Skip to main content
Kamini_Yogini 7

காமினி_யோகினி 7

எஸ் பி ஸ்வாமிநாதன் கொஞ்சம் ஆடித்தான் போனார்.

அடேயப்பா! என்னய்யா இது? இந்த ஆசிரமன்தான் இவங்க எட் ஆபிஸா? என்றார் ஆச்சரியம் தாளாமல்

இல்ல சார்! இது இவங்களோட தமிழ்நாடு பிராஞ்சு ஆபீஸ் சார் .எட் ஆபீஸ் மைசூரில் இருக்குது சார். என்றாள் கங்கா

ஓ அப்படியா! இந்த பிள்டிங்கே  கோடி கணக்கிலே மதிப்பிற்கும் போல இருக்குதே இதுவே மாளிகை போல இருக்குதுன்னா அப்போ அங்கேனே?

சொர்க்கம் போல இருக்கும் சார்  அதோ அங்க பாருங்க!
என்று கங்கா சுட்டி காட்டிய திசையில் படிய வாரிய தலை, கொஞ்சம் மாநிறம். நரைத்த திருத்தப்பட்ட மீசை தாடி. அகலமான நெற்றியில் குங்கும பொட்டு.  இளம் சிவப்பு நிற வெட்டி அதில் வெள்ளை பச்சை நீல கரை கதர் சட்டை வைர மோதிரம் பிரேஸிலேட் மின்ன வேட்டை நாய் போல கத்தி கொண்டிருந்த சேகரமூர்த்தி தென்பட்டார். பல பேர் அங்கு பளிங்கு தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதில் பலரும் வட நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் என்று அவர்கள் முகத்தை பார்த்த உடனே தெரிந்து கொண்டனர் போலீசார்.
பலர் பெரிய ரோஜா தோட்டத்தினை செப்பனிட்டு கொண்டிருந்தனர். வானளாவ  நிரப்பி பெரும் மலைகளை போல நின்று கொண்டிருந்த பல தினுசில் கட்டிடங்கள் நெடுக கொண்டிருந்தன. அவர்களை மலைக்க வைத்தது. சிமெண்ட்டு லாரிகள் தம் வேலை முடித்து கொண்டு சாரி சாரியாக நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்றன. வர்ணம் பூசுபவர்கள் இளம் சிவப்பு நிறத்தில் அந்த பெரிய தியான மண்டபத்திற்கு வர்ணம் பூசி கொண்டிருந்தனர். பலரும் வாக்கி-டாக்கி வைத்து கொண்டு பல வேலைகளில் ஈடுபடுவதை பார்த்தால் பிரமிப்பாக இருந்தது. பார்க்கும் இடங்களில் எல்லாம் தங்க ரேக்குகள் பொருத்தப்பட்டு விதானங்கள், ஜன்னல்கள், சோலார் பேனல் வைத்த மண்டபங்கள், ஒரு பெரிய குளம், அதன் சுற்றி பெரிதாக ஒரு செயற்கை நீர் வீழ்ச்சி பலம் என்று பல நூறு ஏக்கரில் பறந்து விரிந்து கொண்டிருந்தது அந்த ஆசிரமம்.

நாம நினைச்சதை விட இந்த இடம் பெரிய கைகளுக்கு சொந்தம் ன்னு நினைக்கிறேன் அம்மா சார் வடக்கில் இருக்கிற ஒரு பெரிய தேசிய கட்சி தலைவரு இவங்களுக்கு சீடராம் அவங்கதான் இந்த ம கா க  கட்சியோட கூட்டணி அதனால தான் சேகர மூர்த்த்திக்கு இங்கே இடம்.

புரியுது ஆனா இந்தாளு பொண்ணை காணோம் இவன் அதை பத்தி எதுவுமே தெரியாத மாதிரி இங்கே வந்து முறை வாசல் வெச்சிக்கிட்டு இருக்கானே இது தான் ரொம்ப குழம்புது.

குழம்பினால் தேநீர் பருகுவீர் சார்!

அட நீ வேற மா நேரம் கேட்ட நேரத்துல எதுகை மோனை என்று சொல்லிக்கொண்டே இருக்க ஜீப் சேகர மூர்த்தி அண்டை வந்து நின்றது.

ஸ்வாமிநாதன் இறங்கி கொண்டே வணக்கம் சார்! என்று ஒரு முறை சல்யூட்டு வைத்தார்.

அட ஸ்வாமிநாதன் எங்க இவ்வளவு தூரம்? என்று ஏறிட்டு பார்க்காமல் வேலை சொல்லி கொண்டே கேட்டார் எஸ் கே மூர்த்தி. என்ற சேகர மூர்த்தி.

என்ன சார் இப்படி கேட்டு டீங்க உங்க பொண்ணோட பிணத்தை அடையாளம் காட்ட கூட நீங்க வரலை. விசாரணையை பண்ணலாம் ந நீங்க இங்க மேஸ்திரி மாதிரி
யோவ் சாமிநாத!  யாரய்யா இந்த பொம்பள யார் கிட்டே என்ன பேசுது என்று எரிந்து விழுந்தார் அவர்.
உடனே ஸ்வாமிநாதன்  சாரி சார் இந்த அம்மா நேரம் காலம் தெரியாம உளருது புது போஸ்டிங் பாருங்க
யோவ் சிவா! நீங்க ரெண்டு பெரும் பொய் செக்யூரிட்டி பெருமீட்டர் செக் பண்ணிக்கோங்க என்று லேசாய் கண்ணடித்து கங்காவிற்கும் சமிஞை கொடுத்துவிட்டு அனுப்பினார்.
சார் இப்போதான் எஸ் பி ஆர்டர் வந்தது. ஸ்வாமிஜி ஹோமம் பண்ண இன்னமும் பத்து நாளிலே வாராருனு தகவல் வந்தது. அதனால என்னை இஞ்சார்சா போட்டு செக்யூரிட்டி கொடுக்க சொல்லி உத்தரவு. நான் இங்கே யாரு ஆசிரம இன்ச்சார்ஜ்வ் அவங்களை சந்திச்சு பேசிட்டே போதும் மத்ததெல்லாம் ப்ரொசீஜர் படி நடத்திக்குவோம் என்று போலியான பயத்துடன் பேசினார்.
பரவால்ல நானே யோகினி ஸ்டெல்லா ஜி கிட்டே உன்னை அறிமுக படுத்தி வெக்கிறேன் என்று அழைத்து போனார். ஸ்வாமிநாதன் தன் கழுகு பார்வையினை சுழல விட்டு கொண்டே அவரை தொடர்ந்தார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தீக்ஷண்ய ஸ்வாமிஜி அன்று இருந்ததை போல என்றும் இருந்ததில்லை.
அவருக்குள் ஒரு பரபரப்பு. பெரும் சாம்ராஜ்ஜியத்தினை அடைய துடிக்கும் ஒரு வேலைக்காரியின் கனவு எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவர் எண்ணம். டெமி இன்னமும் சற்று நேரத்தில் வந்ததும் அவரின் சொத்து மதிப்பு கூடிவிடும் அதை விட ஒரு பெரிய என்னை வயலுக்கே சொந்தமானால் பல கோடி தங்க சுரங்கத்தினை அடையும் பேறல்லவா! இதெல்லாம் தன்  ஒருவனால் மட்டுமே சாத்தியம் என்று நினைக்கும் போதே அவருக்கு பெருமை பொங்கிற்று.
ஒரு அழகிய மங்கை மத்தாப்பு புன்னகையுடன் சார்! டெமி இஸ் ஆன் தி லைன் என்று அலை பேசியை நீட்டினாள்!
மறுமுனையிலிருந்து சாமி நாம் ஜெயித்து விட்டோம்!  உற்சுலா கார் கம்பெனி காரங்க நம்மளை  பார்ட்னர் ஆக்க ஒத்துக்கிட்டாங்க. இப்போ நாம கொடுத்த முதல் மூலம் அவங்க நம்மளோட பார்ட்னர் ஆகிட்டாங்க. அவங்க கம்பெனி ராயல்டியும் நமக்கு பங்கு கொடுக்க சம்மதிச்சிட்டாங்க! அடுத்த வருஷம் இந்தியாவிலே நம்மளோட மாயா பவர் இண்டஸ்ட்ரீஸ்  கூட அவங்க கார் பேட்டரி தயாரிப்பு பண்ண சம்மதிச்சிட்டாங்க. இன்னமும் 1100 கோடி முதல் போட்ட அவங்க கம்பெனி இந்தியாவிலேயே நிறுவனம் ஒப்பந்தம் போட்டு தயாரிப்பு செய்ய ஆரம்பிச்சிடும். அதில் வரும்  ஏற்றுமதியில் நாம சம்பாதிக்க போகிறது எவ்வளவு தெரியுமா மாசம் 500 கோடி! இது மத்த கம்பெனி க்கு கூட கிடைக்காது அதிர்ஷ்ட்டம் இனிமே கூரைக்கு மேல பணம் கொட்ட போகுது அடுத்த வருஷம் முதல் நமக்கு கூரையை பிச்சிகிட்டு கொட்டப்போகுது எல்லாம் உங்க ஆசிர்வாதம் என்று ஆங்கிலத்தில் மழை பொழிவது போல பொழிந்து தள்ளினான் அந்த வெள்ளை காரன் டேமி.
தீக்ஷண்ய ஸ்வாமி அனைத்தையும் அந்த பெண் மூலம் மொழி பெயர்ப்பு செய்து கொண்டார். அவள் சொல்ல சொல்ல என்னவோ எட்சிணி அருள் வாக்கு சொல்வது போலவே அவர் மனம் ஆனந்த கூத்தாடியது. ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் சாமர்த்தியமாக அவர் நடித்தார்.

எல்லாம் அந்த யோக மாயாவின் கிருபை நண்பனே! நீ இந்த ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டு வா அனைத்தையும் முறை படுத்தி அடுத்த கட்ட முதலீட்டிற்கு நாம் அடிகோலுவும் என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்த்தார். அப்போது சூரஸ்வாமிவந்திருப்பதாக தகவல் வரவே அவனை உள்ளே அனுமதிக்க சொன்னார்.

சூரஸ்வாமி ஒரு வடக்கிந்தியன் ஆஜானுபாகுவாக இருந்த அவன் தெலுங்கு பட அடியாள் போல தோன்றினான். இறுக்கமான முகம் வலுவான புஜங்கள் கண்களில் ஒரே கொடூரமாக தோன்றிய அவனை அருகில் வரவழைத்தார்.

சூரா சொன்னது நினைவிருக்கிறதா? இருக்கிறது சுவாமி பலிக்கான பசுக்கள்  தயார். அவைகள் என்னுடன் பயணிக்கும். அங்கு நான் பூஜைக்கு வேண்டிய அனைத்தையும் தயார் பண்ண மூர்த்தியிடம் சொல்லி விட்டேன்.,

அவனுக்கு இதில் சம்மதமா? அவன் ரத்தம் சிந்த ஒத்துக்கொள்வானா அவனுக்கு இந்த செய்தி தெரிவதற்கு வாய்ப்பில்லை தெரிந்திருந்தாலும்  அவன் நமக்காக தியாகம் செய்ய தயாராய் இருக்க வேண்டும்  ஸ்வாமிஜி.
நல்லது. இல்லை என்றால் அவனை தியாகம் செய்ய வேண்டியதுதான்! என்று தன மணிக்கட்டை இறுக்கினான். அவசரப்படாதே அவனை நீக்கும் பொறுப்பு நமக்கில்லை மேலும் அவன் நமக்கு அவன் தேவை. இந்த பணியை செவ்வனே நடத்திவிட்டு இதனால் உனக்கு தக்க வெகுமானம் உண்டு ஆகவே பொறுப்புடன் இரு மேலும் உனக்கு ஒரு முக்கிய பொறுப்பு இருக்கிறது.
தெரியும் உங்கள் ஸ்நேகித துரோகியை தீர்த்து கட்டுவது தானே
ஆமாம் சமயம் பார்த்துக்கொண்டிரு உன் தேடுதல் தொடர்ந்துகொண்டே இருக்கட்டும் சரி இப்போது உனக்கு கொடுத்த பயிற்சியை என் முன்னே காட்டு  பார்க்கலாம் என்றார்.
உடனே அங்கு சம்மணம் இட்டு அமர்ந்தான் சூர சுவாமி. மெளனமாக ஜபிக்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரத்தில் அவன் கட்டை போல கிடந்ததும் சுவாமி அவனை நோக்கி
சூரா சொல் இப்போது நான் சொல்லும் இடத்திற்கு செல் என்றார். அவன் உதடுகள் அசையவில்லை ஆனால் அவன் குரல் தெளிவில்லாமல் கேட்டது சொல்லுங்கள் ஸ்வாமி.
நேரே நம் புதிய ஆசிரமத்திற்கு செல்.
சென்று விட்டேன் சுவாமி
அங்கு யார் இருக்கிறார்கள் அங்கு என்ன நடக்கிறது
அங்கு இப்போது எல்லா பணிகளும் முடிந்தன. புதிய ஆசிரமம் மிக அழகாய் இருக்கிறது.
மூர்த்தி எங்கே? வேறு யார் எல்லாம் இருக்கின்றனர்
நிறைய புதிய ஆட்கள் வேலை செய்வோர் காவலர்கள் இப்போது பந்தோபஸ்த்தில் இருக்கிறார்கள்
மூர்த்தி எங்கே?
அவன் வீட்டிற்கு செல்ல காரில் ஏறுகிறான்.
ஸ்டெல்லா எங்கே?
அவள் அறையில் இருக்கிறாள் செல்லவா சுவாமி
செல் அவள் என்ன செயகிறாள் என்று பார்
ஜபம் செய்து கொண்டிருக்கிறாள் சுவாமி
எதை வைத்து என்ன தேவதை ?
தேவதை இல்லை ஒரு யந்திரத்தினை வைத்து
இப்போது அந்த அறைக்கு யாரோ வருகின்றார்கள்
யார் யார் அது.
என்னால் பார்க்க முடியவில்லை ஸ்வாமி ஐயோ உடம்பெல்லாம் எரிகிறது.

சரி சரி நிறுத்து உன் தியானத்தை கலைத்து விட்டு வெளியே வா!
உடனே நெருப்பிலிருந்து துள்ளி எழுவது போல அவன் எழுந்தான்.
யாரை பார்த்தாய்? ஏன் இப்படி நடுங்குகிறாய்? சொல்லி தோலை!

தெரியவேயில்லை ஸ்வாமி அவன் உடல் முழுவதும் கொள்ளி கட்டை போல எரிந்து கொண்டிருந்தது என்னை திரும்பி உற்று பார்த்ததும் எனக்கு தீ பிடித்த மாதிரி இருக்கிறது.
அந்த உருவத்தினை ஸ்டெல்லா பார்த்து விட்டாளா?
இல்லை அவள் பார்க்கும் முன்னரே அது என்னை கண்டு கொண்டு விட்டது, ஐயோ கண்கள் நிஜம் கொல்லிகளை போல இருந்தது. உடம்பு எரிகிறது.
அதனால் அவனை கண்டு பிடிக்க முடியவில்லை என்றான்.
சரி சரி உனக்கு பயிற்சி போதவில்லை அதனால் பரவாயில்லை மேலும் நன்றாக பழகு. இந்த திவ்ய நேத்ர பயிற்சி உனக்கு சகல விதத்திலும்  கை கொடுக்கும். ஸ்டெல்லா யாரை பார்க்க முயன்றாள்  என்று தெரியவில்லை அவள் மேல் இப்போது சந்தேகம் உண்டாகிறது. நீ அவளை இனி கங்காணி. ஒத்துவராத பட்சத்தில்..
ஸ்வாமி அவள் தங்கள் மகள்
மகள்.. எனக்கு ஏதடா  சொந்தம்,இனிமேல் தான் சேர்க்க வேண்டும் அவள் ஸ்சம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் ஆட்டு தலை நமக்கு உணவாக வேண்டும் என்றால் ஆடுகளை அறுக்க தயக்கம் கூடாது.

புரிந்தது ஸ்வாமி நான் பார்த்து கொள்கிறேன் என்று வெளிப்பட்டான் சூரசுவாமி.

அப்போது மணி பன்னிரண்டை காட்டவே தீக்ஷண்ய ஸ்வாமி கதவை தாளிட்டு கொண்டு தியான அறைக்கு சென்று விட்டார்.
---------------------------------------------

ஸ்வாமிநாதன் இரவு ரோந்து முடித்து விட்டு அப்போதுதான் வந்தார். புதிதாக கட்டப்பட்ட அவர் வீட்டில் நுழைந்தார். தன் பெற்றோர் படங்களை ஏறிட்டு பார்த்தார். உன்னை கட்டிக்க எந்த சிறுக்கி வருவாளோ நான் பார்ப்பேனோ என்று கடைசீயில் தன அம்மா சொல்லிய வார்த்தைகள் நினைவிற்கு வந்தது. அவர் அம்மாவின் நச்சரிப்பிற்கு இசைந்து கட்டிய ஒரு சிறு வீடு அவர் ஆஸ்தி இப்போது இது மட்டுமே கடைசியில் தன அன்னையை பிரித்து விட்டு இவரை மட்டும் தனியே வைத்துவிட்டு விதி வேடிக்கை பண்ணியது. பெருமூச்சுடன் தன்  செல்  பேசியை சார்ஜில் வைத்து விட்டு குளித்தார் பின்னல் இருந்து யாரோ அவரை நோட்டமிடுவது போல இருந்தது. பாத்ரூமில் இருந்து எட்டி பார்த்தார் யாரும் தென்படவில்லை. குளித்து முடித்த்தும் சுவாமி அறைக்கு சென்றார். அங்கு ஒரு சீட்டு இருந்தது.வித்தியாசமான வாசனை உள்ள அந்த சீட்டு பனை ஓலையில் இருந்தது
உன் பணி  இன்னும் வேகமெடுக்கும், சம்பந்தன்  ஒருவன் மூலம் உண்மை வெளியாகும். கொடுமுனியும் சூரனை வதை பட  சேகரன் வருவான் கங்கை கொள்ள தயாராகு ஸ்வாமிநாதா  என்று எழுதி இருந்த அந்த சீட்டினை திரும்ப திரும்ப படித்தார்.
அப்போது சார்ஜில் இருந்த செல் பேசி சிணுங்கியது. எடுத்து பேசினார் கமிசனர் ராமதுரை
ஸ்வாமிநாதன் உடனே நீங்க சென்னை டீ ஜீ  பி  ஆபிசுக்கு வந்து ரிப்போர்ட் பண்ணுங்க அவசரம்! துன்று சொல்லி விட்டு பதில் எதிர்பார்க்காமல் தொடர்பை துண்டித்து விட்டார்!
==================================================================
கேப்  ட்ரைவர் கந்தன் தூங்கி கொண்டே வண்டியை எடுத்தான். என்ன ஸார் சென்னைக்கு திடுதிப்புன்னு போறீங்க?
ஆமாம்யா நாளை காலைக்கு  நான் டீ ஜீ பி ஆபீசில் இருக்கணும் சீக்கிரம் என்று அவருடைய லகேஜை டிக்கியில் திணித்து கொண்டே முன் சீட்டிற்கு விரைந்தார்
அழைப்பு மணி ஒலித்தது. எதிர் முனையில் சிவகிரி
சார் ஃ பாரென்சிகிலேருந்து இப்போதான் ஒரு ரிப்போர்ட்டு கிடைச்சிருக்கு. அந்த 4 பொண்ணுங்க பிரேத பரிசோதனை ரிப்போர்ட் டி என் ஏ ரிப்போர்டு எல்லாமே டில்லியிலிருந்து வந்திடுச்சு சார்!
சொல்லுய்யா குடும்பத்தோட எந்த ரத்த மாதிரியும் அந்த பிணங்களோட ஒத்து போகல அதான?
சிவகிரி அதிர்ந்து போனது அவன் குரலில் தொனித்தது.
அதையும் தவிர ...
தவிர? என்ன  சொல்லு
அந்த விபத்துல எரிஞ்சு டெட் படி எல்லாமே ஏற்கனவே செத்து போனவங்க ளாம் சார்.
தெரியுமய்யா விவரம் நான் சொல்றேன்
எல்லாரும் 10 வயசு பையன்க, எல்லாரும் பெல்கமில் ஒரு கவர்மண்டு ஆஸ்பத்திரியிலிருந்து ஏற்கனேவே காணாம போனவங்க. பிணம் எல்லாம்  பத்து நாளைக்கு முன்னாலே தான் காணாமல் போச்சு.
சார்! என்ன சார் உங்களுக்கு ஏற்கனவே இந்த மேட்டர் வந்திருச்சா?
இரு இரு நான் என்ன சொன்னேன்?
என்ன சார் இப்போது தானே சொன்னீங்க.
என்னது?
அது எதுவுமே பொண்ணுங்க பிணம் கிடையாது ஆன்  பிணங்கள்.
ஆமாம் அதுக்கு மேலயும் இன்னொரு தகவல் வந்திருக்கு நான் இப்போ சென்னைக்கு போய்கிட்டு இருக்கேன் எஸ் பி, கமிசனர் எல்லாரும் போறோம் . விஷயம் ரொம்ப ஹாட்!
ஓகே சார்!
ஸ்வாமிநாதன் தீடீரென்று ஒரு வித மயக்கத்தை  அடைந்தார்.
எனக்கு இது எதுவுமே தெரியலை ஓரே குழப்பமாக இருக்கே. என் தலைகுலிருந்து எது விஷயங்கள் சொல்லுதே.
அவருக்கு தலை வலி மண்டையை பிளந்தது 
 நாளைக்கு பேப்பர் பாரு இன்னொரு விஷயம் வர போகுது. என்று சொன்னார். அப்போது அவருக்கு பின்னால் ஒரு வித அதிசய மணம் என்னவென்றே சொல்ல தெரியாத ஒரு மணம் பரவியது.
திரும்பி பார்த்தார் அங்கே பின்சீட்டில் ஒரு மகான் சம்மணம் இட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்.
 -----------------------------------------------------------------------------------------------------------------
நான் சொன்னேனா என்ன சொன்னேன்.
சொன்னது நான்தான் ஸ்வாமிநாதா என்ற குரல் ஒலித்தது.
அதிர்ச்சசியில் யாரு என்று குளறியபடியே கந்தா கந்தா என்று கத்தினார், கத்தினார் தவிர குரல் சத்தம் வரவில்லை. கந்தான் எதுவமே நடக்காதது போல வண்டியை ஓட்டி கொண்டே இருந்தான் .
என்ன ஸ்வாமிநாதா! எப்படி இருக்கே! என்று வாயே திறக்காமல் பேசினார் அந்த மகான்.
ஆச்சரியத்தில்  எதுவும் புரியவில்லை அவருக்கு
நீங்க யாரு? மேலும் ஆச்சரியம் அவர் பார்த்து கொண்டிருந்தார் தவிர  காரோ எந்த சலனமும் இன்றி பொய் கொண்டிருந்தது.. டிரைவரும் எந்த சலனமும் இன்றி காரை செலுத்தி கொண்டிருந்தான்.
தன்னாலேயே நம்ப முடியவில்லை.நடப்பது கனவை இல்லை மாயா ஜாலமா?
நல்ல இருக்கேன்னு சொல்லாம நீ யாரு ன்னு கேக்குறியே? என்னய்ய நீ?
நான் இப்போ வரைக்கும் நல்ல தான் இருக்கேன்
தயவு செய்து இது என்ன கண் கட்டு வித்தை ன்னு சொல்லுங்க?
கண் கட்டி விட்ட வித்தை தான் இது! இல்லூயூஷன் ன்னு வென வெச்சிக்கோ!என்று கடகடவென சிரித்தார்.
நீங்கி யாரு
நான் ஒரு பரதேசி யப்பா! ஏதோ என்னை நம்பி சில பேரு  இருக்காங்க அவங்களுக்கு  நல்லது நடக்கணும்ன்னு நினைக்கிற ஒரு சாதாரண பிச்சைக்காரன்!
அய்யா இங்கே எதுக்கு வந்தீங்க!அதுவும் ஓடுற காரில் எப்படி?
அதுவா உன்கிட்டே சில தகவல் சொல்லணும். உன் மூலமா சில உயிர்கள் பிழைக்கணும் உன்னையும் காப்பாத்தணும் அவ்வளவுதான்.அதுக்கு இந்த ஓடுற கார் பறக்கிற பிளேன் எதுவும் தடையில்லே எனக்கு.
என்ன என்ன காப்பாத்த போறீங்களா என்று ஒரு வித எள்ளல், அதை ஸ்வாமி கண்டுபிடித்து விட்டதன் பொருளில் இருந்த சிரிப்பு
அப்படின்னா எதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியதுதானே
நீ யாரு? கூர்க்காவா? என்று கலீரென்று சிரித்தார்.
சுற்றி பார்த்தான் கந்தன் பாட்டு கேட்டுக்கொண்டு எதுவுமே நடக்காததுபோல வண்டி ஓட்டி கொண்டிருந்தான்.
சரி என்னை நீ நம்பலை. உன் பக்கத்திலே இருக்கானே அவனை தொட்டு பார். என்றார்.
உடனே அவரை தொடப்போனார்  ஸ்வாமிநாதன். அவர் உடல் சில்லிட்டத்து. அவருடைய கை அந்த டிரைவரின் தோளில்  பட்டது ஆனால் எதோ  புகை போல இவருடைய கை அவனின் உடலில் கரைந்து போனது.
பதட்டம் கொண்டார் ஸ்வாமிநாதன்.
பயப்படாதே ஸ்வாமிநாதா நீயும் நானும் இவனும் நிஜம் தான். ஆனால் இப்போ நான் பண்ணிக்கிட்டு இருக்கிறது ஸொப்பனத்தில் நடக்கும் வித்தை.இதெல்லாம் லகிமா தூர ,ஸ்ரெவனம்  தூர தரிசனம் போன்ற சித்துக்கள்
நீ இப்போ தூக்க நிலையில் இருக்கிறே  அதனால நான் உன் உள் மனத்துடன் பேசிக்கிட்டு இருக்கோம். அப்போ இந்த ட்ரைவர்?
அவனுக்கு இது எதுவுமே தெரியாது. விட்டு தள்ளு. உன்கிட்டே அந்த விஷயதை சொல்லிட்டேன்னா எனக்கு நிம்மதி.
நீ தேடிகிட்டு இருக்கிற கொலைகள் ஒரு மாய்மாலம். ஒரு பெரிய இடத்து மனுஷன் தன்னால பெறமுடியாத ஒரு அல்ப விஷயத்துக்காக சில பெரிய இடத்து பெண்களை பலி கொடுக்க தயார் பண்ண பட்ட நாடகம்.
தெரியும் அந்த நாலு பொண்ணுங்க தான். ஆனா அந்த பொண்ணு இப்போ எங்க இருக்க ன்னு தேறியல்ல
அதை தான் சொல்ல வந்தேன். நீ இன்னைக்கு போக போற இடத்துக்கு ஒருத்தன் வருவான் அவன் என்னை பத்தி அடையாளங்கள் சொல்வான் அவன் சொல்லுறதை அப்படியே செய்தால் நீ அந்த பெண்களை காப்பாத்தலாம் அதோட உனக்கு இதிலே ஒரு பெரிய உண்மை விளங்கும். பல புதிர்கள் விடை பெரும். ஜாக்கிரதை உனக்கு உயிருக்கே அபாயம் காத்துகிட்டு இருக்கு. இன்னமும் உனக்கு ஒரு வாரம் தான் பாக்கி இருக்கு அதுக்குள்ளே என் சிஷ்யன் ஒத்துழைப்போட நீ அந்த பெண்களை கண்டு பிடிச்சாகனும். அப்படி இல்லேன்னா நடக்க கூடாத ஒரு பெரிய பிரளயமே வந்திடும். நினைப்பிருக்கட்டும். இதை வெச்சிக்கோ என்று ஒரு கைவளையத்தை கொடுத்தார். அதில் நம சிவாய என்று எழுதியிருந்தது.
சார் சார்! என்ன சார் ரொம்ப நாள் தூங்கலியோ! எழுந்திரிங்க! என்று கந்தன் எழுப்பினான்.
என்னய்யா என்னாச்சு!
விடிஞ்சு போச்சு சார்! நாம சென்னை டி ஜீ பீ ஆபீசுக்கே வந்தாச்சு சார்!
நானா நான் எப்போ தூங்கினேன்? என்னாச்சு?
நீங்களா? நீங்க உங்க இன்ஸ்பெக்டர் கிட்டே பேசிட்டு தூங்கினவர்தான் அப்புறம் எழுந்திருக்கவே இல்லையே!   நான் எவ்வளவு நேரம் கூப்பிடுறேன் என்னவெல்லாமோ உளறுனீங்களே! காமினி கொலை எழுநாளுன்னு! சரிதான் நீங்க டி ஜீ பீ ஆபீசுக்குத்தான் போகணும்ன்னு சொன்னீங்க அதை வெச்சுகிட்டு நேரே இங்கேயே வந்துட்டேன்.
சரி நல்ல வேலை தான் பண்ணே!
அடேடே! இதை எப்போ மாட்டிக்கிடீங்க? என்று அவர் கையை  பார்த்தான்
சுவாமிநாதனுக்கு அப்போதுதான் தான் கண்டதெல்லாம் கனவில்லையென்று  தெரிந்தது.
தன கையை பார்த்தவருக்கு அதிர்ச்சி! அவர் வலக்கையில் நம சிவாய என்று போட்டு ஒரு வெள்ளி கைகாப்பு மின்னியது.
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டெல்லாவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சசி காத்து கொண்டிருந்தது.
சம்பத் போல இருந்தவன் அவளை எச்சரிக்கை செய்தது போலவே அமலாக்க துறையினரின் கடிதமும் எதோ ஒரு பெரிய ரெய்டு வரப்போவதின் அறிகுறிகளும் ஆசிரம வட்டத்திற்கு சேகரமூர்த்தி  மூலம் கசிந்து விட்டது. ஆயினும் ஸ்டெல்லா கணக்கில் புலி ஆகையால் கணக்கு வழக்குகளின் பேரில் எந்த குற்றமும் ஆசிரமத்தை வந்து சேராது. ஆனால் சமீபத்தில் ஒரு செய்தி அவளை கலக்கியது. ஆசிரமத்தில் சில காலமாக தந்திர யோகிகள் இருப்பத்தற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அதில் சிலர் சவ சாதனம் செயகின்றனர் என்றும் கேள்விப்பட்டாள்.
சவ சாதனம் என்பது சாதாரணமாக செய்யப்படுவதில்லை.அதனை செய்ய  அறிய சாதனங்களும் பல யோகா சித்திகளும் தேவை.முக்கியமாக  தினமும் அன்று இறந்த உடல்கள் அதற்க்கு தேவைப்படும். அதில் பெண்களின் உடல் மிகவும் அறியது. அப்படி இறந்தவர்களுக்கு மீது அமர்ந்தது அம்பிகை உபாசனை செய்யப்பட வேண்டும். அவைகளுக்கு சவங்கள் ஏற்படு செய்யப்பட வேண்டும் அதன் மூலம் ஒரு மண்டலம் கொடிய தியானம் மந்திர உச்சாடனமும் செய்ய வேண்டும் யாரும் செய்ய முடியாத யோக  சாதனத்தினை செய்யவேண்டும். என்று அனைத்தையும் அவள் அறிந்திருந்தாள்.
ஆனால் இத்தகைய சாதனங்களை நம் ஆசிரமம் செய்வதென்றால் அதற்க்கு ஏற்படுகள் யார் செயகின்றனர்? அதனை போலீஸ் எப்படி தெரிந்து கொண்டது? சவங்கள் எவையும் அரசாங்க பிணவறையிலோ  அல்லது மருத்துவமனை களிலிருந்துதான் கிடைக்கும. ஒன்று இல்லையென்றா சுடுகாடுகளில் தான் செய்ய வேண்டும்  அல்லது? கேள்விக்கு அடுத்து விடை தெரியவில்லை.
சூரசுவாமி அங்கு வந்ததில் இருந்து அவளுக்கு நிம்மதி தொலைந்தது. அவனை இதற்க்கு முன் எங்கோ பார்த்திருந்த ஞாபகம். முன்னமே அவள் அந்த பெயரை கேள்வி பட்டவள் என்றாலும் அவன் முகத்தை அல்லது அவன் ஸ்வாமிகளுக்கு என்ன உதவி செய்பவன் என்று இது வரை தெரியவில்லை.
மேலும் அவன் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கிடமாகவே இருந்தது.
அவனுக்கும் சம்பத்திற்கும் ஏதோ  பல கசப்பான சம்பவங்கள் நடந்து வந்துள்ளது என்று அவளுக்கு தெரிந்தது. அப்போது தான் அவள் அவன் பெயரையே கேட்டிருந்தாள். கடைசீயில் சம்பத்துடன் இந்த சூரஸ்வாமிதான் எங்கோ சென்றான் அப்புறம் இவனையும் காணோம் சம்பத்தின் நிலை என்ன என்பதையும் தெரியவில்லை.
சம்பத் எப்படி பட்ட வேலையையும் கெட்டிகாரத்தனமாக  செய்ய கூடிய ஜித்தன். ஸ்வாமிகள் ஒரு வேலை சொல்வாரென்றால் அவர் சொல்லும் முன்னரே அது முடிந்து போயிருக்கும்.
அவனுடைய கலையான முகம் பட பட பேச்சு . வசீகரிக்கும் காந்த சக்தியுடை  அவன் குரல்.
சே! சே! ஏதோ ஒரு ஆணை பற்றி இத்தனை தீவிர சிந்தனை? ஆனாலும் அவன் எங்கே?
சிந்தனையும்  கால் போன போக்கில் எங்கெங்கோ செல்ல அவள் அன்று இரவு தனியே நடந்து பொய் கொண்டிருந்தாள். குளிர் பல்லை கிட்டியது உடலில் துவராயமாக ஒரு பதினாயிரம் ஊசிகள் ஒருங்கே குத்துவது போல இருந்தாலும் அவள்  அதை பற்றி கவலை பட வில்லை. சன்யாசிகள் இதை எல்லாம் பழகிக்கொள்ள வேண்டுமே.கட்டாந்தரையும் மலர்மஞ்சமும் ஒன்றே என்று தெளிந்துகொள்ள மனம் பக்குவப்பட வேண்டுமே? ஆணும் பெண்ணும் ஒரே விந்துவின் பரிமாண மாற்றங்கள், உருவமும் உடலும் வேறு ஆனால் ஜீவன் ஒன்றே!எத்தனை அறிய கருத்தை அன்று உபன்யாசத்தில் ஸ்வாமிகள் சொன்னார்! இந்த இமாலய கட்டிடங்கள் மற்ற எவருக்கேனும் அல்லாமல் நமக்கென்ன இருக்கிறது? சேவை ஒன்றே தாய், எண்ணம் ஒன்றே தந்தை குரு ஒன்றே வழிமுறை! என்று பல எண்ணங்களுடன் அவள் ஆசிரமத்தின் புதிய கட்டிடங்களை பார்த்துக்கொண்டே ஒரு மூலையில் திரும்பினாள்.
ஸ்வாமிகளுக்கு தான் தன மேல் எத்தனை நம்பிக்கை, தன்னை வாரிசாக அறிவித்தது முதல் அவள் பொறுப்பு கூடுதல் ஆகி போனதும் பல சிஷ்யர்களும் அவர் செய்தது எத்தனை தகும் என்று புகழ்ந்தும் அவளுக்கு புளகாங்கிதமாக இருந்தது. இருந்தாலும் அவளுடைய எண்ணம் சம்பத்திடம் இந்த பொறுப்பு அளிக்க பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.
வெகு தூரத்தில் மெல்லிய வெளிச்சம்வந்தது. அதை நோக்கி சூரசுவாமி  நடந்து போவது தெரிந்தது. அப்போது சிறிய ட்ரக் வண்டி வந்தது. அதை அவன் இடது புர திசை காட்டி அங்கு ஒரு மூலையில் வண்டியை நிறுத்த சொன்னான். கொஞ்ச நேரத்தில் அங்கிருந்த பெரிய மர சட்டங்கள் அழகாக பிரிந்து கொண்டு ஒரு பெரிய நிலவரை கார் பார்க்கிங் போல ஒரு பிளவை ஏற்படுத்தி இருந்தது.   அதனுள் அந்த ட்ரக் மறைந்தது.  ஸ்டெல்லா இதற்க்கு முன்னர் இதை போன்ற ஒரு இடம் இருப்பதாய் அறியவில்லை, கட்டட வரை படம் அவளுக்கு மனப்பாடம் ஆகி இருந்தாலும் இந்த நிலவரை அவள் பார்த்ததுபோல  நினைவில்லை. மேலும் அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்க ஆவல் கொண்டாள். நேர்த்தியான அந்த தோட்டம் ஆசிரமம் அமைவதற்கு முன்னரே கட்டப்பட்டது ஆகையால் அந்த கட்டிட அமைப்பு பற்றி ஸ்டெல்லாவிற்கு தெரியவில்லை.அங்கு சுரங்க கார் பார்க்கின் இருப்பதே தெரிய வாய்ப்பில்லை. மேலும் அது ஆசிரம காம்பவுண்டுக்குள் இல்லை ஆகையால் அது வெளி மனிதர்கள் தோட்டம் என்றே பட்டது. அதிலிருந்து ஆசிரமத்திற்கு சுரங்க பாதை போட்டது ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. அதனை தொடர்ந்தது அவள் யாருக்கும் தெரியாமல் அந்த சுரங்கத்தினுள் சென்றாள். சிறிது தொலைவில் அந்த சுரங்கம்  விஸ்தாரப்பட்டது. சிறிய வெளிச்சமே அங்கு தென்பட்டது. மெல்ல மெல்ல இருட்டில் ஸ்டெல்லா ஒதுங்கி மறைவிடம் தேடினாள்.வகையாக ஒரு தூணின் ஒதுக்குப்புறத்தில் சில பெரிய பேட்டிகள் இருந்தன.  அங்கு உள்ள சில டப்பாக்களில் பின் ஸ்டெல்லா ஒளிந்து கொண்டாள்.

அப்போது ட்ரக் பின்கதவு திறந்தது. அதிலிருந்து இருவர் நெடிய உருவத்துடன் இறங்கினர். பார்த்ததும் அவர்கள் மைசூர் ஆசிரமத்தில் இருக்கும் சில தந்திர யோகிகள் என்று தெரிந்தது. அதில் ஒருவன் சிறிய படி ஸ்டூலினை ட்ராக் கதவிற்கு கீழ் வைத்தான்.

தன்மூச்சு தனக்கே கேட்க்கும் அளவிற்கு ஒரு கொடிய மௌனம் அங்கு இருந்தது. ஸ்டெல்லா கண்விழி கூர்ந்து நோக்கி கொண்டிருந்தது. சூரஸ்வாமி சைகை காட்ட அந்த இரு மனிதர்களும் ட்ரக்கின் பின் சென்று அதிலிருந்து எதையோ மெல்ல இறக்கினர். மெல்ல நான்கு பெட்டிகள் இறங்கின. அவை ஆளுயரத்திற்கு இருந்தன. அத்தனையும் இறக்கிய பின்னர் சுற்றுய் முற்றி பார்த்து யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டனர். உடனே சூரஸ்வாமி மிக ரகசியமாக எதோ சமிஞை செய்தான் உடனே அங்கிருந்து மேலும் சட்டென்று இரு புதிய ஆட்கள் வந்தனர். ஆக இந்த நால்வரும் ஆளுக்கு ஒரு பெட்டியை மடமடவென திறந்தனர்.ஸ்டெல்லாவிற்கு தன கண்களையே நம்ப முடியவில்லை. ஆயினும் அதில் என்ன இருக்கிறது என்று பார்த்தாள். உள்ளே ஆறு இளம் பெண்கள் கட்ட பட்ட நிலையில் இருந்தனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------

அங்கு நடந்துகொண்டிருந்த நிகழ்வுகள் ஸ்டெல்லாவின் இதயத்தினை பிரட்டின. இங்கு ஆள் கடத்தல் நடப்பது இதுவரை அவள் பார்த்ததில்லை. மூச்சு கூட விடாமல் அவளது விழிகள் அந்த டப்பாவில் துவாரங்கள் வழியே உள்ளிருந்துகொண்டு கவனித்து கொண்டிருந்தன.
 கொஞ்ச நேரத்தில் அந்த பெட்டிகளில் இருந்து அந்த பெண்கள் இறக்கிவிடப்பட்டனர்.
அவர்கள் தங்கள் சுய நிலையில் இல்லை என்று அவர்களை பார்க்கும்போது ஸ்டெல்லாவுக்கு புரிந்து விட்டது. இது அளவிற்கு அதிகமாம்க போதை கொடுக்கப்பட்டதால் ஏற்பட்ட தடுமாற்றம். ஆனால் ஏன் இவர்களை இப்படி கடத்தி வர வேண்டும் என்று அவளுக்கு புரியவில்லை.
சூரஸ்வாமி அந்த பெட்டிகளை அப்புறப்படுத்திவிட்டான். அந்த மனிதர்களை ஆளுக்கு ஒருவராக அந்த பெண்களை சுமந்து கொள்ளும்படி சொன்னான். அவனும் மற்ற மூவரும் சேர்ந்து அந்த பெண்களை தூக்கிக்கொண்டு ஆசிரமத்தின் பின் புறம் நடக்க துவங்கினர்.
அவர்கள் அனைவரும் சில மீட்டர் தூரம் சென்று நின்றனர். ஸ்டெல்லா பூனை போல தொடர்ந்து சென்று அவர்களை நோட்டமிட்டான்.
சில மீட்டர்கள் நடந்த பின்னர் பின் கேட்டின் பக்கம் உள்ள ஒரு சிறிய வழி இருந்தது.சூரஸ்வாமி ஒரு சாவியை எடுத்து அதனை திறந்து உள்ளே சென்றான். அதில் ஒரு ஆள் ஏறும் அளவிற்கு அகல படிக்கட்டுக்கள் சுழன்று சென்றது . அதன் வழியே அவர்கள் அந்த பெண்களை தூக்கி கொண்டு சென்றனர். நாலாவது ஆளை அந்த கதவினை தாளிடசொல்லிவிட்டு அவன் உள்ளே சென்றான். பின் ஒருவர் பின் ஒருவராக அந்த அவ்வழியே உள்ளே சென்றனர்.
ஸ்டெல்லா இப்போது துரிதமானாள் அவளுக்கு ஒரு யோசனை சென்றது. நான்கைந்து கல்லை போட்டு சத்தம் வர செய்தாள். அங்கு என்ன இருக்கிறது என்று ஒருவனை பார்த்து வர சூரஸ்வாமி அனுப்பினான்.  உடனே தன் ஜெபத்தினால் அவன் கண்களை காட்டும் ஒரு வித்தை செய்தாள். அவன் பார்க்கும்போது அங்கு வெறும் புதர் இருந்தது. ஆனால் அவன் கண் முன்னே அவள் அதே வழியின் உள்ளே சென்று மறைந்து கொண்டாள்.
யாரும் இல்லே! என்று மெதுவாய் சொன்னான் அந்த யோகி.
சரி சரி! கதவை சாத்திட்டு உடனே இங்கே வா! என்று மெல்லிய குரலில் ஆணை இட்டான் சூரஸ்வாமி. எல்லோரும் படிகளின் வழியே அந்த பெண்களை தூக்கி கொண்டு மேலே ஏறினர். ஸ்டெல்லாவின் ரத்த ஓட்டம் அதிகரித்து கொண்டே சென்றது. கடவுளே! இது என்ன பயங்கரம்! யாருக்காக இந்த பெண்களை கடத்தி கொண்டு வருகிறான் இவன்? அந்த பெண்களின் அங்கியை பார்த்தால் நம் ஆசிரம அங்கி போல் அல்லவா உள்ளது? நம்முடைய ஆசிரம பெண்களை இவர்கள் கடத்த வேண்டிய அவசியம் என்ன? எதுவும் புரியவில்லை பற்கள் கிட்டும் அந்த குளிரிலும் அவள் தலை வழியே வியர்வை வழிய துவங்கியது. எதோ ஒரு பொருள் மீது அவள் கால் பட்டதும் அது உருண்டோட துவங்கியது அந்த பேய் மௌனத்தில் அது பூதாகாரமாக சத்தம் போட்டது. அவள் உடனே அந்த படியின் முடுக்கில் மறைந்து கொண்டு அவள் மூச்சையும் அடக்கிக்கொண்டாள்.
சூரஸ்வாமி உடனே திரும்பி தீக்கங்கு பார்வையால் நோட்டம் விட்டான். மற்றவர்களை அங்கிருந்தவர்களை சைகை செய்து மேலே என்ற சொன்னான் சொன்னான்.
அவனுக்கு இப்போது யாரோ இருப்பது தெரிந்து விட்டது. யார் அது? என்று இரு முறை கேட்டான். எவனாய் இருந்தாலும் வெளியே வா! உன்னை உயிரோடு விடப்போகிறேன் என்று பொய் கூற மாட்டேன்! மரியாதையாக வெளியே வந்து விடு!சத்தமில்லாமல் அமைதியாக சாகலாம் வா! என்று உறுமிக்கொண்டே அவள் அருகில் வந்துவிட்டான்.
------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டெல்லாவின் இதயம்  அக்குரலை கேட்டு திடுக்கென ஒரு கணம் நின்றது ஆச்சு இந்த முடுக்கு தான் திரும்பினால் அவள் மாட்டிக்கொள்ளவேண்டியதுதான். நீயே வருவாயா? இல்லை நான் கண்டு பிடிக்கட்டுமா? என்று கொடூரமான குரலில் சொல்லிக்கொண்டே ஓங்கிய கத்தியுடன் முடுக்கிற்கு திரும்பினான். ஆனால் அங்கு யாரையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த வனாய் சுற்றி சுற்றி பார்த்தான் ஒரு ஆணின் காலடி  தடம் மட்டும் அங்கே தூசில் படிந்திருந்தது. சூரஸ்வாமியின் கண்கள் கோவத்தால் பெரிய தீப்பிழம்பாக ஜொலித்தது.
------------------------------------------------------------------------------------------------------

தன்னுடைய மூச்சு அடக்கி பழகிய காலை நன்றாக காய் கொடுக்கவே, அமைதியாக பிரயோக படுத்தி கொண்டிருந்தாள் ஸ்டெல்லா. சூரா சுவாமி தன முன்னரே நின்று கொண்டிருந்தாலும் கண் கட்டு வித்தை அவனை நன்றாக கட்டி இருந்தது. பசி கொண்ட ஓநாய்  போல உறுமிக்கொண்டே  திரித்தானே தானே தவிர அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்டெல்லாவை அப்போது ஒரு கை தொட்டது. அவள் முதுகு வரை சில்லிட்டது. அருகே சம்பத் நின்று கொண்டிருந்தான்.
சம்பத் சமிக்கை மூலம் பேச வேண்டாம் என்று சொன்னான்.
இருவரும் நயன பாஷயில் பேச துவங்கினர்.
சம்பத் எப்படி வந்தே?
அது முக்கியம் இல்லை இன்னமும் தீக்ஷண்ய சுவாமி உனக்கு மனோஜ்வய்த சித்தியை சொல்லி தாரலியோ?
என்ன?
உனக்கு எப்படி தெரியும். நான் உன்னை ஜாக்கிரதையாய் இருக்க சொல்லியும் இப்படி மாட்டி கொண்டாய்.
ஸ்டெல்லா ஆச்ச்ச்ரியதுடன் அவனை  ஏறிட்டாள்.
இன்னும் அடுத்த நிமிஷம் அவன் தூர திருஷ்டியை பிரயோகம் பண்ண போறான். என் கையை பிடி என்றான்.
அதெல்லாம் இருக்கட்டும் நீ எப்படி
சம்பத் அவளை ஒரே முறை தான் ஏறிட்டான்.
தூர திருஷ்டி மூலம் சூரஸ்வாமி தேடினான் அங்கு எதுவும் தென்படவில்லை வெறும் வெண்புகையை தவிர.
======================================================================


Comments

Popular posts from this blog

KAmini_Yogini4

காமினி யோகினி 4 இந்த கதையில் பல சொற்கள் பயன்படுத்துவதால் அதன் அர்த்தத்தை எனக்கு தெரிந்த வரையில் கூறுகிறேன். ஜபம்- உரு போடுதல் உபாசனை- தீவிர பிரார்த்தனை சாதனை - செயலாக்குவது கிரியை-செயல், பிரயோகம்- பயன்படுத்துதல் என்ற வார்த்தைகள் பயன் படுத்த பட்டுள்ளன. இவை அனைத்தும் வடமொழி சம்ஸ்க்ரித சொற்களாகும். இதன் பொருளை உணர்ந்து படிப்பதற்கும், யோகினி என்பது கடவுளர்கள் இல்லை. தேவர்களும் இல்லை, ஆனால் தேவர்களின் நிலைக்கு ஏறக்குறைய பெற்றிருக்கும் தேவதைகள் என்று சொல்லலாம். இவர்களை யோகிகளின் மனைவிகள் என்றும் துணை தேவதைகள் என்றும் சொல்ல படுவதுண்டு. இவர்கள் யட்சிங்கள், கணங்கள், பூதங்களுக்கும் சற்று மேலே சக்தி பொருந்திய தேவதைகள் என்று சொல்ல படுகின்றன. இதற்க்கு மந்திரங்கள் உபாசனை முறைகள், அதற்க்கான பலன்கள் உண்டு என்று அதர்வ வேதமும் யோகினி தந்திர உபாசனை நூல்களும் குறிப்பிடுகின்றன. இவர்களை அம்பிகை பண்டாசுரனுடன் போர் புரிந்த காலத்தில் தன் உப தேவிகளுக்கு துணை யாக போர் புரியவும், அசுர படைகளின் மேல் போர் செய்ய 64 படை தலைவிகளும் தேவைக்காக இவர்களை படைத்ததாகவும், இவர்கள் கீழ் முறையே 1000 கோடி தேவதைக

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண
காமினி யோகினி - பகுதி 10 காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!! எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள்.  கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்களுக்கு  பரபரப்புடன் மற்ற மூவரையும் உலுக்கினாள். மெல்ல மற்ற மூவரும் முனகி கொண்டே நெள