Skip to main content

KAmini_Yogini4

காமினி யோகினி 4


இந்த கதையில் பல சொற்கள் பயன்படுத்துவதால் அதன் அர்த்தத்தை எனக்கு தெரிந்த வரையில் கூறுகிறேன்.
ஜபம்- உரு போடுதல்
உபாசனை- தீவிர பிரார்த்தனை
சாதனை - செயலாக்குவது
கிரியை-செயல்,
பிரயோகம்- பயன்படுத்துதல்
என்ற வார்த்தைகள் பயன் படுத்த பட்டுள்ளன. இவை அனைத்தும் வடமொழி சம்ஸ்க்ரித சொற்களாகும். இதன் பொருளை உணர்ந்து படிப்பதற்கும்,

யோகினி என்பது கடவுளர்கள் இல்லை. தேவர்களும் இல்லை, ஆனால் தேவர்களின் நிலைக்கு ஏறக்குறைய பெற்றிருக்கும் தேவதைகள் என்று சொல்லலாம். இவர்களை யோகிகளின் மனைவிகள் என்றும் துணை தேவதைகள் என்றும் சொல்ல படுவதுண்டு.
இவர்கள் யட்சிங்கள், கணங்கள், பூதங்களுக்கும் சற்று மேலே சக்தி பொருந்திய தேவதைகள் என்று சொல்ல படுகின்றன. இதற்க்கு மந்திரங்கள் உபாசனை முறைகள், அதற்க்கான பலன்கள் உண்டு என்று அதர்வ வேதமும் யோகினி தந்திர உபாசனை நூல்களும் குறிப்பிடுகின்றன. இவர்களை அம்பிகை பண்டாசுரனுடன் போர் புரிந்த காலத்தில் தன் உப தேவிகளுக்கு துணை யாக போர் புரியவும், அசுர படைகளின் மேல் போர் செய்ய 64 படை தலைவிகளும் தேவைக்காக இவர்களை படைத்ததாகவும், இவர்கள் கீழ் முறையே 1000 கோடி தேவதைகளை படைத்ததாகவும் ஆக மொத்தம் இவர்களுடன் சேர்த்து 64,000 கோடி  யோகினிகள் உண்டு என்று சொல்லப்படுகின்றன. ஆனால் உபாசனை தெய்வங்களாக இந்த 64 யோகினி களையே தாந்த்ரீகர்கள் அழைத்து, வேண்டியதை செய்து கொள்கின்றனர் என்று குறிப்பிட பட்டுள்ளது. இவலை உபாசித்தால் அவளோ அல்லது அவளது உப யோகிநியோ வருவாள் என்பது ஐதீகம்.என்றும் சொல்லப்படுகிறது.

 இந்த 64,000 கோடி யோகிநிகளுள் ஸ்வர்ண யோகினி நாக யோகிநிகலையே ஈன்றலவிர்க்கு நிறைய சாமியார்கள் உபாசனை தெய்வங்களாக வைத்து கொண்டுள்ளனர். எந்த மடத்தில் பாம்பு உபாசனை சிவன் அம்பாள் முதலியவைகள் உள்ளதோ அது நாக யோகினியை உபாசிக்கும் இடம். எந்த மடத்தில் நிறைய பொன் கலசங்களும் அந்த உபாசகர் நல்ல உடல் வலிமையையும் அழகும் பெற்று உள்ளாரோ அது ஸ்வர்ண யோகினி உபாசனை செய்யப்படும் இடம். இந்த யோகினிகளை  உபாசிப்பதற்கு ஒரு பெரிய வழிமுறையே வகுத்துள்ளனர். எந்த ஒருவன் ஸ்வர்ண யோகினியை உபாசிக்கிரானோ, அவன் தினமும் 3 முறை ஸ்நானம்  செய்து ஒரு மண்டலம் அவளின் மந்திரத்தினை உபாசனை செய்ய வேண்டும், இரவு சுமார் 11: 30 மணிக்கு தொடங்கி அதிகாலை 3:00 மணி வரை  அவளை உபாசனை செய்ய வேண்டும்.அந்த யோகினிக்கு உரிய சக்கரம் வரைந்து, அவளை நினைத்து, நெல் அல்லது அரிசி பரப்பி, அதில் ஏலம், லவங்கம், பச்சை கற்பூரம் கலந்து தீர்த்த குடத்தை நிரப்பி தேங்காய் வைத்து பூரண கும்பம் செய்து,  தென்னம் பூ பாளையினை நெல்லில் குத்தி வைத்து  கும்பத்திற்கு சந்தன குங்கும பொட்டு வைத்து, மஞ்சள் விநாயகரை பிடித்து வைத்து பூஜை செய்து பல வகை பழங்கள் நிவேதனம் செய்து, தூப தீபங்கள் ஆரத்தி காட்டி, அன்று முதல் அவள் நினைவை கொண்டு உருவாக படுத்தி அவள் மந்திரத்தினை உபாசனை செய்ய வேண்டும். தினமும் இரவு 11 :30 முதல் அதிகாலை 3:00 மணி வரை இதை செய்து வர வேண்டும் வெறும் தரையில் துண்டினை விரித்து படுக்க வேண்டும். பகலிலே உறங்கலாம், சாத்துவீக உணவையே உன்ன வேண்டும் சில பேர் உணவு உண்ணா மலே  கூட இதை செய்வர் .  

இப்படியே செய்து வர சில நேரங்களில் அவனுக்கு பல சோதனைகள் வரும், சில நேரங்களில் யாரோ சிலம்பு அணிந்து நடந்து செல்வது போல இருக்கும்.
சில நேரங்களில் பெண்களின் வளையல் சத்தம் கேட்க்கும், பூமி அதிரும். மிருகங்கள் உறுமலும் கேட்க்கும். பெண்கள் பெச்சுகுரல்களும் கிண்டலும் கேட்கும்.  சில பேர் தொடுவது போலவும் உணருவர். இதற்க்கு எல்லாம் பயப்படாமல் உபாசனை செய்ய வேண்டும். முறையே 48ஆவது  நாள் தேங்காய் அசைய ஆரம்பிக்கும். யோகினியும் பிரசன்னமாவாள்.
அன்று முதல் யோகினியை அவன் காணலாம். அவள் தான் அவனிடம் வசியமாகி விட்டதாகவும் அவனுக்கு எந்த முறையில் உதவ வேண்டுகிறான் என்பதையும் கேட்பாள்.

ஸ்வர்ண யோகினியை ஒருவன் 3 விதமாக வரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.   

ஸ்வர்ண யோகினியை தாயாக அவன் வரித்தால், அவனுக்கு அன்று முதல் தினமும் வித விதமான உணவு படைப்பாள். அவன் தன வாழ்நாளில் இது வரை கண்டும் கேட்டிராத உணவு வகைகளை அவனால் ருசிக்க முடியும்.அவன் வேண்டும் நேரம் தான் அவனுக்கு மரணம் ஏற்ப்படும். ஆனால் எந்த விதமாக வரித்தாலும் அவளால் சாவினை தடுக்க முடியாது. அன்று முதல் அவன் உடல் அழகும் அறிவும் பெற்று விளங்குவான்.

யோகினியை ஒருவன் சகோதரியாக வரிக்கிரானோ, அவள் அன்று முதல் அவனுக்கு அவன் பார்த்திராத பரிசு பொருட்களும், சுகங்களும் கிடைக்க செய்வாள். அவனை நினைத்த இடத்திற்கு இட்டு செல்லும் வல்லமை தருவாள். அவன் நினைத்த பொழுதே மரணிப்பான். 

எவன் ஒருவன் யோகினியை தன சகியாக, மனைவியாக வரிக்கிரானோ, அவன் அன்று முதல் அவளுக்கே உரியவன் ஆகிறான், அவனுக்கு உடல் பலம், எதையும் செய்விக்கும் ஆற்றல், பெரும் செல்வம் முக்கியமாக காமத்தில் சுகம் தந்து அவனை விட்டு அகலாமல் சூட்சுமமாக இருப்பாள். இந்த வகை யோகினிகள் தினமும் 100 பாரம் பொன் (10 கிலோக்கள்) பொன்னால் ஆன அணிகலன்களை அணிந்து வந்து அவனுக்கு சுகம் அளித்து விட்டு உடல் பலத்தினை தந்து விட்டு மறுநாள் அந்த தங்க அணிகலன்களை அப்படியே விட்டு விட்டு காலையில் தன் உலகத்திற்கு சென்று விடுவர். இப்படியே அவனுக்கு தினமும் 100 பாரம் பொன் சேர்ந்தால் அவன் கோடீஸ்வரன் ஆகி விடுவான்.இப்படியே அவன்  எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அவள் உபாசனையால் பெரும் சுகம் காணாலாம். அவன் வாழ்நாள் அவன் அனுமதியின்றி முடியாது.  ஒருமுறை அவளை உபாசனை செய்து விட்டால் அவளை விட்டு விலக முடியாது.  அவள் அனுமதி அளித்தால் மட்டுமே அவளிடமிருந்து விலக முடியும். அப்படி செய்யவில்லை என்றால்லோ வேறு பெண்களிடம் அவன் நாட்டம் வைத்தாலோ,அல்லது முறை தவறி அவர்களை புனர்ந்தாலோ அவன் கடுமையான யோகினி சாபத்திற்கு ஆளாவான். ஒன்று அவன் கொடூரமாய் உயிரிழப்பான், மற்றொன்று அவன் பின் ஜன்மத்தில் கேவலமான ஒரு உயிரினமாக பிறந்து துன்புறுவான் என்றும் அவனுக்கு கதி மோட்சம் கிடையாது என்பதும்  உண்மை.

நாக யோகினி உபாசனை என்பது பணத்திற்கும் ஆள் வசியதிர்க்கும் பெயர் பெற்றது, யார் ஒருவர் நாக உபாசனை செய்கிறார்களோ அவர்கள் குலதங்கரையிலோ ஆற்றங்கரையிலோ இந்த சக்கரதஹி வரைந்து ஆறு மாதங்கள் மந்திர ஜபம் செய்ய வேண்டும் நகங்கள் அவரை துரத்தும் பல சோதனைகள் வரும், இவ்வாறாக செய்து அதில் சித்தி அடைந்துவிட்டால், நாக யோகினி தோன்றுவாள் அவனுக்கு நினைப்பதை அடையும் ஆற்றலும் ,ஆளை வசியம் செய்யும் சக்தியும் சிறந்த பேச்சாற்றலும்,(வாக்கு வன்மை)அவனை காணும் யாரும் அவனிடம் தங்கள் செல்வதை கேள்வியே கேட்காமல் கொடுத்துவிடுவார், மேலும் மேலும் கொடுத்துகொண்டே இருப்பார். அவனிடமே தஞ்சம் புகுவர் இத்தகைய ஆற்றல் அனைத்தையும் தருவர். இதற்க்கு பிரதி பலனாக, நாகத்தினை அவன் எந்நேரமும் உபாசிக்க வேண்டும். எந்த கோயிலுக்கு புனித ஸ்தலத்திற்கு சென்றாலும், அவன் நாக உபாசனையே செய்ய வேண்டும்.அதுவே அவன் செலுத்தும் நன்றி கடன். 
=======================================================================

வண்டி கோவை போலீஸ் தலைமை அலுவலகத்தை நெருங்கி கொண்டிருந்தது. கங்காவும் சுவமினதணும் தூங்க முடியாமல் அவர்களுடைய மொபைல் பேசிகள் பேசிக்கொண்டே இருந்தன.  
இப்போ காலை கட் பண்ணுறியா இல்லையா?
அடேய் உங்கப்பன் உன்னை அடிக்கிரன்ன நான் லத்தி சார்ஜூ பண்ணனுமா! வடுவா ! விளையாடாம ஸ்கூலுக்கு போ! என்று கேக்கேவென்று சிரித்து கொண்டே செல்லை அணைத்தாள் அவள் எங்க அண்ணன் பையன் இருக்கனே சரியான சாமி பட பைத்தியம் ஏதேனும் யு டுபிலே அனுப்பிகிட்டே இருக்கிறான் கிறுக்கு பயல்.
உன் மாப்பிள்ளை பய்யன் எந்த சாமி படம் பாக்குறான்னு பாத்தியா? அது சாமியா ஆசாமியா ?
சார் தப்ப பேசாதீங்க சார்! இவன் பச்சை பிள்ளை!
அமாம் அமாம்! அந்த ரமேஷ் வீட்டு கேஸ் ரொம்ப கன்பியுஷனா இருக்கே!
உனக்கு ஏதாவது தோணுதா? என்று கேட்டார் சுவாமிநாதன். 
சார் இப்போ பொண்ணுங்களை கடத்தி பணம் பறிக்கிற குரூப்பு கிட்னாப் செஞ்சி மத்த ஸ்டேட்டுக்கு விக்கிற குறுப்பு எல்லாம் வேற டிவிசனுக்கு மாறிபோச்சு இங்கே அதை போல செய்ய யாரும் இல்ல, மேற்கொண்டு இவங்கள கடத்தினவன் இவங்க செத்து போயிட்டா மாதிரி செட் பண்ணி நம்மளை எல்லாம் திசை திருப்ப பார்த்திருக்கான் அப்போ அவங்கள உயிரோட வெச்சி எதோ செய்ய தான் பிளான் போட்டிருக்கான்.


ஆமாம் உண்மை தான்! ஆனால் என் இந்த மாதிரி செய்யணும்? அவங்க நோக்கம் தான் என்ன?
சார் ரமேஷு  பெரிய தொழில் அதிபர். அதுக்கும் மேல ரொம்பவே வேகமா வளர்ந்திகிட்டு வராரு, அவரை பகை தீக்கிரத்துக்கு தொழிலை அழிக்க சதி செஞ்சிருபான்களோ?
அப்படி செய்யனுமின்னா அவங்க எதுக்கு மத்த பொண்ணுங்களையும் சேர்த்து கடத்தி அவங்களும் செத்து போகிறா மாதிரி செட் பண்ணி விடனும்?
இப்போ து மீண்டும் குழப்பமானர்கள். அவர்களின் அலுவலகமும் வந்தது.
அப்போது அவர் மொபைல் போன் சினிங்கியது. 
சொல்லுங்க ரமேஷ்! என்ன ஈமெயில் அனுப்பி இருக்கீங்களா ஒகே  பார்க்கிறேன். என்று அவர் மின்னஞ்சலை பார்த்தார். ஒரு புண் முறுவல் பூத்தார். சுவமினதான்.
என்ன சார் அது என்று கங்கா வினவினாள்.
கங்கா ஒரு அருமையான லீடு கிடைச்சி இருக்கு. கொஞ்சம் இரு என்று அமைதி படுத்தினார். 

அவர் தம் உயர் கமிசனர் அவர்கள் அறையில்  இருந்தனர்.அவர் உள்ளே வந்ததும் விறைப்பாக சல்யுட்டு வைத்தனர். 
வாங்க சுவாமிநாதன், அந்த நாலு பெண்களின் விபத்து கேசு பத்தி விவரம் தெரிஞ்சதா?
ஆமாம் சார்! இப்போ தான் ஒரு முடிவு வந்திருக்கு. என்று விபத்து நடந்தது, அவர் லாரி டிரைவரை விசாரித்தது, கங்கா  மரபணு சோதனைக்கு ரத்த மாதிரிகளை சேகரித்து அனுப்பியது, பிரேதங்களின் மரபணுக்கள் மாதிரிகள் குடும்ப ரத மாதிரிகளுடன் ஒத்து போகாதது, என்று திட்ட மிட்ட கடத்தல் நடந்திருப்பது ஆகிய அனைத்து விவரங்களும் அவரிடம் தெரிவிக்க பட்டது.
ஆச்சரியமா இருக்கு, உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும். இதே போல நான் வட இந்தியாவிலே இருக்கும் போது ஒரு கேஸு  வந்தது, அடு ஆள் மாரட்ட கேசு ஆனால் சம்பந்த பட்ட பொண்ணு சாகல்லெ மாற அவளை கடத்தி வெச்சி இருந்தாங்க. அவள் செத்து போயிட்டன்னும் பாடி எரிஞ்சி போச்சுன்னும் சொல்லப்பட்டது. ஆனா எரிஞ்சது வேற ஒரு வயசான அம்மா. அவங்க மேல இந்த சேசு ப்ரூவ் ஆகல்ல ஆனாலும் ஒரே களேபாரம் ஆகி இருந்தது ஊரிலே.
அச்யுச்டு யாரு சார்?
தனி ஆளு இல்லே ஒரு ஆசிரமம். 
என்ன?
ஆமாம்!உங்களுக்கு கூட  தெரிந்து இருக்குமே..அதுக்கு பேரு கூட யோகினி மாய ஆசிரமம்!
சுவாமிநாதன் உடல் சிலிர்த்தது! 
இப்போ தான் சார் உண்மை புரியுது! இந்த இ மெயில் கொஞ்சம் பாருங்களேன் என்று அவரிடம் கட்டினார் சுவாமிநாதன்.
அது ரமேஷுக்கு யோகினி மாய ஆசிரமம் அனுப்பி இருந்த ஈமெயில். ஒரு வேலை இவங்க இந்த கேசிலே சம்பந்த பட்டு இருப்பாங்களோ? என்று சொல்லி கொண்டு இருந்தனர். 
சார்! பேய் சார்! பேய் சார்! என்று கத்தினாள் கங்கா!

========================================================================

நான்சென்ஸ்! கங்கா எங்கே இருக்கோம்னு தெரியாமல் மொபிலில் விளையாடிகிட்டு இருக்கீங்க! கொஞ்சம் கூட ரேச்பான்சிபிளிட்டி இல்லாமல் நெட்டிலே படம் பார்த்துகிட்டு இருக்கீங்களா? என்று கமிஷனர் கோபமாக கத்தினார்!
சார்! இல்லை சார்! மன்னிச்சிக்கணும். நான் படம் பார்க்கவில்லை சார்! நீங்க சொன்ன ஆசிரமத்தை பத்தி எனக்கு தெரியும்! அதில் என் அண்ணன் ஒரு உறுப்பினர் சார்! அத்தோட பிரசங்கங்களை எல்லாம் நெட்டுல விடியோ போடுவாங்க சார்! அவங்க பேறுதான இதுன்னு செக் பண்ணினேன் சார்! அதுல ஒரு விடியோ வந்திருக்கு சார். அதுல காணாமல் போன 4 பொண்ணுங்களும் இருக்காங்க சார். அது நால தான் என்னை அறியாமல் பயத்துலே கத்திட்டேன் சார் என்று மூச்சு வாங்க உளறினாள்.

திடுக்கிட்ட இருவரும் எங்க அந்த மொபைல்  இங்கே காமி என்று எழுந்தனர். 
அவர்கள் கண்ட கட்சி இருவரையும் திடுக்கிட வைத்து 

அது யோகினி மாய ஆசிரமத்தின் பிரச்சார வெளியீடு வீடியோ.அதில்  தீட்சின்ய சுவாமிகளின் சொற்பொழிவு இருக்கும்.இந்த சொற்பொழிவிலும் அவர் பேசி கொண்டிருந்தார்! அவர் பின்னால் சிறு அடியார்கள் கூட்டம் இருப்பது தெரிந்தது. அனைவைரையும் அருகே காண்பிக்க பட்டது. அதில் அந்த நான்கு பெண்களும் இடம் பெற்றிருந்தனர். அனைவரின் கண்களும் மேலே சொருகிக்கொண்டிருந்தன.அவர்கள் அனைவருக்கும் மடத்தின் சீருடை அணிவிக்க பட்டிருந்தது. ஆனால் அவர்கள் தோற்றத்தில் மட்டும் மாற்றம் ஏற்ப்படவில்லை. 

=====================================================================
தீட்சின்ய ஸ்வாமிகள் சம்பத்தின் மரணத்தை எண்ணி நொந்து கொண்டார். 
அவனை ஒரு பெரிய பணிக்காக ஒரு தவ யோகியின் தரிசனத்திர்க்காக அனுப்பி இருந்தார். அவன் செய்ய போகும் அந்த சாதனையில் தான் அவர் வாழ்க்கையே அடங்கி இருந்தது. 
ஆனால் துரதிர்ச்ட்ட வசமாக அவன் மரணித்தது அவருக்கு பெரும் கிலியை உண்டு பண்ணி இருந்தது. 
நாம் முன்னமே சொல்லி இருந்தது போல அவர் முன் காலத்தில் ஒரு பெரும் சக்தி உபசனையினை மேற்கொள்ள முயன்றார். ஆனால் அவருக்கோ அது சித்திக்கவே இல்லை. ஆனால் அவரால் அடைய முடிந்தது வெறும் யோகினி உபாசனை மட்டுமே. பிறவியிலேயே அவருக்கு தன சொந்த முயற்ச்சியால் பயனை அடையும் வழி பிடிப்பதில்லை ஆகையால் ஒரு மனிதனை முன்னே நிறுத்தி அவன் மூலம் ஒரு வேலையினை செய்வித்து, அதன் நற் பலன்களை தாம் பெற்றுக்கொள்ளும் மனோ பாவமும் சதா அதே முயர்ச்சியும் செய்து கொண்டிருந்தார். இதை உணர்ந்த அனைத்து யோகிகளும் அவருக்கு தரிசனமோ அல்லது தீட்சையோ கொடுப்பதில்லை. ஆனாலும் அவர் நேரே செல்லாது யார் மூலமாகவாவது அந்த உபசனையினை கிரியையை  கற்று சக்தி அடைந்திடுவார். மேலும் அதை பற்றி தெரியாமல் அதனை மேற்கொள்வது கிடையாது. இப்படி தந்திரமாக பல யோகிகளை தன் கட்டுக்குள் வைத்திருந்தார் அவர். அவர்களை ஒரு தொழிற்ச்சாலை போல உருவாக்கி வைத்திருந்தார் என்று சொல்லலாம்.
இதை பற்றி சம்பத்திற்கும் கூட தெரியாது வைத்திருந்தார் ஆனாலும் அவன் மூலம் பல தந்திரங்களை தெரிந்து வைத்து, அவனுக்கும் சில சித்துக்களை கற்று கொடுத்தார். ஆகவே அவன் துணை மூலம் பல தன்திரீக யோகிகளை அடைந்தார். அவர்களை ஆசிரமத்தின் பல பகுதிகளில் அடைத்து வைத்திருந்தார்.அப்படி சேர்க்கப்பட்ட அனைவருக்கும் பல பெண்கள் யோக உபாசனைக்காக தேவைப்பட்டது. அதில் மரணமே ஏற்படலாம் ஆனாலும் அவர்களாக முன்வந்து அல்லது மூளை சலவை செய்யப்பட்டு அல்லது சுயமாக செர்ந்தவர்க்ளாக இருந்தனர்.  அவர்களை பிடித்து தருவதே சம்பத்தின் தொழிலாக இருந்தது. 
===============================================================
இன்றுடன் 48 நாட்கள் ஆக போகிறது, நேற்றே தன்  யோகினி உபாசனை சித்தி பெற்றது என்று அவருக்கு தெரிந்து விட்டது. ஆனால் ஏனோ இன்னும் யோகினி அவருக்கு தரிசனம் தரவில்லை. இன்று ஒரு நாள் பார்த்து விட வேண்டியது தான், ஆனால் இது சித்திக்கவிட்டால் மறு படியும் ஒன்றரை மாதங்கள் வீண் போகும் என்று ஒரு வித அச்சத்துடன் இருந்தார். 

ஸ்டெல்லா அவசரமாக அவரை காண வந்தாள். முன் எப்போதும் அவள் சுவாமிகளின் தவத்தினை கலைத்ததில்லை. அவரை யாரும் அணுகாமல் பாதுகாப்பது அவள் மட்டுமே. சம்பத் சுவாமிகள் பல மாதங்களாக ஆசிரமத்திற்கு வருவதில்லை என்று அவளுக்கு தெரியும். அதனால் சுவாமிகள் இப்போது அவளிடம் அந்த பொறுப்பினை ஒப்படைத்து இருந்தார். இது வரை அவள் சுவாமிகள் உபாசனையினை ஒரு போதும் பார்த்ததில்லை. அவளால் தன்  தியானத்தில் ஒருவர் என்ன செய்கிறார் என்று இருந்த இடத்திலேயே காண முடியும். யோக சில உபாசனைகளினாலும் சில சாதனங்களினாலும் அவளுக்கு சித்திகள் கிடைத்தது, ஆனால் அவள் என்றுமே அதை தவறாக பயன்படுத்தியதில்லை. 
இன்று அதை பயன் படுத்த அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் உண்டாகி விட்டது. அவள் தன தியான முறைகளின் மூலம் சுவாமிகளின் மனதிற்குள் செல்ல முயன்றாள். சுவாமியின் காதில் யாரோ ஒரு பெண் பேசுவது அவர் பூட்டியிருந்த அறையிலும் கேட்டது.
சுவாமி இது ஸ்டெல்லாவின் குரல். கேட்கிறதா?
கேட்கிறது சொல் 
சுவாமி  இன்று ஒரு முக்கியமான தகவல் தர வேண்டும் 
சீக்கிரம் சொல் என்னுடைய பூஜைக்கு நேரமாயிற்று. 
சுவாமி சம்பத் சுவாமிகள் இங்கு வருகிறார்.
என்ன?
ஆமாம் சுவாமி உனக்கு எப்படி தெரியும்?
போனில் தகவல் கிடைத்தது.
நல்ல விஷயம் சொன்னாய் ஸ்டெல்லா அந்த மாதாவின் அருள் உனக்கு நிச்சயம் உண்டு!
நன்றி சுவாமி 
ஸ்டெல்லா தன முதல் சித்தினை இன்று வெற்றிகரமாக பிரயோகித்து விட்டாள்.
சுவாமியின் மனம் பெரும் குழப்பமாக இருந்தது. பூஜைக்கு நேரம் ஆனது.
சுவாமி எழுந்து மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு  பூஜை அறைக்கு வந்தார்.
தன் மனதை ஒருநிலை படுத்துவது அவருக்கு இன்று பெரும் பாடாக இருந்தது. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் மனம் மெல்ல தனக்குள்ளே கட்டளைகளை பிறப்பித்து கொண்டது. எப்படியும் சம்பத் கிடைத்து விட்டான். அவன் சாகவில்லை என்பதே நல்ல விஷயம் ஆயினும் அவன் செத்துப்போனது போல காண்பிக்க பட்டதன் சூட்சுமம் இன்னமும் புரியவில்லை. எது எவ்வாறு இருந்தாலும் அவன் இப்போது வந்துவிட்டான். நம்முடைய உபாசனையும் பலிக்க போகிறது யோகினியை சம்பத் வசிய படுத்தியது போலவே நாமும் வசிய படுத்த வேண்டும். அவனை எதனை நாள் தான் சொதனை  எலி போல வைத்து வேலை பார்க்கிறது? என்று மெல்ல மெல்ல அவர் தியானத்தில் லயிக்க தொடங்கினார். அவர் சிந்தனை ஒருநிலைப்பட்டது. எதிரில் அவர் வைத்திருந்த தேங்காய் அசைய தொடங்கியது. இதுவே அவர் செய்த உபாசனையினை யோகினி எற்றுக்கொண்டதர்க்கான சமிஞை என்று தெரிந்தது. மெல்ல அந்த அரை முழுவதும் நறுமணம் சூழ்ந்தது. நிலம் சற்று நகர்வது போல இருந்தது. பல ஒலிகள் அவர் காதில் கேட்டது. வெள்ளை வெளேர் என்ற தூய வெண் பட்டினால் ஆன ஆடை அணிந்து கொண்டு, தலை முதல் கால் வரை தங்க வைர நகைகளுடன்  மிகுந்த ஜோதி ரூபமாக யோகினி அவர் முன்னே தோன்றி சிரித்த முகத்துடன் நின்றாள்.
என்னை மனைவியாக உபாசனை செய்து எம்மை அழைத்தாய்! நாமும் வந்துவிட்டோம், இன்று முதல் நான் உமக்கு சகியாவோம்! இது சத்தியம் என்று கூறி ஒய்யாரமாக அவர் முன் நின்றாள்.
===============================================================
சம்பத் வெகு காலமாகவே மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தான். அதனால் பல வேலைகள் ஆசிரமத்தில் கெட்டு போயின. இதனால் சுவாமிகள் பெரும் மனஸ்தாபத்தில் இருந்தார். அவன் வெகு நாட்களாக சுவாமிகளிடம் மந்திர தீட்சை பெற வேண்டினான், அவனுக்கு யோகினி உபாசனை செய வேண்டும் என்று பல நாட்கள் ஆசை, இருந்தாலும் அவன் பல யோகிகளையும் உபாசகர்களையும் அவருக்கு தேர்ந்து அவர்களை இந்த இடத்தில் சேர்த்து சுவாமிகளுடன் பழக வைத்திருந்தாலும், அவர்களுடனோ அல்லது வேறு எந்த தவ யோகிகளுடனும் அவனை சேரவோ அவர்களுடன் கலக்கவோ விடுவதில்லை. அவரை கேட்கும் மன தைரியமும் அவனிடம் இல்லை. இந்த நிலையில் தான் அவன் இருந்தான். அந்த நேரம் வரும் வரை.
ஒரு நாள் சுவாமியார் அவனை அழைத்து ஒரு உபதேசமும் அதன் வழிமுறைகளையும் சொல்லி அவனை உபாசனை செய்ய சொன்னார். அவனும் சந்தோஷத்துடன் புது மந்திர தீட்க்ஷை கிடைத்த திருப்தியில் அமிகுந்த பக்தியுடன் உபாசனை செய்தான். அவனுக்கு யோகினி பிரசன்னமானாள். யோகினி வசிய முறைகளை எப்படியோ தெரிந்து வைத்திருந்த அவனுக்கும் இது தெரிந்தது. ஆனால் சூட்சும மந்திர பிரயோகத்தினை அவன் தெரிந்து கொள்ளவில்லை.

மந்திரம் கால் மதி முக்கால். அவனுக்கு சொல்ல பட்ட மந்திரம் யட்சி வசிய மந்திரம் என்று பின்னரே உணர்ந்தான். யாட்சியும் சர்வ அலங்கார பூஷிதையாக அவன் முன் பிரசன்னமாகி விட்டாள்
அவளோ அன்பு ததும்பும் முகத்துடனும், பெரும் உரிமையுடனும், தங்க நிற சேலையுடன் அவன் முன் பிரசன்னமாகி
எம்மை சகோதரனாக வரித்த உமக்கு இன்று முதன் நல்ல சகோதரியாக வந்துள்ளோம்! இது சத்தியம் என்று அவனுக்கு விலை உயர்ந்த பரிசுடன் அவன் முன்னே தோன்றினாள்.

இது சம்பத்திற்கு பேரிடியை கொடுத்தது, அவன் பிரயோகத்தில் தவறு இருந்ததை கண்டு பிடித்து விட்டான். தான் யோகினி இல்லை என்றும் யட்சி என்றும் அவனுக்கு எல்லா உண்மைகளையும் சொல்லி விட்டாள்.

தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்த சம்பத் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். நேரே அவன் தன குருவிடம் நடந்ததை சொன்னான். சுவாமிகள் யோகினி மந்திர பிரயோகம் பலித்ததை எண்ணி மகிழ்ந்தார்.
சுவாமி என்னை இப்படி ஏமாற்றலாமா ?
உன்னை எதுக்காக நான் ஏமாற்ற வேண்டும்
சுவாமி நீங்கள் எனக்கு யோகினி பற்றி சொல்லியது வேறு, அவள் மூலம் பெரும் பலமும் தனமும் சேரும் என்று சொல்லி இத்தனை நாள் எனக்கு ஆசை காட்டினீர். எனக்கு அவளை பத்தினியாக ஆக்கி எப்ரும் செல்வம் சேர்ப்பித்து தருகிறேன் என்று சொன்னீர்கள். அதனை நம்பியே அந்த தாந்திரீகரை உமக்கு அடையாளம் காட்டினேன். அவர் மூலம் பிரயோகத்தினை கற்று கொண்டு நீர் என்னை ஏமாற்றி விட்டீரே இது நியாயமா?
முட்டாள்! உனக்கு நான் அதனை கற்று கொடுத்தது எதற்கு, நீ சிறு பிள்ளை, உனக்கு பக்குவம் இன்னமும் வரவில்லை ஆனால் நீயோ உன் குருவி தலையில்  பனங்காய் ஏற்றி கொள்ள பார்க்கிறாய்.
என்னை நம்பி அந்த தாந்திரீகன் முறை சொல்லியது அதை கற்றுகொள்வது சாதாரண செயலா? உன்னால் அது முடியாது, அதனாலேயே உனக்கு யட்சி
சாதனை தீட்சை தந்தேன் என்று சொல்லி சிரித்தார்.
அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. எள்ளும் கொள்ளும் வெடிக்க அங்கிருந்து வெளியேறினான்.
யட்சி உபாசனையை அவன் விடவில்லை, அதன் மூலம் அவனுக்கு ஒரு புதிய வழி பிறந்தது. அதாவது அவன் நினைத்ததை செய்யும் ஆற்றலும், பிரசன்னமும் தெரிந்து விட்டது.
அவன் பெரியம்மாள் இறந்ததாக தகவல் அவனுக்கு கிடைக்கவே, அவன் ஆசிரமத்தில் தீட்டு கஷித்தல் கூடாது என்று சாக்கு சொல்லி சுவாமிகளிடம் ஆசிரமத்திலிருந்து அவன் சிறிது காலம் வெளியேறி செல்வதாக சொல்லிவிட்டு சென்றவன். யட்சியை தனி ஒரு இடத்தில் உபாசிக்க ஆரம்பித்தான். அதன் மூலம் பல விலை உயர்ந்த [பொருட்கள் கிடைத்தன. அதன் மூலம் அவன் பல பேர்களை விலை கொடுத்தோ அல்லது லஞ்சமாகவோ தந்து பல உயர் அதிகாரிகள், மந்திரிகள் என்று விரி விறுவென்று அவன் பெயரை ஸ்தாபித்து விட்டான். அயற்சி வசியம் மூலம் பல பேர்களை அவன் சொல்லுக்கு ஆட வைத்தான்.

பல பேர்கள் சேர்ந்தால் தலைவனாகிறான். நல்ல தலைவன் தன பெயரை தக்க வைத்து கொள்ள பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் போலவே தீமைகளும் நிறைன்திருக்கும்.

சம்பத் அவன் பெற்ற பெயரை அவ்வளவு சுலபமாக தக்க வைத்து கொள்ள முடியவில்லை. அவனிடம் சுவாமிகளின் அளவிற்கு பணம் இல்லை அதனால் அவனால் நினைத்ததை நடத்தமுடியவில்லை. அவன் நோக்கம் சுவாமிகளை விட பெரும் செல்வாக்குடன் வளம் வர வேண்டும் என்பதே.
சுவாமிகள் ஒரு முறை அவனிடம் ஒரு படத்தை கொடுத்தார்.
சம்பத் இது ஒரு பெண்ணுடைய  இதை நன்றாக பார்
எதுக்கு இந்த படத்தை கொடுத்தீங்க சுவாமி
இந்த பெண் எங்கிருக்கிறாள், என்ன செய்கிறாள் அவள் ஜாதகம் இது எல்லாம் உன் யட்சி மூலம் இப்போதே எனக்கு சேகரிக்க வேண்டும். அவள் ஜாதகம் எனக்கு கிடைக்க வேண்டும் என்றார்.
சம்பத்தும் இதில் எதோ இருக்கிறது என்று நினைத்து அவள் ஜாதகதினை மட்டுமில்லாமல் அவள்  தனகுன்வர்லால் சேட்டின் 6வது மகள் என்று கண்டு பிடித்துவிட்டான்.
தீட்சின்ய சுவாமிகள் அந்த பெண் எப்படியாவது இந்த ஆசிரமத்திற்கு வந்து விட வேண்டும் என்றார்.
எதுக்கு ஸ்வாமி என்றான். அவனுக்கு தெரியும் யட்சி அவர் அந்த பெண்ணை எதற்க்காக அடைய வேண்டும் என முயல்கிறார் என்று.
சுவாமிகள் வழக்கம் போல அவனை மழுப்பல் பதில்கள் சொல்லி விரட்டிவிட்டார்.
சுவாமிகள் யோகினி பூஜையிக்கு அவளை பலி வைத்து இப்போதுள்ள யோகினியை விட சக்தி உடைய வேறு ஒரு ஸ்வர்ண யோகினியை அடைவே இந்த பெண்ணை கேட்கிறார் என்று அவனுக்கு யட்சி ரகசியத்தை சொல்லி விட்டாள். அது ஒரு வகையில் நடந்தும் விட்டது.ஆனால் வேறு ஒரு சிக்கல் நடந்தது.
தீட்சின்ய சுவாமி உபாசித்த யோகினி அவர் மேல் கோபம் கொண்டு வேறு ஒரு ஸ்வர்ண யோகினியை நீ வரித்தால் உனக்கு மரணம் ஏற்ப்படும் அன்று எச்சரித்து விட்டாள்.
அந்த பெண் ரகசியமாக கடத்தப்பட்டு அவள் வசியம் செய்யபெற்று ஆசிரமத்தில் தங்கவைக்கபட்டாள். அவள் போலவே ஒரு உடலை சாலை விபத்தில் கோர மரணம் அடைந்து விட்டது போல செட் செய்ய பட்டு நாடகம் அழகாய் அரங்கேறியது. ஆனால் பிணத்தை வைத்து செத்து போனது அந்த இளம் பெண்ணல்ல  என்றும், அவள் இறந்ததுபோல ஏமாற்றி, அவளை ஆசிரமத்தில் கடத்தி வைத்துள்ளனர் என்றும் ஜெய்பூர் போலீஸ் திறம்பட விசாரித்து வழக்கு பதிந்து அவரை கையும் மெய்யுமாக பிடித்து வைத்து விட்டது. அதனை பணம் கொடுத்து சரி கட்டுவதற்குள் பெரும் பாடாகிவிட்டது.
ஆனால் சுவாமிகளுக்கு யோகினி வசியத்தின் சக்தி கொஞ்ச நாட்கள் பலிக்காமல் போய் விட்டது. அனால் சந்தேகத்தின் பலன் சம்பத்தின் தலையில் விடிந்தது. சுவாமிகள் தந்திரமாக சம்பத்தின் மேல் குற்றசாட்டினை திருபிவிட்டார். அவனை காப்பாற்றுவது போல கைப்பற்றி கொண்டார். ஆனால் அவர் சம்பத்தினை ஜாமீன் கொடுத்து  காப்பாற்றினார். சம்பத்தின் பெயர் அவனை கைவிடவில்லை. தான் சம்பதித்த  அத்தனை போரையும் அவன் பயன்படுத்தி அந்த வழக்கிலிருந்து விடுதலை ஆனான்.
சம்பத் இதன் மூலம் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானான். அவன் யட்சியிடம் முறையிட்டான். வேறு ஒரு குருவினை தேடு என்று சொன்னாள்.
ஆனால் தீட்சின்ய சுவாமி வேறு சம்பத்தை தீர்த்து கட்ட பயங்கர திட்டம் தீட்டினார்.
========================================================================











Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...