Skip to main content
காமினி யோகினி -9

சம்பத் எனக்கு தெரிந்த வித்தையெல்லாம் சொல்லி கொடுத்திட்டேன். இவ்வளவு சீக்கிரம் கிரகிச்சு ஒரு சிஷ்யனை நான் கண்டதில்லை.
என் பாக்கியம் சுவாமி .
உனக்கு நான் இனியும் என்ன செய்யணும்.எனக்கு தீக்ஷை கொடுங்க சுவாமி.
கொடுக்கலாம் ஆனால் நீ ஏற்கனவே ஒரு குரு கிட்டே இருந்து தீக்ஷை வாங்கிட்டு வந்திருந்தா மறுபடியும் எனக்கு தீக்ஷை கொடுக்க அவசியம் இல்லை. அது சரி உன் குரு கிட்டே இருந்து தீக்ஷை வங்கிட்டயா?
இல்லை சுவாமி என்னை அவர் சிஷ்யனாய் மதிக்க வும் இல்லை, அவர் எனக்கு எதையும் சொல்லி தரவும் இல்லை.சில பல சித்து வேலைகளை ஜபம் பண்ணி வர வெச்சாரு ஆனால் அதையும் திரும்ப வாங்கிக்கிட்டாரே.  அதனால் அவர் எனக்கு எப்படி குரு ஆக முடியும்?
உன் குரு பத்தி நீ சரியாய் புரிஞ்சி வெச்சிருக்க.
ஆமாம் என்ன இருந்தாலும் அவர் உனக்கு சோறு போட்டவன். நன்றி இருக்கணுமில்லே?என்று கூறினார் சிவா ஸ்வாமிகள்.
 நன்றியா?அவர் இப்போது செய்த வேலைக்கு நன்றியா? ஊரான் பணத்தை எல்லாம் உலையில் போட்டு உத்தமன் மாதிரி கையயை தூக்கி ஆசிர்வாதம் செய்துகிட்டு தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றி அவர் வாழ்ந்திருக்காரு.
அவங்களை நம்பி வந்த சாதகர்கள் சக்தியை அவர் வாங்கிகிட்டு பல சாமியார்களை வெறும் கூடு போல போட்டு வெச்சிருக்காரே?
உள்ளூரிலுருந்து வெளி நாடு வரைக்கும் அநியாயமா பல பேருடைய வாழ்க்கையை கெடுதிருக்காரே?
எங்கேயோ வந்த பொண்ணு ஸ்டெல்லா அவர் ஏதோ தர்மவான், யோகி ன்னு நம்பி தலையை கொடுத்துட்டு இப்போ பரிதவிக்கிறா.
அதே அந்த பொண்ணு மேல அத்தனை கரிசனம்.
பாவம் அவளுக்கு பிரம்மச்சரியம் கிடையாதுன்னுன்னு நீங்க தான் சொன்னீங்க. அந்த பொண்ணு சாமியாராக மதி அவளையும் மோசம் செய்து அவளை ஜெயிலில் ஆடைக்காத குறையாய் உக்கார வெச்சி இருக்காங்களே?
அது அவளுடைய விதி. ஆமா உனக்கு மட்டும் பிரம்மச்சரியம் இருக்குதுன்னு யார் சொன்னது?
என்ன சுவாமி சொல்றீங்க?
சொல்லுறேன் நேரம் வரும் பொது சொல்லுறேன். இப்போ நீ கத்துகிட்ட விதையெல்லாம் நீ பிரம்மச்சரியம் இல்லேன்னாலும் உனக்கு லபிக்கும் .
குழப்ப மா இருக்குது சுவாமி.
என் குருநாதர் அடுத்து என்ன செய்யப்போறாருன்னு எனக்கு புரியலை.

தீக்ஷண்யன் ஒரு அசுரயோகி அவன் இப்போ செய்யிறது நரகாசுரன் தவம் பண்ணி சர்வேஸ்வரன் கிட்டே இருந்து பெரிய வரம் போல ஒரு முயற்சி. நரகாசுரன் கொடிய தவம் பண்ணி பெரிய வரம் வாங்கினான். அவன் அம்மாவை தவிர வேற யாரும் அவனை கொல்ல  முடியாது ன்னு வரம் வாங்கினான். அது சாதாரணமில்லே சாகா வரம் போல, ஒரு அம்மா தன்  மகன் எத்தனை கொடிய தீய வழியில் போனாலும் அவனை தண்டிப்பாளா? அவனை  கொல்லுவாளா?இல்லை தானே? அதனால் தான் அவனுக்கு அத்தனை ஆணவம் தலைக்கு ஏறிடுச்சு. மூ உலகத்தையும் ஆட்டி வெச்சான் பல பெண்களை கெடுத்தான். கடைசியில் அவன் அம்மா கிட்டேயே செத்தான்.
ஆமாம் சுவாமி அதுக்கும் என் குருனாதர் க்கும் என்ன சம்பந்தம்?
இப்போ உன் குரு செய்ய போறதும் அதே மிருத்திஞ்ஜய சாதகம் தான்.
அவரு செய்யுறது மோட்சத்துக்கு சாதகம் ன்னு இல்ல என்கிட்டே சொல்லி இருந்தாரு?
என்னது மோட்சமா? அவனுக்கா? ஹாஹாஹா என்று வாய் விட்டு சிரித்தார்.

மோட்சதுக்கும் இதற்கும் நிறைய வேறு பாடு உண்டு, சம்பத்

சாவே வரக்கூடாது சிரஞ்சீவியாக இருக்கணும்னு செய்யுறது மிருதஜயம்
பிறப்பே வேண்டாம் னு பயணம் பண்ணுறது மோட்சம்
தானே கடவுள் ஆகிறது பிரம்மம்.
இதில் எது மேல்
மோட்சம் தானே சுவாமி?
தவறு பிரம்மமே மேல். அதுதான் கடவுளின் நிலை, அதற்க்கு நிறைய பயண  பாடணும்.ஆனால்..இப்படி ஆபிசாரமாய் குறுக்கு வழியிலே போறவங்களை தடுத்து நிறுத்துவது தர்மத்தை காப்பாத்துறது தான் நம் போன்றவர்களின் கடமை.
ஆமாம் சுவாமி புரியுது. நீ இப்போ மூணு உயிர்களை காப்பாத்தணும்
அது போல தர்ம யுத்தம் நடக்குதுன்னா சில சேதங்கள் ஆகும் அத்தனையும் நீ கடக்கணும்
ஏன் சொல்றீங்க சுவாமி? உன் கண் முன்னர் சில பேர் போகலாம் உன் வழியாகவும் சில பேர் உயிர் போகலாம். அதை நீ பொருப்பில்லை ன்நாளும் விதி அப்படி தான் எழுதி இருக்கு வேற சில பேர் மேல பழி போகும்  அதை தடுக்க நீ சில தியாகங்களை செய்ய வேண்டியது இருக்கும்.
புரிஞ்சது சுவாமி.ஆனாலும் கஷ்டமா இருக்கு
வா இப்போ நா பறக்க வேண்டிய நேரம் வந்தாச்சு என்று சொன்னார். சற்று நேரத்தில் இரண்டு கிளிகள் உயரே பறந்தன.
==============================================================
தூப புகை கமழ தீப வெளிச்சத்தில் தங்கமே ஆடையாக ஜொலிக்க தெளும்பும் பால் செம்புடன் தீக்ஷண்ய ஸ்வாமியின் முன்னாள் வந்தாள்  ஸ்வர்ண யோகினி.

தீக்ஷண்ய நீ நினைத்ததை சாதித்து விட்டாயா? என்று அவன் அருகில் அமர்ந்தது.

அமைதியாய் இருந்த தீக்ஷண்யரின் முகதை தொட்டு அவள் முகத்தை நோக்கி ஏறிட்டாள் யோகினி.அவர் பார்வையில் அனல் எரித்தது. அவர் முகம் பயத்தாலும் கோபத்தாலும் நிரம்பி வழிந்தது.
என்ன இத்தனை கேள்விக்குறி உன் முகத்தில் என்று நயனமாய் கேட்டாள்  யோகினி.
எல்லாம் தெரிந்த நீ என்னையே கேட்கிறாயா? யோகினி உனக்கு தெரியாதா?

என்னை மன்னித்து விடு யோகியே!நீ என்னை அழைத்து சில நாட்கள் தான் ஆகிறது. நீ கேட்ட வாரத்திற்கு இப்போது தான் நான் உன்னை கணவன் போல வறிக்க ஆரம்பித்துள்ளேன். உன்னுடைய எண்ண அலைகளை எனக்குள் செலுத்தி இருந்தால் எளிதில் உன் எண்ணங்களை ஈடேற்றி இருப்பேன். நீ அதற்க்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறாய்.நாம் இன்னமும் கலக்கவில்லை  அதனால் நீயே சொல் இன்னமும் உனக்கு ஸ்வர்ணம் வேண்டுமோ?
தீக்ஷண்யர் ஏளன பார்வை பார்த்தார். யோகினி, நீ என்னை கிண்டல்  செயகிறாய்,வெறும் ஸ்வர்ணத்திற்கு உன்னை ஜெபித்தேன்? என் வரம் தெரியாத உனக்கு?
அனைத்து உலகிற்கும் ஒரு நொடியில் சென்று வர  வேண்டுமோ?
அதை நான் நொடியில் செய்வேன்.
நினைத்ததை எல்லாம் பார்க்கும் சக்தி வேண்டுமோ?
அது என்னிடமே உள்ளதே!
பின் என்ன உனக்கு அமர வாழ்வு வேண்டுமோ?
ஆம் அதுவே என் குறிக்கோள்
நீ இவ்வளவு சிற்றின்பியாய் இருப்பை என்று நான் நினைக்கவில்லை.
என்ன சொன்னாய்?
ஆம் பேரின்ப மோட்சம் ஈஸ்வர பதவி என்று உனக்குள் இருந்த உயர்ந்த லட்சியம்  போய்விட்டது. நீ யாரோ ஆபிசாரிகளின் வழி புகுந்திருப்பாய் என்று நினைத்தேன் அது பொய்யில்லை.
சீ கஷ்டம்! நான் பைசாச யோகம் புரியும் குடுகுடுப்பை  காரனா என்ன? நீ அமர வழுவும் சிரஞ்சீவித்துவமும் அடைய வேண்டும் என்றால் நீ செய்ய வேண்டியது என்னவென்று தெரியுமா?

நீ சொன்னது போல மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த பெண்களை நான் கண்டுபிடுத்து விட்டேன். பலிக்கு அவர்கள் தயாராக  உள்ளனர்.
இருக்கலாம் ஆனால் அவர்கள் மனம் உவந்து தங்களை  பலிக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் அது மிகவும் கடினம்
இல்லை அது மிகவும் சுலபம்.
அதை பற்றி கவலை வேண்டாம் நாம் மனோ வசியம் மூலம் அவர்களை தயார் படுத்தி வைத்து விடுவேன்.
நினைவிருக்கட்டும் அது அவ்வளவு சுலபமில்லை . மேலும் உனக்கு ஒரு கண்டம் அதி சீக்கிரத்திலேயே வரப்போகிறது. நீ ஒழிந்து விட்டதாக எண்ணிய சில பேர் திரும்ப வந்து விட்டனர்.

என்ன என்ன?

ஆம் மேலும் நீ இப்போது அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருக்கிறாய் அதையும் தெரிந்து கொள் மேலும் நீ என்னை அழைத்தது முதல் என்னை சேரவில்லை என்றாலும் உன்னை நான் என் பாதியாக மதித்து நோயில்லாத உடல் இளமை,அளவில்லாத ஐஸ்வரியம் என்று அத்தனையும் என் சக்தியின் மூலம் அளித்திருக்கிறேன். இன்னும் சரியாக ஒரு வாரத்தில் அனைத்து கோள்களும் கூடும் முகூர்த்தம் வர போகிறது. அப்போது தான் பலி நடத்த பட வேண்டும்.
முக்கியமாக ஒரு விஷயம். நீ பலியிடும் இடத்தினை தேர்வு செய்ய வேண்டும்.
இங்கேயே கொடுத்தால் என்ன?
வேண்டாம் உன் எதிரிகள் உன்னை கிட்டதட்ட நெருங்கி விட்டனர். மேலும் உனக்கு ப்ராகாம்ய சித்தியும் கிடையாது. அதனால் நீ விரைவில் இங்கிருந்து புறப்பட வேண்டும்.
அதற்க்கு முன்னர் உன் கவனம் சற்று தவறினாலும் உன் நிலைமை விபரீதம் ஆகிவிடும்.

நான் உன்னை அடைவது சிற்றின்பத்திற்க்காக இல்லை அதனால் உன்னை நான் சேருவதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. மேலும் நான் யோகப்பயிற்சி செய்வதால் எனக்கு சித்தி கிட்டும் வரை இதை எல்லாம் நான்  அனுமதிப்பதில்லை.
அபாரம் நீ நான் நினைத்ததைவிட உத்தமன் தான். உன் பின்னால் பல அரை குறைகளை வைத்துள்ளதை அவர்கள் பின்னல் செல்லாமல் நான் சொல்லுவது போல செய்தாயெனில் உனக்கு நான் அனைத்து உதவிகளும் செய்வேன்.
சரி நான் எங்கு பலியை வைத்துக்கொள்வது?
காமாக்யா தேவி கோயில் தான் அதற்க்கு சிறந்தது. உள்ளவைகலேயே சிறந்த யோனி சக்தி பீடம் அங்குதான் உள்ளது. அங்குள்ள பகுதிகளில் தான் உன் ஆற்றல் பன்மடங்கு வெளிப்படும். அதற்கான ஏற்படுகளை நீ விரைந்து முடி இப்போது நான் செல்லவேண்டிய நேரம் வந்து விட்டது என்று மஞ்சத்திலிருந்து எழுந்தாள். அவள் உடலிலிருந்து அனைந்தது தங்கமும் தொப்பென்று விழுந்தது. காண்போரை அசரடிக்கும் அழகுடன் தோன்றிய அவள் அங்கிருந்து மாயமானாள்.
 ===============================================================
மனக்காவலுக்கு மனம் பக்குவப்படாத வரையில் மதில் தான் காவல்

சிவா ஸ்வாமிகள் சிரித்து கொண்டே கூவினார். இருவரும் கோட்டான்களாக மாறி வெகு தொலைவு பறந்து வந்தாயிரது. களிப்பு மிகுந்துவிட சம்பத் சற்று இளைப்பாறலாம் என்று அவரிடம் கேட்டான். சுவாமி நாம எங்க போறோம்? சொல்லவே இல்லை.
இன்னும் உன் சித்திகளை நீ பயன் படுதலியோ?
ஏன் ஸ்வாமி?
உனக்கு நாம எங்கே எதுக்காக போறோம்னு தெரியில்லையா?
நாம எதோ ஒரு கோயிலுக்கு போறோமுன்னு தெரியுது ஆனா எந்த கோயிலுக்கு போறோமுன்னு தான் தெரியலை.
நாம் இப்போ போக போறது முகாம்பிகை கோயில்.
அங்கே என்ன செய்ய போறோம் சுவாமி.
ஒரு உண்மை பல நாளாய் பேசாம கிடக்கு அதை பேச வைக்க அந்த மூகாம்பிகை கிட்டே  வேண்டிக்க போறோம்.
என்ன உண்மை சுவாமி. போயிட்டு வந்தப்புறமா தெரிஞ்சுக்குவே. சீக்கிரம் வா நீ பசி தாக்கமுன்னு தொல்லை குடுக்கிற இப்போ நீ அனுரமி மட்டத்தை பிரயோகம் பண்ணி பசி தகமுன்னு புலம்பல் இல்லாமல்  இருக்கும் அந்த கோயில் குகைக்கு போகலாம் வா என்று இருவரும்  சென்றார்கள்.
===================================================================
சூரஸ்வாமி காரில் வந்து கொண்டிருக்கும் பொது மனதில் ஒரு குரல் கேட்டது.
சூரா எங்கிருக்கிறாய்?
உத்தரவு சுவாமி என்று மனதிற்குள் பேசி கொண்டான்.
சூரா உனக்கு ஒரு வேலை தரப்போகிறேன்.
உத்தரவு
பலி பசுக்களை நீ அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள காம்யக கோயிலுக்கு கொண்டு வர வேண்டும்.
செயகிறேன் சுவாமி ஆனால் நாம் அங்கு யாரை சந்தித்து ஏற்பாடு செய்வது.
நம்முடைய சிஷ்யன் சேகர மூர்த்தியும் அஸ்ஸாம் மாநில மந்திரி ஜிபேஸ்வர்ரூம் நண்பர்கள்
சேகர மூர்த்தி எங்கே இருக்கிறான்?
இங்குதான் இருக்கிறார்கள் சுவாமி ஆனால்
என்ன அனால் ?
நீங்கள் மறைவிட பூஜைக்கு சென்றவுடன் ஆசிரமத்தில் பெரிய ரகளையே நடந்து விட்டது.
என்ன ட சொல்கிறாய்?
அமலாக்க துறையில் இருந்து பெரிய ரைடு நடந்து நம்முடைய சொத்துக்கள் அனைத்தையும் முடக்கப்பட்டு இருக்கிறது.
கொஞ்ச வினாடிகளுக்கு மனக்குரல் கேட்க வில்லை. யோகினி சொன்னது சரியாய் போய்விட்டது.
அதை அறிவேன் ஸ்டெல்லா எங்கிருக்கிறாள் ?
கெத்தி யில் உள்ள புதிய ஆசிரமத்தில் தான் இருக்கிறார்கள் குருவே?
அந்த பெண்கள்?
அவர்களும் ஆசிரம நிலவறையில் உள்ளனர்.
முட்டாள் இன்னமும் அவர்களை அங்கு என் வைத்திருக்கிறாய்?
 நான் அவர்களை அங்கு கொண்டு சென்ற சில நாட்களில் அங்கு பெரும் அளவில் சோதனை யை இன்கம் டாக்ஸ்,  அமலாக்கத்துறை என்று வந்து விட்டனர். இந்த நேரத்தில் நான் இவர்களை கொண்டு வேறு எங்காவது சென்றால் பெரும் பிரச்சனையில் மாட்டிக்கொள்வோம் என்று அங்கேயே வைத்து இருக்கிறேன். அந்த நிலாவரை ஆசிரம வரைபடத்தில் கூட கிடையாது ஆகவே அவர்களுக்கு இது பற்றி தெரியாது.

சரி நல்லதுதான் இப்போது சற்று பதட்டம் தணியும் பட்சத்தில் அவர்களை உடனே நான் சொன்ன இடத்திற்கு அப்புறப்படுத்து.

உத்தரவு சுவாமி.
எனக்கு ஸ்டெல்லாவின் அலைவரிசையில் பல தடங்கல்கள் வருகின்றன. மேலும் அவள்  வேறு யாருடனோ தொடர்பு கொள்வது போல தோன்றுகிறது.
நான் சொன்னால் கொவிக்க மாட்டீர்களே  குருவே

சொல்!

ஸ்டெல்லாவின் நடவடிக்கைகளில் எனக்கும் சந்தேகங்கள் தோன்றயது.
என்ன சொல்கிறாய்?
அவள் போலீசில் சில தகவல்களை சொல்லி இருக்கிறாள் அது நடந்த பின்னர்தான் இந்த அமலாக்கத்துறை ரைடு நடந்திருப்பதாக நான் நினைக்கிறேன்
சூரா நீ சொல்வது நிஜமாய் இருப்பின் அவள் மன்னிக்க முடியாத குற்றம் செய்தவள்  ஆகிறாள்.அவளை நாம் பலிக்கு முன்னர் கள  பலியாக்க வேண்டியதுதான்.
அதனை நான் பார்த்துக்கொள்கிறேன் சுவாமி.
சுவாமி இப்போதைய சூழ்நிலையில் நமக்கு இருந்த ஆசிரம கணக்குகள் அனைத்து முடக்க பட்டு இருக்கிறது.
அட சீ! பணத்திற்கு பஞ்சமா உனக்கு? நீ இப்போது நேராய் உன் இடத்திற்கு செல் அங்கு உனக்கு வேண்டிய அளவிற்கு சொர்ணம் இருக்கும்.
நன்றி குருவே! நான் உடனே அதற்கான ஏற்பாடுகளை செயகிறேன்.
நான் இப்போதே சேகரனுக்கு தகவல் சொல்கிறேன். முடிந்தால் ஸ்டெல்லாவையும் அழைத்து சென்றுவிட்டு.
செய்கிறேன் சுவாமி. இதழில் ஒரு ஓநாய் விழிப்புடன் சொன்னான்.
நினைவிருக்கட்டும் ஸ்டெல்லாவும் இல்லை சம்பத்தும் இனி இல்லை இப்போதைக்கு நீ ஒருவனே என் நம்பிக்கைக்கு தகுந்தவன்

இதனை மட்டும் நீ செய்து விட்டால் நீயே என் சாம்ராஜ்யத்திற்கு அடுத்த அதிபதி.
சூரஸ்வாமியின் கண்கள் ஜொலித்தது. புது உத்வேகத்துடன் ஜெய்  யோகா மாயா  என்றான்.

==========================================================
சேகர மூர்த்தி தன ஆடி காரில் அசுர வேகத்தில் பிரேக்கினை  அழுத்தினார்.
அவர் பண்ணை வீட்டில் உள்ள வேலை ஆட்கள் அனைவரும் அந்த சத்தத்தினை கேட்டு கிடுகிடுவென வெளியே வந்தனர்.
டேய் விநாயகம் எங்கே ட அவ?
அம்மணிகளா அவங்க மாடியிலே தான் இருக்காங்க.
எல்லாரையும் கூட்டிக்கிட்டு வெளியிலே போ! உடனே! என்று சொல்லி படிகளில் ஏறினார் அவர் தள்ளாமை வந்தது அவர் ஓடும் வேகத்தில் தெரிந்தது, அனால் அவர் நெஞ்சு ஆத்திரத்தில் வெடித்து விடும் போல இருந்தது.
மாடி அரை கதவை பலமாக  தட்டினார்.முகத்தில் எள்ளும்கொள்ளும் வெடித்தது.
கதவு மெதுவாக திறந்தது. உள்ளே வரும் போதே கன்னடத்தில் வசைமாரி பொழிந்து  கொண்டு வந்தார்.
அட  சண்டாளி உன்னை என் பொண்டாட்டி போல வெச்சிருக்கேன் உனகென்னடி குரைச்சல் இங்க?
எவனாவது வெச்சிருக்கிறவளை தொடாமல் இருப்பானா? உன் விருப்பப்படி தான் உன்னை தொடணும்ன்னு சொன்ன அதை மதிச்சு உன் சுண்டு விறல் கூட இன்னமும் படவில்லை. அதுக்காக ரொம்பதான் துள்ளுற? இங்க உனக்கு என்ன கேடு?
பணம் இல்லையா?ஆளு இல்லையா?என் வீட்டுக்கு போகாமல் கூட உன்னையே நம்பி  இருந்தேன்.இப்படி கழுத்தை அறுத்துட்டியே?
நான் இவ்வளவு பேசிக்கிட்டே இருக்கேன் அங்க என்னத்த வேடிக்கை பார்க்கிறவள்? என்று கர்ஜித்தார் சேகர மூர்த்தி.
கையை கட்டி கொண்டு வெளியை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் சுமித்ரா,ஐந்தே முக்கால் அடி உயரம் வாளிப்பான தேகம் , சற்று பூசினார் போல் மேனி இடை வரை வளர்ந்த கூந்தல் பூனை கண்கள் கோவை சிகப்பாய் உதடுகள், கோதுமை நிறமாய் ஜொலிக்கும் உடல்  தீர்க்கமான நாசி என்று ஏதோ கலைஞன் போதை வெறியில் வரைந்த வண்ண படம் போல அதனை அழைகையும் தன்னிடம் வைத்திருந்தாள். யார் வந்தாலும் அவள் முன்னர் சற்று தயக்கம் காட்டுவர் அப்படி  பார்ப்போரை கிறங்கடிக்கும் அழகோவியமாக இருந்தாள். அவளுடைய கருநீல சேலை அவள் இளமையையும் அழகையும் தூக்கி காட்டியது. அவளுடைய ஜிமிக்கி யம் அவள் பூனை கண்களில் தீட்ட பட்டிருந்த மைய்யும் அவள் கழுத்தில் போட்டிருந்த நெக்லெஸும் பார்ப்போரை சுண்டி இழுக்கும் அளவிற்கு எதோ ஒரு தேவதை யட்ஷிணி போல தோற்றம்  அளித்தாள்.
சடக்கென்று எரிச்சலுடன் சேகர மூர்த்தியை திரும்பி நோக்கினாள்.
என்ன ஷேக்கர் இன்னிக்கு ரொம்ப தான் கோவம்? என்று கிளி மொழியில் கொஞ்சினாள். இதை பார்த்துதான் சேகர மூர்த்தி அவளிடம் விழுந்தார். ஆனால் இன்று அவர் அந்த மனநிலையில் இல்லை.
எதுவும் தெரியாத மாதிரி நடிக்காத? என்ன நடந்ததுன்னு உனக்கு தெரியாது?
பார்த்தேன் நம்ம ஆபிசில் செல்லத்துலயும் சொல்லி வெச்சார்போல ரைடு.
அதேயேதான் சொல்லுறேன். நீ எதுவும் தெரியாத மாதிரி நடிக்காதே
என்ன உளறுற ஷேக்கர்? நான் என்ன பண்ணுனேன்.
நடிக்கதடீ கடைசியில் உன் பத்திரிகை  புத்தியை காட்டிட்டேயில்ல ?
வந்ததுல இருந்து நீ என்னை திட்டிகிட்டே இருக்கே, விவரம் சொல்ல மாட்டேன் கிற.
நானா? ஆமாம் நீயேதான் உண்மையை சொல்லு சொல்லி வெச்சாப்போல உன் கிட்டே நான் சொல்லி இருந்த அத்தனை இடத்திலேயும் ஐ டி காரன் நோண்டி நொங்கெடுத்துட்டான். இப்போ நம்ம காசையே நம்ம எடுக்க முடியாத கே கடிக்கிற நிலைமை.
எல்லாத்தையும் கேள்விப்பட்டேன்.
நல்ல வேலை இது நம்ம வீடு கிடையாது இல்லேன்னா இங்கையும் அவன் மோப்பம் பிடிச்சு  வந்திருப்பான்.
அதனால் தான் நான் இங்கே வந்து உட்காந்தேன்.
நீ நிம்மதியா இருக்க? ஆனா நான்?
இது உனக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்ச ரகசியம் அது எப்படி அவனுக்கு தெரிஞ்சது.
நானும் அதை பத்தி தான் யோசிச்சிகிட்டு இருக்கேன் ஷெக்கர்.
நான் முடிவே பண்ணிட்டேன்.
என்னன்னு ?
நீ தான் அவன் கிட்ட போட்டு கொடுத்திருக்க?
அவள் கண்கள் விரிந்தது. அவரை தன பூனை கண்களால் முறைத்தாள்.
என்னை முறைச்சு  பிரயோஜனம்? உண்மையை சொல்ல என் தயங்குற? எதுக்காக கவர்மென்டுக்கு வித்த சொல்லுடி!
நிறுத்து ஷேக்கர். அனாவசியமா வார்த்தையை விடாத? நான் என்ன முட்டாளா? நம்ம கம்பெனி சொத்து விவரத்தை பொய் ஐ டி டெபார்ட்மென்டுக்கு சொல்ல?
பின்ன எப்படி அவனுக்கு தெரிஞ்சது.
புரியலை அதை பத்தி தான் யோசிச்சிகிட்டு இருக்கேன்.
சும்மாவா 2500 கோடி எப்படி தெரிஞ்சதுன்னு எவனுக்கும் புரியலை.

ஷேக்கர் கொஞ்சம் பொறுமையா இரு என்னை கோவத்தில் என்னென்னெவோ பேசிட்டே. பரவால்ல ஆனா உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஷெக்கர், நீ ரொம்ப டென்க்ஷனா இருக்க கொஞ்சம் ரிலாக்ஸ் மாடி என்று அவர் அருகில் இறுக்கமாக நின்று கொண்டு என்று முதல் முறையாக அவர் தோள்மேல் கைகளை வைத்தாள்.

அவர் இத்தனை நாட்கள் அவளின் ஸ்பரிசத்தை  கூட அடையாதவர் சற்று நெகிழ்ந்து  போனார்.என்னை பார்  ஷேக்கர். என்று அவள் பூனை கண்களால் அவரை ஊடுறுவினாள். கொஞ்சம் ட்ரிங்க சாப்பிடு என்று தயாராக வைத்திருந்த மதுவை ஊற்றி அவருக்கு புகட்ட்ட  ஆரம்பித்தாள்.ஜில்லென்ற ஷாம்பைன் உள் இறங்கிய வுடன் அவர் நிதானம்  ஆனார்.
ஷேக்கர் நான் இப்போ கேக்குற கேள்விக்கெல்லாம் நீ தயங்காமல் பதில் சொல்லணும்
கேளு
நீ என்னை ரொம்ப விரும்பி தான் ஏத்துக்கிட்டியா?
ஆமாம் அதில் என்ன சந்தேகம் ?
என்னை உன் பொண்டாட்டி மாதிரி மதிக்கிறியா?
சாத்தியமா? அவ போனதும் என் ஒரே பெண்ணுக்காக நான் மறுபடியும் கல்யாணமே செஞ்சிக்கலை அதையும் மீறி உன் மேல் இஷ்ட்டப்பட்டு தான் உன்னை கூட்டிகிட்டு வந்தேன்.
அப்படியா என்னை கூட்டிகிட்டு வந்தே? என்று அவள் நய்யாண்டியாய்  பார்த்தாள்
அப்படி இல்லை ஆனால் அப்புறம் எனக்கு இஸ்ட்டம்தான்.
நீ என்னை முதல் முறை எங்க பார்த்த?
நம்ம யோகா மாயா ஆசிரமத்தில் தான்.
நீ எதுக்கு வந்தே?
ஆமா நான் அங்க சேர வந்தேன், ஒரு வேலைக்காக.

ஸ்டிங் ஆபிரேஷன். என்று குறும்பாக  சிரித்தார்.

சுமித்ரா பதிலுக்கு சிரித்தாள். ஆமாம் என் பத்திரிகை என் மேல் ரொம்ப நம்பிக்கை வெச்சி இருந்தது. அடுத்த தலைமை ஆசிரியரா வரணும்னா ஒரு பெரிய ஸ்கூப் நியூஸ் தரணும்னு சொல்லிட்டாங்க, அதுக்காக நான் தேர்ந்தெடுத்தது யோகா மாயா ஆசிரம மர்மங்கள் பத்தி ஒரு செய்தி கட்டுரை.அதை நானே தனியா ஸ்டிங் ஆபிரேஷன் மாதிரி பண்ணுறேன்னு சொன்னேன். இதை சொன்னதும் எடிட்டரே  ஆடிட்டார், என்னை பயந்துகிட்டே அங்கே அனுப்பினார். நான் தைரியமா போனேன்.  ஆம்பிளைங்களே செய்ய பயந்த வேலை அது, அதனால எனக்கு ஒரு கர்வம். அங்கே நான் ரொம்ப தந்திரமா என்னை யாருன்னே அடையாளம் காட்டிக்காமல் நுழைஞ்சேன்.நான் ஒரு நொண்டி ன்னு எல்லாரையும் நம்ப வெச்சேன்.  கிட்ட தட்ட அங்கிருந்த ரகசியங்களை எல்லாம் சேகரிச்சிட்டேன்.
அப்படித்தான் அன்னைக்கு ராத்திரியும் அந்த ரகசிய பகுதிக்கு போனேன்.
அன்னைக்கு ராத்திரி மட்டும் உன் கிட்டே நான் சிக்கலைன்னா

வசமாதான் சிக்கினே.

ஞாபகம் இருக்கா?

ஆமா நான் ஸ்வாமியாரை பார்க்கிறதுக்காக அன்னிக்கு ராத்திரி வந்தேன் நீ மறைஞ்சு மறைஞ்சு அவர் அறைக்கு பக்கத்துலே போன, அங்கே பெண்கள் யாருமே அனுமதி இல்லை, மேலும் அது நிறைய யோகிகள் ரகசிய யோகம் பண்ணும் இடம் அதில் ஒரு பொம்பளைக்கு என்ன வேலை ன்னு உன்ன யாருக்கும் தெரியாம தொடர்ந்து வந்தேன். ஒரு கட்டை எடுத்து செமத்தியா உன்னை ஒரு போடு போட்டேன்.நீ கீழே மயங்கி விழுந்தே.  அப்புறமா உன்னை அங்கே யார் கிட்டேயும் சொல்லாமல் தூக்கிகிட்டு வந்துட்டேன்.

அன்னைக்கு மட்டும் நீ அப்படி செய்யலேன்னா ?

மொட்டை போட்டுக்கிட்டு சாமியார் கூட்டத்திலே சேர்ந்து இருப்பியா?
என்று கோல் என்று சிரித்தார்
சொல்லட்டுமா? நான் கொஞ்ச நாளாய் ஒரு எண்ணத்தில் இருந்தேன் சீக்கிரம் வேலைகளை முடிச்சிட்டு என்ன நடந்தாலும் பரவாஇல்லைன்னு அந்த ஸ்டெல்லாவை போலவே அங்கேயே பிரம்மச்சாரிணியாக இருக்க முடிவு செய்துட்டேன்.

அட நம்மக்குள்ளே என்ன ஒற்றுமை ?
ஏன் நீயும் அப்படிதான் இருந்தியா?
ஆமாம் நானும் சாமியாரா போகலாம்னுதான் இருந்தேன்.

நீ என் வாழ்க்கைக்குள் வர வரைக்கும் அந்த மாதிரி எண்ணம் தான் இருந்தது, பொதுவா ஆண்கள் அதுவும் அரசியல்வாதிகள் மேலே எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது.

என் மேல் அவ்வளவு  நம்பிக்கையா ?
ஆமாம் முதலில் நீங்க என்னை சீப்பா அடைய நினைக்கிறீங்கன்னுதான் நெனச்சேன். உங்களை போல உள்ளவங்க இஷ்டம் இருந்தால் பல பெண்களை இப்பொவேனும்னாலும் எப்படி வேணும்னாலும் அடைய முடியும் அத்தனை சொத்து இருந்தும் இன்னமும் வேற யாரையும் நீங்க ஏறெடுத்தும் .பார்க்கல்லே. அப்போவே எனக்கு உங்களை பிடிச்சு போச்சு.
அப்போ நீ என்னை பத்தி இன்வெஸ்டிகேஷேனே பண்ணி இருக்க.

ஆமாம் பொண்ணுங்க நினைச்சா எது வேணுமின்னாலும் பண்ண முடியும் ஒருத்தரை நினைத்தாள் கடவுளே மாத்தணும்னு நினைச்சாலும் அவங்களை மாத்த முடியாது. எந்த வகையிலும் அவள் எந்த நிலையிலும் சாதிப்பார்கள்.  தப்போ ரைட்டோ நாங்க முடிவெடுத்த அதை கடவுளாலும் மாத்த முடியாது.

கடையிசில் நீங்க ஜெயிச்சிடீங்க நான் உங்களுக்கு சொந்தம் ஆகிட்டேன்.
இப்போவும் நாகரீகமா உங்க சுண்டு விரலை கூட என் மேல் வைக்கலை.
இப்படி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வெச்சிருக்கணும் ஷேக்கர்.

அப்புறம் என் என்னை இவ்வளவு காய போடுற?

உங்களுக்கு இன்னமும் புரியலை ஷேக்கர். நான் ஆசிரமத்திற்குள் வந்தது என்னவோ இன்வெஸ்டிகேஷன் பண்ண, ஆனா ஸ்டெல்லா என்னை மொத்தமா மாத்திட்டா. எனக்கு ஒரு புது வகை மற்றம் அவளால கிடைச்சது. சுவாமி கொடுத்த ஜெப மந்திரங்களை உச்சாடனம் பண்ணும் பொது ஒரு புது தெம்பே வந்தது.அவகிட்டே பொய் மேலும் மேலும் புது புது ஜெபங்களை மந்திரங்களையும் கத்துக்கிட்டு ஜபம் பண ஆரம்பிச்சேன் எனக்கு என்னென்னவோ மாற்றங்கள் வந்தது. ஒரு கட்டத்தில் ஸ்டெல்லா வே அதுக்கு மேல் கத்து தர முடியல.
நான் வாழ்க்கையில் இருக்கும் ஒரே லட்சியம் அடுத்தவங்க என்ன அலைகளை படிக்கிறது அதில் ஜெயிச்சிட்டேன்னா நான் உங்களை அடைஞ்சிடுவேன்.
அதை நம்ம சாமியார் அபாரமா செய்வார்?
என்ன என்ன சொன்னீங்க அம்மா அவர் கிட்டே நீ அதை  கத்துக்கலியா?
அதுக்குள்ளே தான் என்னை இங்கே தூக்கி வந்துடீங்களே?
ஸ்வாமியாரை மட்டும் நான் பாத்துட்டேன்னா
நீ என்னை பத்தி என்ன நினைச்சே, உனக்கு என் மேல் இன்னமும் நம்பிக்கை வரல்லே ஷேக்கர் அப்புறம் உன்னை நான் மட்டும் எப்படி நம்ப முடியும்?
நான் எந்த வகையில் உன்னை ஏமாத்தினேன்?
என்கிட்டே இருந்து இன்னமும் விஷயங்களை மறைக்கிறே. இல்லையா ஷேக்கர் ?
என்ன சொல்ற நான் உன்கிட்டே இருந்து மைறக்கிறேனா?
ஆமாம் உண்மையை சொல்லு, நாலு நாளைக்கு முன்னால நம்ம கம்பெனி தஸ்தாவேஜுகள் பல முக்கிய ஃ பைல்கள் எல்லாத்தையும் நீ எனக்கு தெரியாமல் எங்கே அனுப்பின ?
அது  வந்து..
என் எதுக்கு முழுங்குற? சொல் எங்கே அனுப்பினே?
நான் வந்து அதை அனுப்பினேன்..
எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிட்டே இல்ல?
மன்னிச்சுடு சுமித்ரா, தப்புதான்.
அதை நீ ஊட்டி குன்னூர் யோகா மாயா ஆசிரமத்துக்குள்ளே ரகசிய இடத்தில வெக்கத்தானே அனுப்பினே?
அதிர்ந்து போனார் சேகர மூர்த்தி உனக்கு எப்படி தெரியும். ?என்று  குழறினார்.
இருக்கட்டும் இதையும் கேள் அது ஆசிரமத்துக்கு போகல.
என்ன? ஆமாம் அதோட காப்பி தான் அமலாக்கத்துறைக்கு பொய் இருக்கு.
அப்போ ஒரிஜினல் ?
அது எங்கே போச்சு ஆசிரமத்துக்கு போக வேண்டிய இருபது கிலோமீட்டர் முன்னால அந்த வண்டி விபத்துக்கு உள்ளாகிடுச்சு. அதில் இருந்த ட்ரைவர் செத்துட்டான். அந்த வண்டியில் இருந்தது எதையும் போலீஸ் காபிக்கல்லை. ஆனால் வண்டி ஆக்சிடென்ட் ஆன கேஸை மட்டும் பதிஞ்சு  வெச்சிகிட்டாங்க.
இதெல்லாம் நீ எப்படி தெரிஞ்சிகிட்டே.
நான் இன்னமும் பத்திரிகை ஆசிரியர் தான் தெரியுமில்லே.
மெளனமாக இருந்தா,
உனக்கு இன்னொரு அதிர்ச்சியும் தரேன்
அதை கண்டு பிடிச்சவன் யாருன்னு உனக்கு தெரியுமா?
யாரு ?
டி எஸ் பி ஸ்வாமிநாதன்.
என்ன? என்ன சொன்ன?  கண்கள் கோபம் கொப்பளிக்க இருக்கையை விட்டு எழுந்தார் சேகர மூர்த்தி.
உட்கார் ஷேக்கர்.
அவனை நம்பாதேன்னு அன்னைக்கே சொன்னேன். போலீசையும் பாம்பையும் அதிகமா நம்பவே கூடாது. நீ என்ன என்னவெல்லாம் உளறி வெச்சேன்னு எனக்கு தெரியாது. அது சரி உன்கிட்டே என்னோட பேச போன் இருக்குமே அதை யம் அவங்க எடுத்துக்கிட்டு போய்ட்டாங்களா என்ன?
இல்லை ஸ்வாமிநாதன் அதை என்கிட்டே கொடுத்தானே?
எங்கே அது?
தெரியலை
ஹே ஷேக்கர் என்னது இது உன் பையிலே என்று ஒரு தொலைபேசியை எடுத்தாள் .
இதுதான் உன் போன் ஸ்வாமிநாதன் கொடுத்தது.

நாசமாய் போச்சு என்று பிடுங்கி எறிந்தாள் சுமித்ரா.
அது சுக்குநூறாக உடைந்து நொறுங்கியது.
என்ன பண்றே சுமி?
இது போன் இல்லே இது வை ஃ பை  வாயிஸ்  ரெசீவர்.
என்ன என்று விழுங்கினார் சேகர மூர்த்தி.
இதை உன்கிட்டே எப்போ கொடுத்தான்.
காலையிலே
அப்போ இதை வெச்சிக்கிட்டு நாளெல்லாம் சுத்தினே இல்ல.
அய்யயோ அப்போ நாம் பேசினது ?எல்லாமே ரிக்கார்ட் ஆகி போச்சு.
தலையில் கையை  வைத்து கொண்டு சேகரமூர்த்தி  உட்கார்ந்தார்.சற்று நேரத்தில் மயக்கமுற்று  சாய்ந்தார்.
சுமித்ரா கூச்சலிட்டு வேலை ஆட்களை அழைத்தாள் ஆஸ்பத்திரியை நோக்கி ஆடி கார் மின்னல் வேகத்தில் பறந்தது. 

Comments

Popular posts from this blog

KAmini_Yogini4

காமினி யோகினி 4 இந்த கதையில் பல சொற்கள் பயன்படுத்துவதால் அதன் அர்த்தத்தை எனக்கு தெரிந்த வரையில் கூறுகிறேன். ஜபம்- உரு போடுதல் உபாசனை- தீவிர பிரார்த்தனை சாதனை - செயலாக்குவது கிரியை-செயல், பிரயோகம்- பயன்படுத்துதல் என்ற வார்த்தைகள் பயன் படுத்த பட்டுள்ளன. இவை அனைத்தும் வடமொழி சம்ஸ்க்ரித சொற்களாகும். இதன் பொருளை உணர்ந்து படிப்பதற்கும், யோகினி என்பது கடவுளர்கள் இல்லை. தேவர்களும் இல்லை, ஆனால் தேவர்களின் நிலைக்கு ஏறக்குறைய பெற்றிருக்கும் தேவதைகள் என்று சொல்லலாம். இவர்களை யோகிகளின் மனைவிகள் என்றும் துணை தேவதைகள் என்றும் சொல்ல படுவதுண்டு. இவர்கள் யட்சிங்கள், கணங்கள், பூதங்களுக்கும் சற்று மேலே சக்தி பொருந்திய தேவதைகள் என்று சொல்ல படுகின்றன. இதற்க்கு மந்திரங்கள் உபாசனை முறைகள், அதற்க்கான பலன்கள் உண்டு என்று அதர்வ வேதமும் யோகினி தந்திர உபாசனை நூல்களும் குறிப்பிடுகின்றன. இவர்களை அம்பிகை பண்டாசுரனுடன் போர் புரிந்த காலத்தில் தன் உப தேவிகளுக்கு துணை யாக போர் புரியவும், அசுர படைகளின் மேல் போர் செய்ய 64 படை தலைவிகளும் தேவைக்காக இவர்களை படைத்ததாகவும், இவர்கள் கீழ் முறையே 1000 கோடி தேவதைக

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண
காமினி யோகினி - பகுதி 10 காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!! எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள்.  கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்களுக்கு  பரபரப்புடன் மற்ற மூவரையும் உலுக்கினாள். மெல்ல மற்ற மூவரும் முனகி கொண்டே நெள