ஒரு பின் எடுத்து அதில் உள்ள துவாரத்தில் குத்தினான் தட்டு வெளியே வந்தது. இருந்தாலும் அவன் சாட்சிகளை தேட வேண்டுமே? நேரத்தை விரயம் செய்ய வேண்டுமே?
கண்டுபிடிசிடீங்களா? 
ம்ம்! இல்லை சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாம்! அய்யா எப்போ வருவாரு?
யாரு என் வீட்டு காரரா ? அவரு எங்க இனிக்கி வருவாரு? ரெண்டு நாள் ஆகும்!
அவரு இருந்தா சிஸ்டம் உடனே வேலை செய்யனும்னு தாம் தூம்னு குதிப்பாறு அதுனால தான் உங்கள வரவழைச்சேன்.
ஆமா ஜான் சார் உங்களுக்கு எதனை நாள் பழக்கம்?
அவரு நானும் பாமிலி..என்று உதட்டை கடித்து கொண்டு. இல்ல! இல்ல! பாமிலி பிரெண்டு நீங்க பாத்துகிட்டு இருங்க நான் இப்போ வேறென். என்று படதடுடன் நழுவினாள்.
ஒரு வழியாக அவளை மடக்கி விட்டான். சரி ஜான் இங்கும் விளையாடி விட்டான். கரன்ட் கம்பியில் கை வைத்த காக்கை போல மாட்டி கொண்டான் ஜான் என்று தெரிந்து கொண்டான்.
சாந்தி வந்ததும்!செந்தில் கவலை தோய்ந்த முகத்துடன் மேடம் இதுல நான் நிறைய வேலை செய்ய வேண்டி இருக்கு நான் பாத்துக்குறேன் உங்களுக்கு ஏதாவது வேலை இருந்தா போய் பாருங்க என்று ஒரு வாறு சமாதானம் சொல்லி அவன் வேலையை ஆரம்பித்தான். 

பாராங்கல்லினை பெயர்க்கும் கடும் தொழிலாளிக்கு, தங்க குடத்தில் வைரம் கிடைத்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது செந்திலுக்கு.  
அவன் எதிர்பார்த்தது வீண் போக வில்லை. அதனை ஹார்டி டிச்கிலும் தோண்டி துருவி விட்டான். அனைத்தும்  இந்த கணினியில் இருக்க கண்டான் செந்தில். அடிச்சாண்டா ஜாக் பாட் கருணா பெரிய கில்லாடியாக இருந்தாலும் அவன் அணைத்து தகவல்களையும் இந்த கணினியில் பதிவேற்றி இருந்தது செந்திலுக்கு வரபிரசாதமாக இருந்தது. அவன் எல்லா குற்றங்களையும் தன கை பட எழுதி அதன் ஆதாரங்களையும் கணினியில் மென் படிகளாக வைத்திருந்தான். அவனால் ஏமாற்ற பட்ட பெண்களை பற்றிய தகவல்களையும், ஜான் எங்கு எப்படி திட்டத்தை செயல் படுத்த வேண்டும் என்ற போன் பேச்சுக்களும பதிவேற்றி இருந்தான்.மேலும் ஜான் செய்த கொலைகளை அத்தனையும் ரகசியமாக பதிவேரியிருன்தது கண்டு செந்தில் மயிர் கூசெரிந்தான்,அத்தனையையும் சேர்த்து ஒரே ஹார்ட் டிஸ்கில் பதிந்து கொண்டான் செந்தில். பக்குவமாக அதனை கழற்றி ஒரு புதிய ஹார்ட் டிஸ்கினை மாற்றி விட்டான் செந்தில்.
தற்செயலாக அவளின் செல் அங்கே இருக்கவே அதிலிருந்து உடனே ஜானின் செல் பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான்.
ஜான்! நாளை மறுநாள் இங்கு வந்துவிடவும் நிறைய விளையாட்டு பார்த்துள்ளேன் புலி வெளி கிளம்பி இருக்கிறது- அன்பு சாந்தி!
மேடம் கவலை படாதிங்க, இதில வைரஸ் வந்திருக்கு அதுனால தான் இந்த சிஸ்டம் வேலை செய்யல நான் புதுசா இதை ரெடி பண்ணி விட்டுடுறேன். அப்புறம் பாருங்க இதோட ஸ்பீடு!  என்று சொல்லி அவளை தெம்பு படுத்தினான்! 
சரி பா சீக்கிரம் முடிச்சி விட்டுடு! எனக்கு ஷாப்பிங் போகணும்!
இதோ 1 மணி நேரம் தாங்க மேடம் சுத்தமா முடிச்சிடுறேன்!

-----------------------------------------------------------
கருணா எரிமலையாக வெடிதான்!

எவன கேட்டுடி என் கம்பியுடரில கை வெச்ச! பொறம்போக்கு! அறிவு கேட்ட முண்டமே எத்தனை தடவை சொன்னேன் இந்த மேஷிணுல கை வேக்காதே ன்னு!என்று அவளை அடி துவைத்விட்டான்!

கருணா வைத்திருந்த அத்துணை தகவல்களையும் சுத்தமாக அழித்து விட்டு சென்று விட்டான் செந்தில்.

வாசகர்களே! இங்கு உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம்! அதனை பெரிய குற்றவாளி, கிரிமினல் ஒரே ஒரு ஹார்ட் டிச்கில் தன் மொத்த தகவல்களையும் சேர்த்து  வைதிருக்கிறானா? என்று!
கதையின் போக்கு படி ஒரு பெரிய குற்றவாளி இங்கு ஒரு மா பெரும் தவறு செய்வதாக சித்திரிக்க படுகிறது!அவ்வளவு தான்! செந்திலும் கொடுக்க பட்ட நேரத்திற்குள் சாட்சிகளை சேர்க்க வேண்டும் என்பதையே இங்கு கவனிப்போம்.

ச்சே மூதேவி எவ்வளவு பெரிய முக்கியமான விஷயமெல்லாம் அதுக்குல்ளர இருந்தது? சனியனே இப்படி தொலைச்சிட்டு முழிக்கிரியே! சொல்லுய் எவன் வந்தது? எதுக்கு இப்படை செஞ்ச?

நான் தாங்க நெட்டுல படம் பாக்க முடியல ன்னு ஒருத்தன கூட்டி வந்தேன்! 
மூஞ்சி! அப்பிடியே வெட்டி கூறு போடபோறேன் உன்னைய!
போடிங்! உன்ன நம்பி நான் ஏமாந்து போனேனே! அதுல எவ்வளவு விஷயம் இருந்ததுன்னு தெரியுமா! நீ கெட்ட கேட்டுக்கு எல்லா எழவையும் உனக்கு வாங்கி போட்டிருக்கேனே! திருட்டு சி டி தான் இருக்கே அப்புறம் என்ன கேடு உனக்கு! என்று வகை வகையாக அடித்து கொன்றான்!

அப்போது சாந்தியின் மொபைல் கிணுகிணுத்தது! 

சாந்தி டார்லிங்! சிஸ்டம் சரி ஆயிடுச்சா? நான் அனுப்பின ஆளு நல்லவன்! இனிமே இந்த நம்பரில் கூப்பிடாதே! உன்ன நான் காதலிக்கிறேன்-கண்ணா! என்று குறுஞ் செய்தியை கண்து ரௌதிரகாரம் ஆனான் கருணா!

தகவல் வந்த எண்ணினை கண்டு பிடிக்க அவன் முயன்றதெல்லாம் வீணாகி போனது. யார் அவன் தான் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து தன் மனைவிக்கு மெசேஜ் அனுப்பும் துணிவு யாருக்கு இருக்கும்? அடிபட்ட புலி போல உறுமினான் கருணா!
ஜான் அப்போது

===================================================================
விபரீத விளையாட்டு - 13

CBCID - Special task Force என்ற எழுதப்பட்ட கதவு ஒன்றை திறந்து கொண்டு ஒரு காவலர் நுழைந்தார். அது ஒரு பெரிய கூடம், அதின் வலது பக்க தில் நிறைய உள் அறைகள் இருந்தன. RAVI.I. IPS என்று எழுதப்பட்ட கதவினை இரு முறை லேசாக தட்டினான் காவலன், "உள்ள வாங்க" என்ற உத்தரவு கேட்டதும் மரியாதையாக  சென்று  வணக்கம் போட்டான் கான்ஸ்டபில்.
சார் உங்களுக்கு இந்த பார்ஸல் வந்திருக்கு, இத வாங்கிகிட்டு கமிச்சினர் அறைக்கு வர சொல்லி உத்தரவு. என்று பணிவாக சொன்னான்.
ரவி விரைவாக அந்த பார்சலை பிரித்தான். சில பக்க கடிதங்களும் நான்கு dvd க்களும் அதனுள் இருக்க கண்டான். சில பக்கங்களை நிமிடத்தில் படித்து முடித்துவிட்டான்! அவன் புருவங்கள் நெறித்தன!அதனை கவரில் திணித்து விட்டு, அதனை ஏந்தியபடி கமிஷனர் அறைக்கு  சென்று நின்றான்.
வாங்க ரவி உக்காருங்க.
இருக்கட்டும் சார். நான் என்ன செய்யணும்.
ரவி! உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கும்னு நினைக்கிறேன். 
ஆமாம் சார் இது தான் அது.
இருக்கட்டும் எனக்கும் அது போல ஒரு பார்சல் வந்திருக்கு, அதிலே ஒரு கடிதம் வந்திருக்கு படிசீங்களா ? 
கொஞ்சம் படிச்சேன் சார். இன்ஸ்பெக்டர் கருணா மேல யாரோ மொட்ட பெட்டிசன் கொடுத்திருக்காங்க.
Brilliant! அது மொட்ட பெடிஷன் இருந்தாலும் அதுல இருக்கிற தகவல்கள் ரொம்ப முக்கியமானது. சமீபத்திலே நடந்த சில IT பொண்ணுங்களோட கொலை விவரங்கள் கூட அதிலே இருக்கு.
பார்த்தேன் சார். 
இந்த புத்திசாலி தனதுகாக தான் உங்க கிட்ட இந்த கேசை கொடுக்கிறேன். நமக்கு நேரம் ரொம்ப குறைவு. அவரை கண்காணிச்சு இன்னும் 48 மணி நேரதுக்குள்ள இந்த கேசை பத்தின விவரங்கள் என் மேசைக்கு வந்துடனும் . உங்களுக்கு யார் இல்ல என்ன தேவையோ உடனே எடுத்துகோங்க! நீங்க போகலாம். இந்த ஆசாமி சொல்லி இருக்கிறதை பார்த்த மேலும் கொஞ்ச பொண்ணுங்களை கடத்தி பட்டு கொலை செய்ய போறாங்க ன்னு தெரியுது.இது சட்டம் ஒழுங்கு பிரச்னை. நீங்க சீக்கிரமா உங்க வேலையை ஆரம்பிக்கணும்.குட் லக்!

அடுத்த 3 மணி நேராத்தில் ரவியின் குழு, கருணாவின் குற்ற செயல்களை துருவி அதனை ஆதாரங்களையும் கோர்த்து விட்டது. ரவிக்கு இது பேர் அதிர்சியானாலும் அடுத்து நடக்க போவது பள்ளி மாணவிகளின் கடத்தல் என்று உஷார் நிலையில் இருந்தான். அவன் கழுகு பார்வை கருணாவின் மீது விழுந்தது. போலீஸ் இலக்கவின் அதி ரகசிய துறைகள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டன. 
---------------------------------------
ஜான்! ஷே க்கு நாளை மறுநாள்  மதியம் துபாய் பிலேணுல வந்துடுவான். அவன் இந்த தடவையும், பொண்ணோட தான் போகணும். ஒரு இடத்திலே பேசி வெச்சாச்சு. அந்த பொண்ணு இவனை அவங்க மத வழக்க படி கலியாணம் பண்ணிக்கணும் அடுத்த நாள் ராத்திரி அவன் திருட்டு விசாவிலே அவளை கூட்டிகிட்டு போயிடுவான். 
சரியான பிளான் தலைவா! நான் அவளை என்கூட மகாபலி புரம் கூட்டிகிட்டு வர போறேன் அங்க வெச்சி அவல முடிச்சிடலாம்.
ஜான் சந்தோஷமாக இருந்தான். செந்தில் அவனுக்கு துபாய் ஷே க்கு நம்பரை எப்படியோ தேடி கண்டு பிடித்து தந்து விட்டான்.எப்படியோ பணத்தையும் சிங்கப்பூர் விசாவையும் தயாரித்தும் விட்டன ஜான். இனி கருணாவை நம்பி பயன் இல்லை.அதனால் கண்காத இடத்திற்கு போய் விட வேண்டும் என்று முடிவு கட்டினான். செந்திலை இதில் எப்படி மாட்டி விட போகிறோம் என்று எண்ணி கொண்டிருந்தான் 
ஜான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். 
எனக்கு முதலில உன் கிட்ட தான் பேசணும். நீ ஏன் இப்படி ஒரு பெரிய உதவி பண்ணுற!ஆனா நீ என்கூட சிங்கபுருக்கு வர மாட்டேன் நு சொல்லிட்ட இங்க என்ன பண்ண போற நீ!
பரவா  இல்ல இத்தனை நாளா  நீ எனக்கு பண்ணினது போதும். நான் எங்க அம்மா கிட்ட போறேன். இங்க ஒரு சின்ன திராம் பண்ணி விட்டுட்டு கருணாவை மட்ட வெச்சிடுவோம். அவன கம்பி என்ன வெச்சிடுவோம். அப்புறம் எனக்கு நிம்மதி. கண்மணி யை நினைச்ச பாவமா இருக்கு .
திருந்த மாட்ட! இன்னமும் அந்த கண்மணி யை நினைச்சு எங்குரியா?நீ என்ன அவளை லவ் பண்ணுறியா என்ன?
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. இனி அவ ஒழுங்க இருக்க போறதில்லை வருத்தமா தான் இருக்கு ஆனாலும் என்ன செய்யறது? 
உனக்கு ஒத்தாசையா இந்த ஒரு முறை உன் திட்டத்தோட சேர்ந்து நான் வேலை செய்யலாம்னு நினைக்கிறேன்!
நல்ல பய்யன்! சீக்கிரம் முன்னுக்கு வந்திடுவ!
சரி நீ கருணாவை பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.
என்ன சொல்லுற? நான் கருணா கிட்ட நான் குடிச்சபோ உளரினத்தை சொல்லிட்டேன். அவன் முதலிலே என்னை திட்டினான். அப்புறம் உன்ன பாக்க சம்மதிச்சிட்டான்.நீ போய் நம்மோட அடுத்த கட்ட திட்டம் என்னனு தெரிஞ்சிக்கிட்டு வந்திடு! அவன் ஸ்டேஷன் தெரியுமில்ல?
தானாக வந்த வாய்ப்பை நினைத்து செந்தில் உள்ளூர மகிழ்ந்தான். 
மவனே இனிக்கி செத்த டா!
==============================================================
விபரீத விளையாட்டு -14

ரத்த சிவப்பு வண்ண பெயிண்ட் மிளிர, மர பெஞ்சுகள் அதன் மீது சோர்வடைந்த பயம் கலந்த முகங்களுடன் பலர் அமர்ந்திருக்க, மேசைகள் நிறைய காகித கட்டுக்கள்,  காக்கி தொப்பிகளும் கதர் சட்டைகளும் நிறைந்திருக்க சில இடங்களில் முனகல் சத்தங்களும். போன் பேச்சுக்களும் கேட்க அன்று காவல் நிலையம் பரபரத்து கொண்டு இருந்தது. வழக்கமான பான் மசாலா வாயுடன் கட்டை பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தான் கருணா. பொருளை பரி கொடுதோர், பொருளை திருடினவர் என்றும் , கூட்டம் நிரம்பி வழிந்தது. 
செந்தில் மெதுவாக அதனுள் சென்று ரைட்டரிடம் ஒரு காகிதத்தை தந்து கருணாவிடம் கொடுக்க சொன்னான்.
கருணா தகவலை பார்த்ததும் சிரித்தான். அவனை பின் பக்கம் வண்டி கோடௌனுக்கு வர சொல்லுயா என்று பதில் தகவல் வந்தது. 
செந்தில் கொஞ்ச நேரம் காத்திருப்புக்கு பின். வாய்யா அறிவாளி நாயே என்று ஓங்கி அடி வைத்தான். செந்தில் மரியாதையுடன் நடிப்பதை போல பாசாங்கு செய்தான்.
எப்படி இருக்க? ஜான் சொன்னான் பய புள்ள எல்லா விவரத்தையும் சொல்லிபுட்டன் இல்ல?அப்புறம்? உனக்கு என்னோட விவரம் எல்லாம் தெரிஞ்சு போயிருக்கும்.
ஆமாம் சார்! சாரி தல! எனக்கு அல்லாம் தெரிஞ்சு போச்சு!
எவ்வளவு தெரிஞ்சது?
ஜான் சொன்ன வரைக்கும்.
புத்திசாலிதான்! சரி வேற என்ன தெரியும்?
ஜானுக்கு என்னையும் மீறி விஷயம் தெரியுமன்னு தெரிஞ்சிகிட்டேன்.
என்ன? என்ன? ஜானா? என்னே சொன்னான் அவன்?
உங்க விவரம் விவகாரம், சொத்து சூனியம், எல்லாம் அவனுக்கு தெரியும். 
ச்சே! எப்படி, எப்படி தெரியும்? அவன் என்னோட செல்ல நாய் என் விஷயத்துல  மூக்கை நுழைக்க மாட்டான்!என்னை பத்தி எந்த விவரங்களும் கிடைக்காது.
அவன் எவ்வளவு பெரிய வேலைக்காரன் தெரியுமா?
பாவம் நீங்க! சில சமயம் வீட்டுகாரனையும் நாய் கடிச்சி வெச்சிட்டு ஓடி போகும் இல்லையா?
ஜான் ஒரு நாளும் அப்படி நினைக்க மட்டம்! என்ன போட்டு வாங்குறியா? என்று இளித்தான்.

வேலி தாண்டுற ஒரு வெள்ளாட்டை வேச்சிகிட்டு, விவகாரம் எல்லாத்தையும் அங்கேயே ஒளிச்சி வெச்சிருகீங்க! இன்னமும் அவன் ரகசியங்களை பத்திரமா தான் வெச்சிருக்கான்.ஷேக்கு கிட்ட விக்கல.  
நீ என்ன உளரற்ற?உனக்கு எப்படி தெரியும்.
நானா உளர்றேன்? இருக்கட்டும். முதல்ல உங்க கீப்பு சாந்திகிட்ட கிட்ட அவன் ஜொள்ளு விட்டதை கேளுங்க அப்புறம் புரியும்"  என்று அவன் கை பேசியில் ஒரு உரையாடலை பேச விட்டன. அந்த உரையாடல் அவன் அன்று ஜான் போல சாந்திக்கு குரல் மாற்றி பேசியதன் பதிவு எதற்கும் இருக்கட்டுமே என்று பின் பாதி பதிவினை சுருக்கமாக ஓட விட்டான்.

கருணாவின் கரிய முகம் வெறுப்பால் மேலும் விகாரமானது.அவன் கண்கள் கனல் கக்கின!
என்ன சொன்னிங்க எவ்வளோ பெரிய வேலைகரன்னு தானே ?இப்போ புரியுதா எவ்வளவு பெரிய வேலைக்கரன்னு? 

அப்போ அந்த SMS அனுப்பினது இந்த---பய தானா?கருணாவின் மிருக மூளை சுலபத்தில் நடந்தவைகளை கணித்தது.

என்ன புரியலையா. சரி இன்னைக்கு உங்க சின்ன வீட்டுக்கு போகிற நாள் இல்லை, இருந்தாலும் ஒரு தீடீர் விசிட்டு போயிட்டு வாங்க. அப்போ ஜான் அங்க இருக்கிறது தெரியும். என்றான்.
என்ன? அவன் சாந்தி வீட்டுல இருக்கானா?
சரி ஒரு நிமிஷம் நீங்க கூப்பிட்டு அவனை எங்க இருக்கான்னு கேளுங்க?
கருணா எண்ணை தட்டினான்
பதில் வரவில்லை.
ஒரு நிமிஷம்.
செந்தில் அவன் செல்லை கொண்டு செந்திலை அழைத்தான். சொல்லி வைத்தாற்போல் ஜான் எடுத்தான்.
மச்சான் எங்க இருக்க!
ஏய் நான் அவ வீட்டுல இருக்கேன்னு தெரியுமில்ல?
எவ வீட்டுல டா!
அதுதான் சொன்னேனே சாந்தி வீட்டுல!
சரி சரி ! என்று செந்தில் இணைப்பை துண்டித்து விட்டு கருணாவை ஏளனமாக ஏறிட்டான்.
கருணாவின் ரத்தம் கொப்பளித்தது. பற்களை நர நர என கடித்து கொண்டான். 
பரதேசி பய புள்ள! கடைசீயில எனக்கே ஆப்பு அடிச்சிட்டானே!
இன்னும் முடியல தல! உங்க ஸ்டேஷன் ரிப்போர்ட் பைல் எஸ் பி  ஆபீஸ் போகும் இல்ல?  அதிலே 15 வது கேஸ் லிஸ்டுல உங்கள பத்தி ஒரு மொட்டை கடிதாசி இன்னைக்கி போகுது. போய் இப்போவே சோதனை போடுங்க என்றான்.

ஓட்டமும் நடையுமாக பின் வாசல் வழியாக கருணா ஸ்டேஷன் உள் நுழைந்தான். தெய்வாதீனமாக கமிஷனர் ஆபீஸ் பைல் அனுப்ப பட தயாராக இருந்தன. செந்தில் தஅங்கு வருவதற்கு முன்னர் தயாராக ஒரு மொட்டை கடிதத்தினை வைத்திருந்தான். அந்த பைல் களில் ஒன்றுக்குள் அந்த  மொட்டை கடுதாசியினை இணைத்த்து விட்டான்! கருணா வேண்டுமென்றே கண்டுபிடிப்பதற்காக அதன் இடத்தை அவனுக்கு சொன்னான். அந்த திட்டம் நன்றாக வேலை செய்தது.

என்ன கிடைச்சிதா? நம்ப மாட்டேன்கன்னு தான் உங்கள அலைய வெச்சென் சாரி பாஸ்!
இது எப்படி? ஜான் செய்த வேலையா இது?அவனுக்கு இவ்வளவு துணிச்சல் ஏது? 
அமாம்!உங்க வீட்டுக்கு உங்களுக்கே தெரியாம போய் உங்க சம்சாரத்தையே  கவுத்துட்டான் அவன்.உங்க விவகாரங்களெல்லாம் சுத்தமா துடைச்சு எடுத்திட்டான்! அது மட்டுமா! உங்க விவராம் எல்லாம் அவன் பாக்கேடுகுள்ள! ஷே க்கையும் கைக்குள்ள போட்டுக்கிட்டான்இதனையும் செஞ்சவனுக்கு இது பெரிய பிரமாதமா? நீங்க புத்திசாலியா இருந்தா அவுங்க மொபைல் நோண்டி இருப்பீங்க!
ஜான் சிங்கபூருக்கு செல்வதால் சாந்தியை நம்ப வைக்கும் பொருட்டு ஒரு குருந்தகவலை அவள் செல்லுக்கு அனுப்பி இருந்தான். அதுவும் செந்தில் கூற்றுக்கு சுருதி கூட்டியது.

அப்போ திருட்டு தனமா என் வீட்டுக்கு வந்து என் கம்பியுடரை காலி பண்ணினது இந்த அயோக்கியனா? என்று உள்ளுக்குள் பொருமினான் கருணா.

செந்தில் இப்போது கருணாவின் மூளையை தெளிவாக குழப்பினான்!

"நல்லா கேட்டுகோங்க தல! ஜான் இப்போ உங்களோட இருக்க விருப்ப படவில்லை. அவன் அந்த துளுக்கன் கூட பேரம் பேசிட்டான். அவன் வெளி நாட்டுக்கு பறக்க போறான்.என்னையும் ஏமாத்திட்டான். அவனுக்கு மட்டும் விசா உஷார் பணிக்கிட்டான்.

உங்களை பத்தி இல்லாததும் பொல்லாததும் எழுதி உங்க போலிஸ் ரிகார்டுல அதை சொருகி விட்டிருக்கான். இது நேர எஸ் பி  டேபிளுக்கு தான் போகும்னு அவனுக்கு தெரியும். உங்களை உள்ள தூக்கி வெச்சிட்ட பணம் எல்லாம் அவன் எடுத்துகிட்டு உங்க பொண்டாட்டிய தள்ளிகிட்டு வெளி நாட்டுல செட்டில் ஆகிடலாம் என்கிறது தான் அவன் பிளான்.
கருணாவின் சந்தேகம் அவனை ஆட்கொள்ள தொடங்கியது. அவனுக்கு உண்மை பொய் எது என்று இப்பொழுது புரியவில்லை. ஜானின் மீது அவன் சந்தேகம் உறுதியானது.

இந்த ஸ்கூல் பொண்ணு கடத்தல் திட்டம் கூட உங்கள மாட்டி விடத்தான். நீங்க மைனர் பொண்ண விபச்சாரம் பண்ணினதா கேசு வந்தா உங்க கதை அவ்வளவுதான் அப்புறம் அவன் கை ஓங்கிடும். இப்போ புரியுதா அவன் திட்டம்?
இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? எதுக்காக இப்போ எனக்கு சொல்லுற?

என்ன புரியாம பேசுறீங்க?அவன் மட்டும் நம்மளை மாட்டி விட்டுட்டு எஸ் ஆகிடுவான் நாம மட்டும் இங்க கம்பி எண்ணனுமா?அதனால தான் இப்போ உங்களுக்கு சொல்லுறேன். 
இந்த தகவல் எல்லாம் என் உயிரை பணையம் வெச்சு உங்களுக்கு சொல்லுறேன்.  என்ன இருந்தாலும் நீங்க என்னை காப்பதுற முதலாளி, உங்களுக்கு துரோகம் செய்யுறவன் எனக்கும் துரோகி தான். இனி நான் உங்களை சந்திக்க வர மாட்டேன். அவன என்ன செய்யணுமோ அதை செஞ்சிகொங்க!" என்று நல்லவன் போல கூறி முடித்தான்.
செந்தில் நில்லுடா!வா என் கூட! கருணாவின் ஜீப் செந்திலை ஏற்றி கொண்டு அவன் வீட்டிற்கு பறந்தது.
கொஞ்ச நேரம் வெளியில் மருந்து இருந்த ஜீப்பில் கருணா நாக பாம்பு போல சீரிகொண்டிருந்தான்.
அதோ பாருங்க என்று ஜன்னலை கட்டினான் செந்தில் சாந்தியுடன் விளையாடிகொண்டிருந்த ஜான் அதில் தெளிவாக தெரிந்தான்.
செந்தில் நக்கலாக சிறிது விட்டு ஜீப்பிலிருந்து இறங்கினான். பாஸ் இனி உங்க பாடு அவன் பாடு! நான் வரேன் என்று சொல்லி விட்டு சென்றுவிட்டான்.

கருணா இப்போது கொலை வெறியுடன் இருந்தான்.முதலில் செந்தில் கூறியது பொய் என்று நினைத்து தான் பெண்சாதியை வேவு பார்க்க செல்ல முற்பட்டான்.ரகசியமாக கண்காணித்த கருணா அதனை உறுதி செய்து கொண்டுவிட்டான்!
கடைசியில என் மடியில கை வெச்சிட்டியா? என்று கருணா ஒரு புட்டி மதுவை முழுவதும் கவிழ்த்துகொண்டான்! அவன் போதை அவனை வெறிகொள்ள செய்தது.

========================================================================

விபாரீத விளையாட்டு - 15

கருணா இயற்கையிலேயே கிரிமினல் புத்தி கொண்டவன் ஆனாலும் அவன் துணைவி கெட்டு போனதை எண்ணி மூளை குழம்பினான். பீச் மணலில் தன ஜீப்பினை நிறுத்தி விட்டு சிகரெட்டு புகையை ஊத்தி கொண்டிருந்தான். எதிர்காற்றில் அவன் விட்ட புகை அவன் முகத்தை தாக்கி அவன் கண்களில் பட்டது. சட்டெனெ கண்கலில் சிகரெட்டு தீ பொறி பட்டது அவன் மனதில் அந்த பொறி பட்டது போல துடித்து கலங்கினான்!

சாந்தி இனி இல்லை!தனக்கு துரோகம் செய்தவளின் கதை முடிந்து 8 மணி நேரம் ஆனது.திடீரென கருணாவின் வருகையை எதிர்பார்க்காத சாந்தி அப்போது தான் ஜான் வந்துவிட்டு போன சந்தோஷத்தினால் திக்கு முக்காடி  போயிருந்தாள்.ஜான் அவனுடைய வீட்டிலிருந்து வெளியே வந்ததை ஜான் கண்காணித்து கொண்டு இருந்தான்! செந்தில் சொன்னதெல்லாம் உண்மை! துரோகி!சாந்தி தன்னை வஞ்சித்து விட்டதை எண்ணி புழுங்கினான்.வஞ்சம் கொண்ட கருணா அவளின் பேரில் சந்தேகம் இல்லாதது போல நடித்து ஆவலுடன் கடைசி முறையாக சந்தோஷமாக இருந்தான்.

பலர் உண்ட பண்டம் தனக்கு எச்சில் என்று புதியதாக நினைத்து கொண்டான். அவன் வாழ்க்கையில் எவ்வளவோ கேவலமான எச்சில்களை சுமந்தவன் ஆனால் அவனுடைய விருந்து என்று வரும் போது உரிமை இருக்குமே! அவள் இனி இந்த உலகத்திலேயே இருக்க கூடாது.நட்சத்திர இரவு விடுதியில் வேசி தொழில் செய்தவள் தானே! அவளை கூட்டி கொண்டு இருந்தது தன் தவறு! இப்படி மோசம் போனதும் இல்லாமல் தன் இரகசியங்களை எவனக்கோ நேர்ந்து விட்டு விட்டாளே!இதற்க்கு மேலும் அவள் உயிரோடு விட்டு வைக்கவா? சாந்திக்கு தந்திரமாக பாலில் விஷம் கொடுத்து கொல்லப்பட்டு விட்டாள். தூக்கதிலேயே அவள் ஆவி பிரிந்து விட்டது.

இனி ஜானின் கதையை எப்படி முடிப்பது என்று எண்ணி கொண்டு கருணா யோசனை செய்தான்.

மறுநாள் கருணா ஜானுக்கு தொடர்பு கொண்டு கண்மணியை தன்னிடம்
கடத்தி கொண்டு வருமாறு கட்டளை இட்டான். ஜானுக்கு இது புரியாத புதிராக இருந்தது. அவனுடைய திட்டம் வெளியாகி போனதோ என்று பயந்தான்.

செந்தில் எனக்கு என்னவோ கருணா என் திட்டத்தை மோப்பம் பிடிச்சிடானோ ன்னு பயமா இருக்கு.
எதுக்கு ஜான் கவலை படுற? அவனுக்கு தெரிஞ்சு போகறதுக்குள்ள நீ தப்பிச்சிடலாம் இல்லையா? முந்தாநாள் பார்த்தபோ கூட அவன் நம் திட்டத்தை தெரிஞ்சிகிட்டாமாதிரி எனக்கு தெரியல்ல. 
இனிக்கி துபாய் ஷே க்கு போன பன்னனுனான். அவன் அடுத்த வாரம் தான் வருவேன்னு சொன்னான்.நான் அவன் கூட கண்மனிய அழைசிகிட்டு கேரளா போயிறலாம். அங்க அவன் உதைக்கிர உதையில ஒன்னு அவ சாகனும் இல்லன வழிக்கு வரணும். அப்புறம் நான் அவனோட சிங்கபூருக்கு போய் என்னோட வேலைய ஆரம்பிச்சிடுவேன். எப்படியும் அவ வாழ்க்கை மண்ணா போகணும்!
அவ கதைய முடிச்சுடலாம் அது பிரச்னை இல்ல!ஆனா கருணா ஒரு போலீஸ் காரன் அவன்  இருக்கிற வரைக்கும் நம்ம ரெண்டு பேராலயும் வாழ முடியாது. 
ஆமாம் எப்படியாவது போலீஸ் நாய் மோப்பம் பிடிச்சிடும்
அதுக்கு என்ன வழி?
அதுக்கு ஒரே வழி அவனை ஒழிச்சி கட்டுறது தான்.
என்ன சொல்லுற ஜான்?
ஆமாம் செந்தில் அவனுக்கு நான் ஒரு பெரிய வேட்டு வைக்க போறேன்.
இன்னையோட அவனோட கதை முடியபோகுது.
செந்தில் புன்னகைத்தான். கருணா அல்லது இவன் அல்லது ரெண்டு கொடியவர்களுக்குள் கலகம் மூண்டு விட்டது, திரி பற்றி கொண்டு எரிகிறது இனி தீபாவளிதான் என்று நினைத்தான்.
அக்கா உன்ன நாசம் பண்ணவங்கள நான் பழி வாங்க போறேன்! நீ இல்லயே அத பார்க்க!
இவர்களின் திட்டம் இவ்வாறு இருக்க, கருணாவின் மூளையில் ஒரு கொடிய திட்டம் உருவானது. அரபியனுக்கு கண்மணியை விற்று விட்டு ஜானை கொன்றுவிட வேண்டும் என்ற திட்டத்துடன் ஜானுக்கு போன் செய்தான்.

"ஜான் இணைக்கு என்ன செய்ய போறோம் ன்னா ..."
===================================================================
கண்மணி மிகுந்த உற்சாகத்தில் இருந்தாள். இன்று ஜான் அவளை கலியாணம் செய்து கொள்வதாக வாக்களித்து விட்டான். ஆயிரம் முத்தங்களினால் அவளின் காதினை குளிர்வித்தான் ஜான். 

கண்மணி இந்த சந்தோஷத்த கொண்டாட ஒரு பார்டி வெக்க போறேன். நீயும் நானும் மட்டும் தான் இதுல இருப்போம். எப்படியாவது திருவான்மியூர் வந்துடு.மதியம் நாம மகாபலிபுரம் போறோம். எமாத்திடாத!

கண்மணிக்கு எப்படி வெளி கிளம்புவது என்று தெரியவில்லை.அன்று தான் அவள் சித்தி மகள் கவிதா ஊரிலிருந்து வந்திருந்தாள். அம்மாவை ஏமாற்றுவது சுலபம். அக்காவும் தடை சொல்ல மாட்டாள்.சித்தி மகளானாலும்  கவிதா இவளின் திட்டத்தை அறிந்தவள் ஏற்கனவே அறிந்தவள். அப்பாவை எப்படி ஏமாற்றுவது, வர வர அவர் சந்தேகம் தீவிரம் அடைந்து எங்கே போனாலும் 1008 கேள்விகள் கேட்டபிறகு இல்லை என்று சொல்லி விடுவர். நல்லவேளையாக இவள் வசதிக்காக ஊருக்கு வந்து இறங்கினார்  போல அமைந்தது கவிதாவின் வரவு . இருவரும் ஸ்கூல் நண்பிகளின் வீட்டிற்கு போவதாக சொல்லி விட்டு கம்பி நீட்டினர்.
================
ஜானின் தகவல் செந்திலை கவலை அடைய செய்தது. கண்மணியை கண்காணிக்க ஆரம்பித்தான்.தூரத்தில் இருந்து நோட்டம் விட்டு கொண்டிருந்த செந்திலுக்கு பகீர் என்றது.கண்மணியுடன் வேறு ஒரு பெண்ணும் சேர்ந்து கொண்டு செல்வதனை பார்த்தான். கண்மணி மட்டும் போனால் எப்படியாவது காபாற்றி  விடலாம் என்று எண்ணி இருந்தவனுக்கு  இத் புது சிக்கலை  ஏற்படுத்தியது. கண்மணி துணையுடன் வருவதாக ஜானுடன் தகவல் அளித்தான்.

கண்மணி என்ன சொல்லுற? உன்ன தனியா தான வர சொன்னேன்? 
என்ன பண்ணுறது ஜான் ?நான் வெளிலே முன்ன மாதிரி வர முடியாது. அத நால தான் சித்தி பொண்ணயும்  கூட்டிகிட்டு வந்தேன்.
இரண்டு பலி ஆடுகள் மாட்டினால் இலாபம் என்று எண்ணி இருந்தான் ஜான்.
சரி வந்து தொலையட்டும். ஆனா இனிக்கி உன்னோட பரிசு முக்கியம்."
" சீ! போ " என்று அசடு வழிந்தாள் கண்மணி.
===================================================================

விபரீத விளையாட்டு - 16

செந்தில் தேள் கொட்டியது போல் தவித்தான். என்ன செய்வது? என்று குழம்பியவனுக்கு ஒரு திட்டம் தோன்றியது. ஹலோ போலீசா! கவனமா கேட்டுகோங்க! ஈ சி ஆர் ரோடுல ஸ்கூல் பொண்ணுங்க வெச்சி இனிக்கி போதை மருந்து கடத்துறாங்க! பெரிய அளவில நடக்கிற கடத்தல் இது, போலி தகவல் இல்லை! என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்துவிட்டான்.

எப்படியாவது இது வேலை செய்யும் என்று நம்பினான்.கடவுளை வேண்டினான்!
=====================
ரவி கருணாவின் மனைவியை இறந்தது பற்றியும் அவள் மர்மமான முறையில் இறந்தது பற்றியும் தகவல் கிடைத்தது.கருணா லஞ்சம், கொலை கொள்ளை, பெண்கள் கடத்தலில் கை தேர்ந்தவன் என்று ஆதாரம் கிடைத்து விட்டது. பல கொலைகளுக்கு முடிச்சு அவிழ்க்க பட்டது. ஜானையும் அவனையும்  கையும் களவுமாக பிடித்து விட்டால் மேலும் பல குற்றங்கள் தடுக்க தக்க சாட்சியாக இருக்கும் என்று காத்துகொண்டிருந்தான். குழந்தைகள், பள்ளி மாணவிகள் சிறு பெண்கள் பற்றி ஏதேனும் சந்தேகத்தின் பேரில் புகார்கள் வந்தால் உடனே அவனுக்கு தகவல் கொடுக்கும் படி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது. இன்று காலையில் குழந்தைகளை வைத்து  பழைய மாமல்லபுரம் சாலையில் போதை மருந்து கடத்தல் என ஒரு அனாமதேய தகவல் வந்துள்ளது என்று அறிந்தவுடன் அவன் மூளையை கசக்கினான்
.
இரண்டு சிகெரேட்டுகள் முழுமையாக கரைந்து போயின. அவர் சகாக்கள் ஆளுக்கு ஒரு கருத்து சொல்ல ஆரம்பித்தனர். எதற்கும் முடிவு வரமுடியவில்லை.

இது எதோ கடத்தல் சமாசாரம் மாதிரி தெரியல்ல சார். இந்த மாதிரி நெறைய போன் கால் வந்து போய்கிட்டு தான் இருக்கும்.கடைசியில சுத்த பொய்யா இருக்கும் வெட்டி வேலை சார் இது.

இல்ல ரவி சார் இது மாதிரி பல கால்ஸ் வெச்சி நாம குத்தவாளிங்கள பிடிசிருக்கோம்!

இத் தனை நாளா இந்த மாதிரி கால் வந்திருக்கா ?

இல்ல சார் இது தான் முதல் முறை.

ஒருவேளை கடத்தல் நடக்கிறது தெரியாம இருந்துருக்கும்.

ஏன் கடத்தல் நடக்க கூடாதுன்னு கூட இருக்கும் இல்ல?

என்ன சொன்னிங்க? Exactly! சூபர் பாலு! எனகென்னவோ இது கருணாவோட பிளான தெரிஞ்சிக்கிட்டு நமக்கு ஆதாரங்கள் குடுத்த அதே ஆள் தான் இந்த போனையும் பண்ணி இருக்கணும்னு எனக்கு தோணுது.யாரோ அவனோட பிளான தெரிஞ்சிக்கிட்டு அத தடுக்க தான் தகவல் சொல்லி இருகாங்க. 
எதுக்காக இருக்கும்?

எதுக்க்காகவாவது இருக்கும் ஒரு வேளை அவன் ஆளா கூட இருக்கலாம்.

இதை வேசிகிட்டு நாம எப்படி சார் தேடுறது?

சரி அந்த குரியர் வந்த அட்ரச கண்டுபிடிசிங்களா ?

சார் அது பெரம்பூர் லேருந்து  அனுப்பி இருக்கு.

அப்போ தகவல் சொன்னவங்க அந்த பக்க ஆளா இருக்கலாம்.

பிரகாஷ் நீங்க பொய் அந்த கொரியர் ஆபீசுலேருந்து ஏதாவது தகவல் கிடைக்குமான்னு விசாரிங்க.

சரி கருணா விசாரிச்சு நடந்த கேசுகள் பத்தி விசாரிக்க சொன்னேனே ஏதாவது வித்தியாசமான கேசு இருக்கா?

இருக்கு சார். ஒரு புது மாதிரி  கேசு. ஒருத்தன் கேறேடிட் கார்டு திருடி மட்டிகிறான். அவனை அடிச்சி துவைக்கிராறு கருணா. ஆனால் அவனை காப்பாத்தி கம்ப்ளைண்டு குடுதவனே அவனை தன சிநேகிதன்னு சொல்லி கொட்டிகிட்டு போய்ட்டான்.

இதுல என்ன வித்தியாசம்?

சார் அவங்க மூணு பெரும் அடிக்கடி சந்திச்சிகிரானுங்க. இந்த மாதிரி கேசு பல தடவை வந்திருக்கு. கருணா அந்த முதல் ஆள் அப்புறம் இந்த மாதிரி சில பேர் அடிக்கடி சந்திச்சி எதோ திட்டம் போடுறாங்க. இப்படி மடிகிரவங்க எதுக்கு அடிக்கடி சந்திசிக்கணும் பேசிக்கணும்? அதுவும் அந்த மூணாவது ஆள் ரொம்ப வரதில்லே, மாறிகிட்டே இருக்கநிங்க.

ஆனா ரெண்டாவது ஆள் பேரு ஜான் என்கிற கண்ணன் அவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில இருந்தபோ இதே கருணா தான் ஜெயிலர் அவரு தான்  அவன் மேல நல்லெண்ண அடிப்படை ரெகார்டு குடுத்து அவன தண்டனையிலேருந்து சீக்கிரம் விடுவிசிருக்கரு. கிட்ட தட்ட அவன எடுத்து வளர்க்கிராறு ன்னு தான் சொல்லணும் !

புதுசா இருக்கு!

ஆமாம் சார்! இப்போ இருக்கிற அந்த 3 வது பய்யன் பேரு செந்தில் அவனும் இவன் கூட தான் சுத்திகிட்டு இருக்கிற மாதிரி கேள்வி.

இந்த கருணா ஜானுக்கு நிறைய பணம் கொடுக்கிராறு. இவனே ரெண்டு சார்  பைக்கு வெச்சிருக்கான். பல செல் நம்பர் வேற
ரொம்ப சுவாரசியமா இருக்கு. அப்போ இவனுங்க ரெண்டு பெரும் ஒரு புது ஆழ வெச்சி அவனை கேசு எழுதி ஒரு அடிமை குற்றவாளி மாதிரி ஆகி தன்னோட வேலைகளை செஞ்சுகிரங்கள?

ஆமாம் சார் அதுமட்டும் இல்ல ட்ரைனிங் கொடுத்து அது சரி வரேல்லென்ன அவங்களை க்லோசே பண்ணிடுவாங்க.

என்ன?

ஆமாம் சார்.இதை போல ரெண்டு பெர கருணா என்குண்டரிலே போட்டனே நினைவிருக்கா ?

அப்போது தான் ரவிக்கு பொறி தட்டியது.
கருணா வேலை பார்க்கும் பல ஸ்டேசன் பகுதிகளில் அதிகமாக திருட்டு ஏற்படுவதும் அவன் இட மாற்றல் பெறுவதும் பின் இரு முறை அவன் மேல் பெரும் பழி வந்தபோது சில குற்றாவ்ளிகளை சுட்டு வீழ்த்தியதும் அதன் மூலம் அவன் மேல் இருந்த களங்கம் துடைக்க பட்டதன் முழு முடிச்சும் இப்போதுதான் அவிழ்ந்தது.
நான் உடனே கமிச்சனரை பார்க்கணும். என்று கூறி விட்டு விரைவில் புலி போல விரைந்து வந்தார் ரவி .

Something tells me !கருணா இப்போ மூணு கொலை பண்ண போறான்! அவனோட நடவடிக்கைகளை உடனே கண்காணிக்கணும். கமிசனர் உத்தரவு கொடுத்துட்டாரு!We are close to hit the Target boys! ஆயுத காவலர்களை ரெடியா இருக்க சொல்லுங்க!கருணாவுக்கு பீட்லேருந்து ஆடர் கொடுத்து அவனை மகாபலிபுரம் ஏரியா செக் போஸ்டுல நிற்க சொல்லுங்க! அவனா மாட்டிக்குவான்!

========================================================================

எனக்கு பயமா இருக்கு கண்மணி!
ஏன் என்ன பயம் உனக்கு? 
கண்மணி நீ ரொம்ப ஜாஸ்தியா போற! ஜான் யாரு?அவன பத்தி முழுசா கூட தெரியாது உனக்கு, எந்த தைரியத்துல அவனை நம்பி இப்போ கிளம்புற?

ஜானை பத்தி எனக்கு நல்லா தெரியும், அப்பா எப்போதும் போல கொவிசிகுவாறு, ஆனா எனக்கு கிடைக்கிற பெரிய இடம் எனக்கு ரொம்ப வசதி. நான் அனுபவிக்க நினைகிரதேல்லாம் அனுபவிக்கலாம் என் ஜான் அதுக்கு துணையா இருப்பான்.
ரொம்ப கோட்டை கட்டுற.அவன் படத்தை பார்த்தேன், பார்க்க கொஞ்சம் சந்தேகமா தான் இருக்கு.ஆளு நல்லவன் மாதிரி தெரியல!
சும்மா வாய மூடுடி வயிற்று எரிச்சல் வண்டி!
லூசு மாதிரி பேசாதடி  இது வயித்த்தேரிச்சலா? நல்லது சொன்ன உனக்கு மண்டையில இப்போ ஏறாது!
இந்தா! போதும், திருவான்மியூர் வந்திருச்சு.நீயும் என் கூட வர்றியா இல்லையா?
இல்ல இல்ல நான் மறுபடியும் வீட்டுக்கு போறேன். நீயே அவனை வெச்சிக்கோ! ஆனா ஒன்னு ரொம்ப ஒட்டாத உஷாரா நடந்துக்கோ! அவ்ளோதான்!
கண்மணி தனித்து விடபட்டாள் பயம் ஒரு பக்கம் காதல் ஒரு பக்கம் அவளை பந்து போல விளையாடியது. ஜான் நம்பிக்கைக்குரியவனா? அவனின் சரித்திரம் முழுவதும் தெரியாது. காதல் ஒரு நொடியில் வரும் என்று வசனம் பேசியவன். இன்றுடன் மூன்று வாரங்கள் ஆகி இருக்கிறது. அதற்குள் கலியாணம் பற்றி ஏன் பேச வேண்டும்?இன்னும் எனக்கே அந்த வயது ஆகவில்லையே. என்று குழம்பினான்!
கோவமா இருக்கியா டார்லிங்? என்று ஒரு குரல் அதை தொடர்ந்து அவள் இடுப்பை இரு கரங்கள் பின்னாலிருந்து வளைத்து.
புழு ஊறுவது போல மயிர் சிலிர்த்தது.
சீ! நீதான? என்ன ஜான் எவ்ளோ நேரம் நிக்கிறது? மூஞ்சிய பாரு?
உன்னோட முகத்தை விட கொஞ்சம் சுமார் தான்.நான் இங்க தான் இருந்தேன்.
இங்கய இருந்த பின்ன என் வந்து தொலையல?

ரொம்ப யோசிசிகிட்டு இருந்தியா? இந்த முகம் பாக்குறதுக்கு அழகா இருந்தது அதனாதான் கொஞ்ச நேரம் ரசிசிகிட்டு இருந்தேன். 
நீயும் உன் ரசனையும் எனக்கு நெருப்புல நிக்கிறது போல இருக்கு.
ஐயோ என் செல்லத்துக்கு கோவம் வருது பாருடா! சரி சரி வண்டியில ஏறு பேசிக்கலாம்.ஆமா உன் தங்கை எங்க?
அவ போற லூசு போன வரைக்கும் சந்தோசம் தான். 
எனக்கு துக்கம். 
என்ன?
இல்ல இல்ல! விளையாட்டுக்கு சொன்னேன்!என்று வண்டியை ஒரு திருகு திருகினான்!அது விதியை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தது.
========================================================================









Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...