Skip to main content

Kamini_Yogini 5

காமினி யோகினி 5


இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனுக்கு இன்று தினசரி ராசி பலன் பார்த்திருப்பார் என்றால் அவருக்கு இன்று அதிர்ச்சி ஆச்சரியம் எதிர்பாராத திருப்பம் என்றே போட்டிருக்கும். அன்று அவர் அலுவலகத்திற்கு ஒரு ஃ போன் வந்தது.
அதில் காமினி இருக்கும் இடம் தனக்கு தெரியும் என்றும் உடனே தான் சொல்லும் இடத்திற்கு வருமாறு சொல்லிவிட்டு மறுமுனையில் இருந்த நபர் தொடர்பை துண்டித்து விட்டார்.

அந்த இடம் ஊட்டி மைசூரு  ஒட்டி ஒரு மலை கிராமம் என்று தெரிந்து கொள்ளவே சுவாமிநாதனுக்கு பத்து நிமிடம் பிடித்தது. அங்கு எதற்காக இந்த நபர் வர சொல்கிறான் என்று சந்தேகி த்துக்கொடே ஒரு சிகரெட்டை பற்ற வைத்து கொண்டார். இப்போதெல்லாம் அவருக்கு இந்த பழக்கம் புதிதாய் தொத்தி கொண்டது. கங்கா அவளின் பதவியையும் மீறிய ஒரு உரிமையில் கடிந்து கொண்டாள் . அதனால் இந்த பழக்கத்தை ஒருவாறாக  கட்டு படுத்த படாத பாடு பட்டு கொண்டிருந்தார்.
கங்கா என்னமா! அங்க உனக்கு தெரிஞ்ச ஆளுங்க  யாராவது அங்கே இருக்காங்களா? என்று கேட்க இருக்கானே சார் என்ன ஒண்ணுவிட்ட அண்ணன் மவன் கான்ச்டபிள் செல்வம். என்று ஒரு போடு போட்டு விட்டு அவன் என்னை டயல் செய்ய ஆரம்பித்து விட்டாள் . இவளுக்கு இந்தியா பூரா சொந்தக்காரங்களை வெச்சிருப்பாளா ? என்று சற்று அதிர்ந்து போனார் சுவாமிநாதன்.

------------------------------------------------------------------------------------------------------------------

மணி பன்னிரண்டை நெருங்கிக்கிண்டிருந்தது

தீக்ஷண்ய ஸ்வாமிஜி தன்னிலை மறந்து யோகினி ஜெபத்தை நடத்தி கொண்டிருந்தார். அவர் தோளில் மிருதுவான ஸ்பரிசம் பட்டது. அன்பரே! எழுந்திரும் என்று யோகினி அவரை எழுப்பினாள். அவர் முகம் ஆயிரம் மின்சார விளக்குகள்  ஜொலித்தது. வந்துவிடாயா யோகினி என்று வாஞ்சையுடன் பற்றினார்.
பின்னிரவு முழுவதும் அவருக்கு யோகினி சுகத்தினை அல்லி தெளித்து    கொண்டிருந்தாள். அன்பரே! உங்கள் ஜாதகத்தினை என்றேனும் உணர்ந்துள்ளீர்களா? என்று  கேட்டால். தாம்பூலத்தினை சுவைத்துக்கொண்டு இல்லை  கவலை இல்லை, நீ  நான் ஏன் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?  என்றார்.யோகினி , உங்கள் ஜாதக படி அஷ்டம சனியும் சுக்கிரனும் வக்கிரம்  பெற்றுள்ளனர்.என்றாள் . இதனை கேட்ட தீக்ஷண்ய ஸ்வாமி முகம் பேயறைந்தது போல உள்ளது  உங்களுக்கு கண்ட சனி வந்திருக்கும் காலம் இது. இதனை நீங்கள் எப்படியேனும் ஜெயிக்க வேண்டும். மேலும் சந்திரனும் புதன் உங்களுக்கு  சாதகமாக இல்லை சந்திரன் மனத்துக்காரன். ஆகவே  நீர் எதையும் இனிமேல் சர்வ ஜாக்கிரதையாய் செயல் படுத்தவேண்டும். கவனம்! இது தேவ ரகசியம், இதனை கணவன் மனைவிக்கும் தெரிவிக்கலாகாது, இதனால் எனக்கு என்ன ஆகுமோ என்றும் எனக்கு தெரியாது, மற்ற உபாசகங்களை விட நீ சிறப்பு பெற்றவர் ஆகவே உங்களுக்கு இதனை சொன்னேன். உங்கள் வாக்கோ செயல்பாடுகளோ  உங்களை என்னிடமிருந்து  பிரித்து விடலாம். நினைவிருக்கட்டும் நீங்கள் வேறு பெண்களிடமிருந்து ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் இல்லையெனில் மரணம் நிச்சயம் .
இதனை தடுக்க வழியே கிடையாதா? என்றார் தீக்ஷண்ய ஸ்வாமி.   இருக்கிறது உம்மிடம்  ஒரே நட்சத்திரத்தில், அதுவும் மிருகஷீரிஷ நட்சத்திரமாக இருந்தால் உன் ஜாதகத்திற்கு விசேஷம்  நீ ஒரே நேரத்தில் நான்கு கன்னிப்பெண்களையும் மயானக்காளிக்கு ஆத்ம பிரசாதம் அளித்தால் உன் ஆயுள் தப்பும் என்றாள். இது நடக்குமா என்றார் தீக்ஷண்ய ஸ்வாமி முயற்சி திருவினையாக்கும். மேலும் இதனை ஒரு மாத்திற்குள் முடிக்க வேண்டும் நிறைந்த அமாவாசையில் முடிந்தால் உனக்கு சகல காரியமும் சிரஞ்சீவி தன்மையும் கிடைக்கும்.

அப்படியே செயகிறேன் எனக்கு இன்னொரு உதவியும் வேண்டும் என்றார் தீக்ஷண்ய ஸ்வாமி என்ன கூறும் என்றாள்  யோகினி, எனக்கு நிறைய ஸ்வர்ண பாளங்கள் வேண்டும் இந்த மடத்தினை நான் விரிவு படுத்தி ஒரு பெரிய அமைப்பாக உருவாக்க வேண்டும் அதற்க்கு இந்த உதவியை தேவி அருள வேண்டும் என்றார். எம்மை விடவும் பெரும் அழியாப்பதவியம் பரம்பொருளை உணரும் யோக சித்தியினை விட்டு சிற்றின்பத்திலேயே  இந்த மானிடர்கள் அலையும் அல்ப ஆசைகள் என்னே! என்று யோகினி நினைந்து சிரித்தாள்.
அதற்க்கென்ன தந்தேன்! ஆனால் பேராசை பெருநஷ்டம்.  உமக்கு இயற்கையிலேயே வசிய சக்தி உள்ளது. நான் இதுவரை கொடுக்கும் பொன்னும் நகைகளும் உமக்கு போதும். ஆயினும் உமக்கு ஒரு பக்ஷத்திற்கு  பொருள் தரும் வசியத்தினை அளிக்கிறேன். விதி வசத்தால் யாரேனும் உம்மை காண வந்தால் அவர்கள் உம்  வாக்கினால் அடிமை படுவர்.  அது ஒரு பக்ஷத்திற்கு வேலை செய்யும் அப்படியே கொடுங்கள் என்று சொன்னார். அவள் தன் வாய் தாம்பூலத்தில் ஒரு சிறு துளியை ஏந்தி அவர் வாயில் விட்டாள். இதையும் உமக்கு தருகிறேன் என்று சொல்லி அவள் அணிந்திருந்த நகைகளை அனைத்தையும் களைந்து  விட்டு  ஒற்றை ஆடையுடன் மறைந்தாள்.
------------------------------------------------------------------------------------------------------------------
சம்பத் படுத்திருந்த இடம் மிகவும் புதுமையாகவும் புதிராகவும் இருந்தது. அது மலை குகைகளிலேயே ஒரு பெரும் குகை. அங்கு வெளிச்சம் என்பது மருந்தளவிற்கு கூட இருக்க கூடாது. ஆனால் நல்ல உற்சாகம் அளிக்கும் விதமாக நறுமணமும், மூலிகை வாசமும் கொண்ட புகை அவன் நாசியை சுற்றியது. அவனை சுற்றி நல்ல வெளிச்சம் நிறைந்திருந்தது. புன்னகையும் தெளிவும் கொண்ட ஒரு மனிதர் அவனை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார். அவர் தாடி மீசைகளை தாண்டி ஒரு மெல்லிய புன்னகை மலந்திருந்தது. எழுந்துட்டியா சம்பத்? எப்படி இருக்கே? என்று ஒரு தெளிவான குரல் அவன் காதுகளில் ஒலித்தது. அந்த கண்கள். அப்பா வைரங்கள் டால் அடிப்பது போல எத்தனை தேஜஸ்! அந்த பார்வை சொக்க வைக்கும் திறன் உடையதாய் இருக்க வேண்டும். எத்தனை தீர்க்கமான அருள் பார்வை.
சம்பத் மெதுவாக  எழுந்தான். அவன் உடலை கூறு போட்டால் போல் வலியினை ஒருவாரமாக அனுபவித்து வந்தது அவன் நினைவிற்கு வந்தது. அப்போது அவன் பார்த்தது அந்த முகமம்  அந்த கண்களும் மட்டுமே, அப்புறம் அவன் இறந்து விட்டதாகவே அவன் நினைத்திருந்தான். இரண்டு நாட்களில் அவன் சற்றே சுயநினைவுக்கு திரும்பிய பொது உடல் எங்கும் தீ காயங்களும் கால் எலும்பு இரண்டாக பிளந்திருந்ததும் அவனுக்கு நினைவு வந்தது. முகத்தில் ஒரு எரிச்சல் நிச்சயம் அவன் முகம் தீயினால் சிதைந்து போயிருக்கும் என்று  நினைத்திருந்தான். அந்த நினைப்பு இப்போது மிரட்டவே உடனே அவன் கை கால்களை பார்த்தான். ஒரு இடத்திலும் தீக்காயங்கள் இல்லை, அவன் கால் எலும்பு முறிந்தது போல நினைவு. ஆனால் அந்த இடத்தில் சற்றே வலி இருந்தது  தவிர காயங்களை காண வில்லை. முகத்தை தடவி பார்த்தான் ஆனால் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவன் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை.
என்ன நாம உயிரோட இருக்கோமா  இல்லை செத்து போயிட்டோமா  இல்லை செத்தவன் எப்படி பிழைச்சேன்னு பார்க்கிறாயா? என்று கடகடவென்று சிரித்தார்   பாலைசித்தர் என்று அழைக்க பெற்ற சிவா ஸ்வாமிகள்.
======================================================================

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
Kamini_Yogini 7 காமினி_யோகினி 7 எஸ் பி ஸ்வாமிநாதன் கொஞ்சம் ஆடித்தான் போனார். அடேயப்பா! என்னய்யா இது? இந்த ஆசிரமன்தான் இவங்க எட் ஆபிஸா? என்றார் ஆச்சரியம் தாளாமல் இல்ல சார்! இது இவங்களோட தமிழ்நாடு பிராஞ்சு ஆபீஸ் சார் .எட் ஆபீஸ் மைசூரில் இருக்குது சார். என்றாள் கங்கா ஓ அப்படியா! இந்த பிள்டிங்கே  கோடி கணக்கிலே மதிப்பிற்கும் போல இருக்குதே இதுவே மாளிகை போல இருக்குதுன்னா அப்போ அங்கேனே? சொர்க்கம் போல இருக்கும் சார்  அதோ அங்க பாருங்க! என்று கங்கா சுட்டி காட்டிய திசையில் படிய வாரிய தலை, கொஞ்சம் மாநிறம். நரைத்த திருத்தப்பட்ட மீசை தாடி. அகலமான நெற்றியில் குங்கும பொட்டு.  இளம் சிவப்பு நிற வெட்டி அதில் வெள்ளை பச்சை நீல கரை கதர் சட்டை வைர மோதிரம் பிரேஸிலேட் மின்ன வேட்டை நாய் போல கத்தி கொண்டிருந்த சேகரமூர்த்தி தென்பட்டார். பல பேர் அங்கு பளிங்கு தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதில் பலரும் வட நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் என்று அவர்கள் முகத்தை பார்த்த உடனே தெரிந்து கொண்டனர் போலீசார். பலர் பெரிய ரோஜா தோட்டத்தினை செப்பனிட்டு கொண்டிருந்தனர். வானளா...