Skip to main content

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு,

உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது.

நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது.

இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள் நான். ஆனால் மற்றவர்களிடம் பழகியத்தை விட உங்களிடம் நான் சற்று அதிகமாக பாசமும் நட்பும் காட்டியது தான் என் தவறு என்று இப்போது நினைக்கின்றேன். நம் கண்ணியம் மிக்க நம் நட்பு கண்ணாடி சில்கள் போல நொறுங்கி விட்டதன் காரணம் இது தான் என்று நான் நினைக்கிறேன். நம் நட்பின் இந்த துயரமான முடிவிர்க்கு நாம் இருவரும் காரணமாகி விட்டோம். நீங்கள் எனக்கு ஒன்று மட்டும் காற்று கொடுத்து விட்டீர்கள். கசப்பான உண்மை அது! இனி யாராயும் நம்ப கூடாது என்பது தான் அது! இனி யாரிடத்திலும் நான் இவ்வளவு உயிரை பழக போவதும் இல்லை. இனி இந்த பிரியா பழய பிரியாவாக இருக்க போவதும் இல்லை.

இனி நாம் எப்போது நேருக்கு நேர் சந்தித்தாலும் இந்த எண்ணம் தான் உங்கள் மனத்தில் வருமே தவிர நட்பு வளராது என்று எனக்கு தெரியும்.

"என்னை பற்றி என்ன படித்தாய்? என்று நீங்கள் அடிக்கடி கேட்பததுண்டு. உங்களை நான் படிக்க ஆசைப்பட்டது உண்மை தான் ஆனாலும் உங்கள் புத்தகத்தின் பக்கங்களில் கிறுக்கியது என் குற்றம் தான். அப்படி பட்ட வாசகி அந்த நூலின் எதிரி. ஆம் ஹரி உங்கள் மன புத்தகதினை படிக்கும் அறுகதை இனி எனக்கு இல்லை. இனி நான் இந்த புத்தகததினை படிக்கவும் விருப்ப படவில்லை. உள்ள வாசகி நானல்ல! உங்கள் வாசகி என்றேனும் உங்களுக்கு நிச்சயம் கிடைப்பாள்.

நல்லவர்களுக்கு அழகு சொல்லாமல் போவது தான் என்று படித்து இருக்கின்றேன். ஆனால் என் நிலையை உங்களுக்கு தெளிவு படுத்தாமல் போனால் அது தவறு. ஆதலால் நான் இந்த கடிதத்தினை எழுததுகின்றேன்.

உங்களிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்று தான் இந்த கடிதத்தினை நீங்கள் உடனே அழித்து விடவும். அப்படியே என் எண்ணங்களையும் சேர்த்து தான். இந்த உரிமை நம் நட்பின் அடையாளமாக கேட்கின்றேன். நீங்கள் பழையபடி உங்கள் எண்ணங்களை சிதற விடாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவேண்டும்.

என் ஆசையினை நிறைவேற்ருங்கள். நான் என்னுடைய பழைய முகவரிகள், செல்பேசி சேவை அனைத்தையும் அழித்து விட்டேன். இனி என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம்.

இப்படிக்கு,
பிரியா.

*************
நெடு நேரம் கடிதத்தினை உற்று பார்த்துக்கொண்டிருந்தான் ஹரி. இரு கண்ணீர்த் துளிகளின் கரை அதில் ஓர் இடத்தில் சிந்தி இருந்தது. ஹரி மனத்தில் பெரிய கல் ஒன்று கனத்தது.

"என் வாசகியே! உன்னை மகிழ்விக்காத புத்தகமாக போய்விட்டேனே! உன் வேண்டுகோளை நிராகரிக்கின்றேன். ஆமாம் இந்த கடிதத்தை நான் அழிக்க போவதில்லை. உண்மையான நட்பை பகுக்க தெரியாத முட்டாள்களுக்கு இது ஒரு சாட்சி. எனக்கு இன்னொரு வாசகி கிடைப்பாள் என்பது சந்தேகமே.அப்படியே கிடைத்தாலும் அவள் உன் போல உயர்ந்த வாசகியாக இருக்க முடியாது.என்னை மன்னிப்பாயா என் தோழியே?"

அவன் அறியாமல் அவன் விட்ட கண்ணீரும் அதில் சேர்ந்து அந்த காகிதத்தில் கலந்தது. அவர்கள் தான் சேரவில்லை அவர்கள் கண்ணீராவது சேரட்டுமே!

முற்றும்
-------------------------------------------------------------------------------
(இது என் முதல் முயற்சி. முட்களோ பூக்களோ ஏதுவாயினும் நான் எற்க்கிறேன். தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.)

நன்றி - ஸ்ரீராம்
*******************************************************************************

Comments

  1. ஒரு அருமையான கதை, அருமையாக சொல்லப்பட்டது. முதலில் கொஞ்சம் எழுத்து நடை எளிமையாக இருந்தாலும் பின் வரும் பகுதிகள் அருமை! இன்னும் எழுத என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...