Skip to main content
காசுக்கு போட்ட கோஷம்

காலை மணி 9:45. அண்ணா சாலையில் வழக்கம் போல பல் பசையை பிதுங்கி பசை எடுப்பது போல மெல்ல மெல்ல ஊர்ந்து சென்ற வாகனங்கள் அவைகளின்  ஜனத்தொகை பெருகியதை காட்டி கொடுத்தது. ரகு நந்தனுக்கு ரத்தம் கொதித்தது. முன்னை போல நேரம் கழித்து proxy போடும் நிலைமையில் அவன் வேலை பார்க்கும் மத்திய அரசு அலுவலகம் இல்லை. அண்ணா சாலையில் கூட்டம் தள்ளியது. என்னவென்று பார்த்தான் .
"போராடுவோம்! போராடுவோம்!"
"மத்திய அரசே! மாநில அரசே காவேரி தண்ணீரை தர மறுத்த மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமறுத்த மத்திய அரசே! கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!"  மோடி ஒழிக! என்று கோஷம் ஒலித்தது! "ஆமாம் மோடி ஒழிக  நம்மை ஆபீஸ்ல வேலை பார்க்க சொல்லுறான் என்று மனதிற்குள் சொல்லி சிரித்து கொண்டான் ரகு நந்தன்.
"சரி இனிமே பஸ் ஓடாது லேட்டா ஆகும் போல இருக்கே!" என்று சொல்லி அவன்  மேலாளருக்கு  அழைத்துவிட்டு சார்.. என்று இழுத்தான். "தெரியுமய்யா ரோடு ரோக்கோ தானே நானும் அந்த பக்கம் தான் நிக்கிறேன். ஆஃபிஸில் க்கு இன்பர்மேஷன் கொடுத்தாச்சு! ஆபீஸ் முன்னாடி நின்னு கட்சி காரங்க தகராறு செய்யுறாங்களாம், சோ பெர்மிசன் தரேன் மெதுவா வாங்க" என்று சொல்லி துண்டித்தார். "அப்பாடா!  கவலை வேண்டாம்" என்று சொல்லி விட்டு, அவன் வழக்கமாக டீ அருந்தும் ஹோட்டலுக்கு சென்றான். கூட்டம் இருந்தது.  இன்று சற்று துணி கஞ்சியை சேர்த்து குடித்து விட்டது போல கடமை உணர்வு போங்க போலீஸ் வழக்கமாக கடையை அடைக்க சொல்லிக்கொண்டு திமிறிக்கொண்டு சென்றனர். அங்கு வேலை பார்க்கும் நாயர்"கடையே கட்சி கரங்களோடது நாங்க பார்த்துக்குறோம்" என்று அசால்டாக சொன்னார். ஒரு புன்சிரிப்புடன் அங்கு வந்த எஸ் ஐ சரி விடுங்க நாயர் புது பசங்க நம்மளை பத்தி தெரியாது இல்ல  நம்மளுக்கு ஒரு செட் டீ வடை  என்று சொல்லிவிட்டு தொந்தியை தள்ளிகொண்டேய பந்தோபஸ்துக்கு நின்றார். "நாயர் ஒரு டீ!" என்று சொல்லி உள்ளே நுழைத்து கொண்டான் ரகு.
"அட! என்ன ரகுநாதன் சாரே எந்த உள்ளே டைம் ஷீட்டு மெஷின்  தர்ணா செய்யுன்னதோ?"  என்று சொல்லி கிண்டலடித்தார்.
"அட போங்க நாயர், இவனுங்க என்னவோ இன்னிக்கி மறியல் செய்யுறாங்க ன்னு தெரிஞ்சிருந்தா லீவ் போட்டுருப்பேன்!". என்று சொன்னான்.
"எண்டே நாட்டில் தர்ணா போராட்டம் ன்னு சொல்லியாச்சுன்னா இப்பிடி இருக்காது கேரளாவே ஸ்தம்பிக்கும் அவ்வளவு ஸ்ட்ரோங் ஆப்போஸிஷன் இருக்கும் இவிட எல்லாம் ஷோ கட்டுண்ணது" என்று கிண்டலடித்தார். 
"ஆமா! இவங்க எத்ரே வருஷம் காவேரி வெள்ளம் விடணும்னு தர்ணா  பண்ணுது ஆ ஸ்டேடில் கெர்நாடக மக்கள் சவுட்டி கலையின்னாது, ஈ தமிழ் நாட்டில் மக்கள் பிச்சை எடுக்குனது போல டீவீ லேயும் நியூசிலேயும் காட்டி சே அவமானம்!"
 என்று சொன்னார் நாயர்.
"ஆமாம் நாயர் இவனுங்க என்னவோ சொந்த செலவுல போர் போட்டு தண்ணி தர்ர மாதிரி தான் ஓவர் ஸீன் போடுறது. மழை பெய்யுது இவன் பிடிச்சி வேசிக்குறான், ஆறு ஓடுனதான் மணல் கிடைக்கும், அது கூட தெரியாம இப்போ மணலும் கிடைக்காது தண்ணீரும் வராது விவசாயம் போச்சு, என்ன கண்றாவியோ!" என்று சொல்லி சுற்று முற்றி பார்த்தான். பல தரப்பட்ட கட்சி கொடிகள் வண்ணவண்ணமாய் பறந்தன, பைக்கிலும் கார்களிலும் வேன்களுமாக சாலை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டு நின்றன. எங்கு பார்த்தாலும் ஒரு வித செயற்கை, மைக்கில் கோஷங்கள் சம்பந்தமே இல்லாமல் எதோ டண்லடு ட்ரம்பை வடபழனியில் வைத்து  கிண்டலடிப்பது போல மத்திய அரசு ஒழிக கோஷம் போட்டு கொண்டிருந்தன.
வெயில் பட்ட சில்லிட்ட தண்ணீர் பாட்டில் வேர்த்துக்கொண்டிருந்தது போல பலரின் உடலும் வெயிலில் வியர்வை ஊற்றி கொண்டிருந்தது. கேடயம் போல மோதிரம் போட்ட கைகள் மின்ன வெள்ளை சட்டை போட்ட பல மீசை கறுப்பர்கள். கட்சி கொடி வண்ணத்தில் தலைக்கு கலர் டை அடித்த பல செல் போன் செல்ஃ பி இளைஞர் அணிகள் எப்படா காலேஜ் க்கு கட் அடிக்கலாம் என்று துடியாய் துடித்து கொண்டிருக்கும் இளசுகள். கமிஷனிலேயே கண்ணாக கலெக்சன் செய்து கொண்டிருந்த வட்ட செயலாளர்கள். கோழி பிரியாணிக்கு குவாட்டருக்கு தள்ளு முள்ளு செய்து கொண்டிருந்த கழக குடி மகன்கள்,  குட்டி நகை கடைகள் போல கங்கணம் போட்ட வளையல்களுடன் காளி கோயில் மதில் சுவரில் குந்தி இருக்கும் சுதை பெண் தெய்வங்கள் போல பல மகளிர் அணி கழக கண்மணிகள். தங்கள் டி வி தான் கவரேஜ் காட்டி விட வேண்டும் என்ற வெறியில் மைக்கை உடைவாள் போல சுழற்றி சுற்றி வந்து பிசாசு போல கத்தி கொண்டு ரத்தம் வருமளவிற்கு  மூக்கில் குத்தி தலைவர்களை பேட்டி எடுக்க வந்த பல ரிப்போர்ட்டர் கள்ளமணிகள். எவன் வேணும்னாலும் அடிச்சிக்கிறான் நீ வா ஓரமா வேடிக்கை பார்ப்போம் என்று லத்தியை ஒய்யாரமாக சுற்று கொண்டு புது பெண் காவலர்களை கடலை போட்ட காவல்துறை, முழுக்க மூடிக்கொண்டு கண்கள் மட்டும் தெரியும் படி புது வகை பார்த்தாக்களில் நின்று கொண்டிருந்த ஆபீஸ்  மார்டன் ஆச்சார பெண்கள் பலரும் தங்கள் ஸ்கூட்டியையும் ஆக்டிவாக்களையும் உருமா விட்டு இன்னமும் நின்று கொண்டிருந்தனர். எப்படா  க்ளியர் பண்ணுவீங்க என்று கேட்காத குறையாக ஆம்புலன்ஸ்கள் அலறின. பலரும் சாஸ்திரத்திற்கு விரோதமில்லாமல் தங்கள் செல்லினை நோண்டி கொண்டிருந்தனர்.
இவ்வாறு பல சம்பவங்களையும் பார்த்துக்கொண்டிருந்த   
 சரியாய் போச்சு இவனுங்களை எதிர்த்து இவர்களே கோஷமா, என்று நக்கலடித்தார் பக்கத்தில் இருந்தவர். அப்போது சிலர் கட்சி கொடியுடன் மயங்கி கிடந்த ஒருவரை அவசரமாக அள்ளி தேனீர் கடைக்கு அருகில் கிடத்தினார். என்னாச்சு என்று பரபரப்புடன் அவனை நோக்கினான் ரகு. கலைந்த தலையும் நனைந்த கட்சி கொடி போட்ட சட்டை அணிந்த ஒரு நடுத்தர வயது ஆன் கிடந்தான். கிராமத்திலிருந்து ஆட்களை வேனில் ஏற்றி கொண்டு வந்து கோஷம் போட்டு கொண்டிருந்த கூட்டத்தில் இருந்தவன் என்று தெரிந்தது. உடனே தண்ணீரை பாக்கெட்டிலிருந்து வார்த்து அவன் வாயில் விட்டான் ரகு. டேய் குமரா! டேய் என்னடா இது என்று பதறி போனான். குமரன் அவன் தம்பியின் சிநேகிதன் அவன் ஊர்க்காரன். இங்கு எப்படி வந்தான் என்று புரியவில்லை.
குமாரா என்று கன்னத்தில் தட்டி அடித்து மயக்கத்தை தெரிவித்தான் ரகு. அண்ணே என்று மெல்ல கண்ணை திறந்து பார்த்து விழித்தான் குமரன். டேய் என்னடா இது கோலம்? எதுக்கு டா நீயெல்லாம் இங்க வந்த?என்று கேட்டான் ரகு. அண்ணா ரகு அண்ணா! பசிக்குதுண்ணா! என்று பதில் வந்தது. சற்றும் யோசிக்காமல் நாயர் தட்டில் கொஞ்சம் வடை அவர் வைத்திருந்த சோற்று குழம்புகளை ஊற்றி அவனிடம் கொடுத்து கழிக்கு என்று ஸ்திரமான பார்வையுடன் சொன்னார். கொஞ்சமும் யோசிக்காமல் குமரன் பாய்ந்து வாங்கி கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
அத்தனை சத்தங்களிலும் மெளனமாக நேரம் கடந்து சென்றது.
சற்றே தெம்பு வந்தவனாய் அழுத கண்களுடன் குமரன் சாப்பிட்டு கொண்டிருந்ததை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். குமரன் அவ்வூர் கோயில் குருக்களின் மகன். குமரன் தாத்தா ஒரு கனபாடிகள். பஞ்சாங்கமும் பார்ப்பார், பல கோயில் கல்யாணம் விஷேஷம் என்றாலும் அவர் தான் வேத காரியங்களை செய்து வைப்பார். நல்ல செல்வந்தராய் வாழ்ந்த குடும்பம்.   அப்போது நல்ல சொத்து ஆனால் குமரனின் அப்பாவுக்கு வேதம் அவ்வளவாக படிப்பு வரவில்லை. ஆனாலும் கொஞ்சம் திறமைசாலிதான் கோயில் கல்யாணம் தேவசம் கார்யமென்று  மற்றவர்களுக்கு உதவிக்கு சென்று கொண்டிருந்தார். நில உச்சவரம்பு சட்டத்தின் படி தாத்தாவின் நிலம் போயின, போராடி பார்த்தனர்  என்றாலும் அவரால் ஊரை ஜெயிக்க முடியவில்லை, இந்த கவலையில் தாத்தா காலமானார் இவர்களை வெறுத்த மற்ற பெரிய மனிதர்கள் சொத்தை தங்களுக்கு தரவில்லை என்று  குமரனின் அப்பாவுக்கு வேலை கிடைப்பதில் தடை செய்தனர்.நல்ல பள்ளியில் படித்து கொண்டிருந்த குமரன் கல்வி தடை செய்ய பட்டது  வறுமையில் தவித்த அவர்களின் வருமானம் அந்த ஊர் சிவன் கோயில் தேங்காய் மூடியில் காலத்தை கழித்தது. குமரன் ரகுவின் அப்பா மூலம் ஒரு மடத்தின் சேர்த்து அவனுக்கு வேத பாட சாலையில் சொல்லி வைத்தனர். அவனும் நன்கு படித்தான்.படிப்பு நன்கு வந்ததினால் அவர்களே ஸ்காலர்ஷிப்பில் பள்ளி செலவையும் வேத பாடத்தினையும் கவனித்து கொண்டனர்.  அவன் அப்பாவுக்கு சற்று நிம்மதி. ஆனால் குமரனுக்கு காலேஜில் இன்ஜினியரிங் படிக்க ஆசை. இடம் கிடைத்தும் அவனால் பணமில்லாமல் படிக்க முடியவில்லை. சரியென்று அஞ்சல் வழி தேர்வில் பீ காம் படித்தான். ராகுவின் தந்தை அவனுக்கு உதவி செய்தார்.   ரகு நந்தன் மத்திய அரசு தேர்வில் படிக்கிறான் என்று தெரிந்ததும் அவனுடன் ஏதாவது கிடைக்குமா என்று பல்வேறு துறைகளில் வேலை தேட தொடங்கினான். அப்போதைக்கு அவன் ராசி அவனுக்கு வேலை கிடைக்க வில்லை, தே சோகத்தில் அவன் அப்பாவும் படுத்த படுக்கையானார். ரகுவிற்கும் அவன் தம்பிக்கும் எப்படியோ எம் பி சிபாரிசு செய்து அவன் அப்பா  வேலை க்கு ஏற்பாடு செய்து விட்டார். டில்லிக்கு சென்று தேர்வில் முடித்து விட்டு இப்போது அவன் தம்பியும் வேலைக்கு அமர்ந்து விட்டான். இடைப்பட்ட நாட்களில் அவனால் குமாரனை தொடர முடியவில்லை. இப்போது அவன் இருந்த நிலைமையில் அவனை பற்றி நினைக்க கூட இல்லை. இப்போதுதான் குமரனை பார்க்கிறான்.
டேய் என்ன ட இது என்னாச்சு ட உனக்கு சொல்லு என்று கேட்டான். அண்ணா என்னன்னா சொல்றது அப்பா போய்ட்டார். நீங்களும் வந்துடீங்க எதனை முறைதான் அப்பாவை நான் தொல்லை பண்றது. வேதம் படிச்சவங்களை மதிக்க இந்த சமூகம் தயாரில்லை. நான் கொஞ்சம் மாரி யோசித்தேன். கோயிலிலே போன வேலைக்கு சேர்த்துக்க பத்து  லட்சம் கேட்கிறா. நா எங்க போவேன்  மெட்றாஸ் வந்தேன் யாரையும் தெரியல்ல. நான் ஏன் கூட வேதம் காத்துக்கிட்டவங்க   நம்பர் வாங்கி வைக்கல. மடத்துக்கு  போனேன் கொஞ்ச நாள் இருக்க சொன்னா. அம்மாவுக்கு நெஞ்சு வலி வந்தது. டாக்டர் கிட்டே காண்பிச்சேன் ஸ்டாண்ட் வைக்கணும் ன்னு சொல்றா. இப்போதைக்கு இருக்கிற ஒரே ஆறுதல் எனக்கு ரயில்வே ல வேலைக்கு சேர கால் லெட்டர் வந்தது நீ சொன்ன எக்ஸாம் தான் அப்போ எழுதினது ஆனா என்கிட்டே கொஞ்சம் கூட காசில்லை. அங்கேயும் லஞ்சம் கேட்டே கொடுக்க முடியாது. ஏன் அங்கே போக கூட காசு கிடையாது என்ன பண்றதுன்னு தெரியல. இங்கே தான் காவேரி க்கு போராட கட்சி காரன் கோஷம் போட்ட 500 ரூபா தரனாம். ஒருத்தன் சொன்னான் நா பிரியாணி சாப்பிட மாட்டேன் அதனால பட்னியாதான்  இருதேன் அவன் 200 கொடுத்தான். அம்மாவுக்கு இன்னிக்கி மாத்திரை வாங்கணும் அதான். என்று கொட கொடவெண்டு குழந்தை மாதிரி அழுதான்.
ரகு நந்தன் தீர்க்கமாக எழுந்தான்.  டேய் நான் இன்னிக்கு லீவு போட்டுட்டேன் அம்மாவை பார்க்க போகலாம் இனிமே இந்த காசுக்கு போடுற கோஷம் வேண்டாம் உழைச்சு பிழைக்கலாம். இனி இந்த பிழைப்பு நமக்கு வேண்டாம் வா! என்று சொல்லி அவன் கையை கொடுத்து தூக்கினான். 

Comments

Popular posts from this blog

KAmini_Yogini4

காமினி யோகினி 4 இந்த கதையில் பல சொற்கள் பயன்படுத்துவதால் அதன் அர்த்தத்தை எனக்கு தெரிந்த வரையில் கூறுகிறேன். ஜபம்- உரு போடுதல் உபாசனை- தீவிர பிரார்த்தனை சாதனை - செயலாக்குவது கிரியை-செயல், பிரயோகம்- பயன்படுத்துதல் என்ற வார்த்தைகள் பயன் படுத்த பட்டுள்ளன. இவை அனைத்தும் வடமொழி சம்ஸ்க்ரித சொற்களாகும். இதன் பொருளை உணர்ந்து படிப்பதற்கும், யோகினி என்பது கடவுளர்கள் இல்லை. தேவர்களும் இல்லை, ஆனால் தேவர்களின் நிலைக்கு ஏறக்குறைய பெற்றிருக்கும் தேவதைகள் என்று சொல்லலாம். இவர்களை யோகிகளின் மனைவிகள் என்றும் துணை தேவதைகள் என்றும் சொல்ல படுவதுண்டு. இவர்கள் யட்சிங்கள், கணங்கள், பூதங்களுக்கும் சற்று மேலே சக்தி பொருந்திய தேவதைகள் என்று சொல்ல படுகின்றன. இதற்க்கு மந்திரங்கள் உபாசனை முறைகள், அதற்க்கான பலன்கள் உண்டு என்று அதர்வ வேதமும் யோகினி தந்திர உபாசனை நூல்களும் குறிப்பிடுகின்றன. இவர்களை அம்பிகை பண்டாசுரனுடன் போர் புரிந்த காலத்தில் தன் உப தேவிகளுக்கு துணை யாக போர் புரியவும், அசுர படைகளின் மேல் போர் செய்ய 64 படை தலைவிகளும் தேவைக்காக இவர்களை படைத்ததாகவும், இவர்கள் கீழ் முறையே 1000 கோடி தேவதைக

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண
காமினி யோகினி - பகுதி 10 காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!! எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள்.  கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்களுக்கு  பரபரப்புடன் மற்ற மூவரையும் உலுக்கினாள். மெல்ல மற்ற மூவரும் முனகி கொண்டே நெள