Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி.

இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர்.

கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான்.

ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி.

எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை.

விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான்.

"அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான்.

"என்ன மச்சி நீயே இப்டி சொல்லிட்டே! நான் பண்ணது தப்பா?"

"பின்ன? யாரா இருந்தாலும் அவங்க மனசு பூண்படும் படி பேசுறது தப்பு தான் அது decency கிடையாது போய் சாரி கேளு!"என்றான்.

ஒரு வாரம் ஓடிற்று. பிரியாவும் ஹரியும் மௌனம் காதத்னர்.

மற்றொரு நாள் ஹரி அவளிடம் சென்றான்.

"பிரியா.." என்றான்.

"சொல்லுங்க ஹரி ஸார். என்ன வேணும்? என்று மிரட்சியுடன் நோக்கினாள் அவள்.

"என்கூட இனிக்கி மத்தியானம் சாப்பிட வரீங்களா?" என்றான்.

"என்ன ஹரி திடீர்னு கேக்குறீங்க? சரி வர்றேன்." என்று கேள்விக்குறி புன்னகையுடன் விடை அளித்தாள் பிரியா.

அன்று சாப்பிடும் அறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஏதும் இல்லை என்றாலும் தண்ணீர் குடிக்கும் சாக்கிலும் காப்பி பிடிக்கும் சாக்கிலும்,அடுத்த மேசையில் சாப்பிடும் சாக்கிலும் பலரும் ஹரியும் பிரியாவும் சேர்ந்து சாப்பிடும் காட்சியினை கண்டு அதிசயித்தனர்.

வாய் இருந்தது அப்போது சாப்பிட மட்டுமே என்று சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் இருவரும்.

முதலில் மௌனம் கலைத்தது ஹரி தான்.

"என்ன..மன்னிச்சிடு..பிரியா உன்கிட்ட அன்னிக்கி கடுமையா நடந்துகிட்டேன்.சாரி! நீ..வா.. போ..ன்னு ஸொல்லலாம்ல?"

"பரவால்ல ஹரி ஸார். எதுக்கு இப்போ நீங்க திடீர்னு மன்னிப்பெல்லாம்?"

"ப்ளீஸ் என்ன இனிமே ஹரின்னு பேர் சொல்லியே கூப்பிடலாமே!" என்று ஹரி மறுமொழி கூறினான்.

"நீங்க ஓகே சொன்னா அப்டியே கூப்பிடுறேன் ஹரி;-)!" என்று பட்டென பதில் அளித்தாள் பிரியா.

"சரி சந்தோஷம். பட் வேலை செய்யும் போது வேண்டாம்.பார்க்கிறவங்க ஏதாச்சும் சொல்லுவாங்க."

"ஹ்ம் அப்டியே தங்கள் உத்தரவு."

"நல்லா பேசுற, நல்ல வாயும் ஆடுற ..."

"ஒரு உண்மைய சொல்லணும்னா நான் வேணும்னே இத்தனை நாள் உன்ன திட்டல்ல..
ஆனா வேலை ன்னு வந்துசின்னா நான் அதுல தான் ரொம்ப ஆழமா போய்டுறேன். என்ன பண்றது?"

"எனக்கு தெரியும் ஹரி ஸார் சாரி :-) ஹரி நீங்க work tensionல நெறைய பண்றீங்க அதுனால என் activities உங்களுக்கு பிரச்னையா இருந்தது வாஸ்தவம் தான் என்னயும் மன்னிக்கணும்."

"இருந்தாலும் நான் கொஞ்சம் அதிகாமவே பேசி சாரி திட்டி இருக்கேன்.."

"அய்யோ அது என் நல்லத்துக்காக தானே ..."

"சரி சரி இனிமே நாம ஃப்ரண்ட்ஸ் ஆக வே இருப்போம் என்ன சொல்ற ஹரி?"

இன்ப அதிர்ச்சிக்கு அவ்வளவாகவே பழக்கபடாதவன் ஹரி. எனினும் சுதாரித்துக் கொண்டான்.
நெடுநேரம் போனது கூட தெரியாமல் உணவு உண்டனர் இருவரும்.
சிரிப்பும் ரசிப்பும் கலந்து அன்று நீண்ட மதிய உணவாக போனது அவர்கள் இருவருக்கும்
---------------------------------

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
Kamini_Yogini 7 காமினி_யோகினி 7 எஸ் பி ஸ்வாமிநாதன் கொஞ்சம் ஆடித்தான் போனார். அடேயப்பா! என்னய்யா இது? இந்த ஆசிரமன்தான் இவங்க எட் ஆபிஸா? என்றார் ஆச்சரியம் தாளாமல் இல்ல சார்! இது இவங்களோட தமிழ்நாடு பிராஞ்சு ஆபீஸ் சார் .எட் ஆபீஸ் மைசூரில் இருக்குது சார். என்றாள் கங்கா ஓ அப்படியா! இந்த பிள்டிங்கே  கோடி கணக்கிலே மதிப்பிற்கும் போல இருக்குதே இதுவே மாளிகை போல இருக்குதுன்னா அப்போ அங்கேனே? சொர்க்கம் போல இருக்கும் சார்  அதோ அங்க பாருங்க! என்று கங்கா சுட்டி காட்டிய திசையில் படிய வாரிய தலை, கொஞ்சம் மாநிறம். நரைத்த திருத்தப்பட்ட மீசை தாடி. அகலமான நெற்றியில் குங்கும பொட்டு.  இளம் சிவப்பு நிற வெட்டி அதில் வெள்ளை பச்சை நீல கரை கதர் சட்டை வைர மோதிரம் பிரேஸிலேட் மின்ன வேட்டை நாய் போல கத்தி கொண்டிருந்த சேகரமூர்த்தி தென்பட்டார். பல பேர் அங்கு பளிங்கு தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதில் பலரும் வட நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் என்று அவர்கள் முகத்தை பார்த்த உடனே தெரிந்து கொண்டனர் போலீசார். பலர் பெரிய ரோஜா தோட்டத்தினை செப்பனிட்டு கொண்டிருந்தனர். வானளா...