Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 8

-----------
"எட்டி சென்றால் கிட்டி வரும்
கிட்ட சென்றால் எட்டி போகுமோ? "
--------------
மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டு விழித்தான் ஹரி. பிரியா அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள். அப்போது அவன் கால்கள் மிகுந்த வலி ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். " சிரமப்படாத ஹரி! ஒண்ணும் இல்ல என்று அவன் நெஞ்சின் மேல் மெல்ல அழுத்தினாள் பிரியா.

" பிரியா? உனக்கு ஒன்னும் ஆகலியே? அடி படல்லியே?" என்று விசாரித்தான் ஹரி.
"எனக்கு என்ன ஆயிருந்தாலும் பரவா இல்ல. நல்ல வேளையா உனக்கு எதுவும் ஆகல்லை அது போதும் சாமி !". என்று கூறினாள் அவள்.

அப்போது டாக்டர் வந்தார். "என்ன ஹரி எப்படி இருக்கீங்க ?"

"கொஞ்சம் வலிக்கிறது டாக்டர் என்னாச்சு என் காலுக்கு?"
Nothing serious! Thank God there is no fracture or injury.Just a sprain தான் காலில டயர் ஏறினதால நீங்க அதிர்ச்சி ஆயிடீங்க அவ்வளவு தான். சாயங்காலம் கொஞ்சம் சரி ஆயிடும். நீங்க போயிடலாம். ரெண்டு நாள் வீட்டில ரெஸ்டு எடுத்துகிட்டு ஆபிஸ் போங்க போதும். பாவம் இந்த பொண்ணு தான் ரொம்ப பயந்து போய்ட்டா. "என்று தேற்றினார் அவர்.

"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். " என்று ஹரி புன்னகைதான்.

ஹரியை பிரியா விட்டிற்கு கொண்டு சென்று விட்டாள். அவன் விட்டில் அல்லோ கலோல பட்டது. ஹரியின் அம்மா மிகவும் பயந்து விட்டாள். பின் அனைத்து விவரங்களும் சொன்ன பிறகு ஓர் அளவிற்கு அமைதி ஆனாள்.

பிரியா பின்னர் விடை பெற்று சென்ற பின் அப்பா அவன் அருகில் வந்தார்.

"ரொம்ப நல்ல பொண்ண இருக்காடா அவ! ரொம்ப நல்ல வேலை செஞ்சிருக்க இனிக்கி உன் உயிரை பத்தி கவலை படாம நீ அவள காபாத்தி இருக்க . நிஜம்மாவே ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு!" என்றார்.

-----------------------------
அவன் தேறி வந்ததும் அன்று தேனீர் நேரத்தில் பேச்சு தொடங்கியது.

"உன்கிட்ட எத்தன கோடி தடவ தேங்க்ஸ் சொன்னாலும் போதாது!" என்று கண்கள் பனிக்க சொன்னாள் பிரியா.

"அட போதும் பா! நான் என்ன உலக சாதனைய செஞ்சிட்டேன். உனக்கு ஒரு பிரச்சனை அப்டின்னா நான் சும்மா இருபேன என்ன? நண்பர்களுக்குள்ள என்ன இருக்கு? அதுலயும் நீ எனக்கு ஒரு படி மேல. "

"என் மேல அவ்வளோ மதிப்பு வெச்சிருக்கியா ஹரி? என்ன அவ்வளவு புடிக்கும உனக்கு? நான் அவ்வளவு அருகதை உள்ள நண்பியா என்ன ?"

"அப்படி சொல்லாதே நீ தான் எனக்கு எல்லாமே.. இல்லேன்னா உன்கிட்ட இப்படி பழக மாட்டேன் பிரியா.வாழ் நாள் எல்லாம் எனக்கு உன்னை புடிக்கும் ."

"நீங்க ஒரு புரியாத புத்தகம். சில நேரம் உங்கள படிக்க முடியல சில நேரம் கொஞ்சம் படிக்க முடியுது. என்ன அவமான படுத்தி நோக அடிச்சா ஹரியா இனிக்கி என்ன நண்பியா ஒரு உயர்ந்த ஸ்தானத்தில வேசிருகாருன்னு நினைக்கும்போது எனக்கு திகைப்பாவும் மலைப்பாவும் இருக்கு. அதே சமயம் உங்கள பத்தி முழுசவும் தெரிஞ்சிக்கிற அளவிற்கு இன்னும் நாம பழகல்ல அதுக்குள்ள எவ்வளோவோ பெரிய விஷயங்கள கத்தும் குடுத்தீங்க ஏன்? என் உயிரை காபற்றிநீங்க . "

"எனக்கு தெரியும் நான் அவ்வளவு அழகில்லை. பெரிய வேலை எல்லாம் கூட இல்லை சும்மா திரிஞ்சி கிட்டு இருந்தேன், அம்மா அப்பா அக்க கல்யாணத்திற்கு காசு சேர்க்க கஷ்ட படுரங்கன்னு தெரிஞ்ச அப்புறம் தான் பொறுப்பா வேலைக்கு சேர்ந்து செய்ய ஆரம்பிச்சேன்.

"எனக்கு கிடைச்ச முதல் நண்பன் நிங்கதான். உங்கள பாத்து தான் ரொம்ப பொறுப்பா இருக்க கத்துகிட்டேன். நீங்க என்ன திட்டும் பொது எல்லாம் அப்படியே உங்கள கொன்ன என்னனு நினைக்க தோணும். பிறகு தான் நீங்க ஏன் மேல அக்கரை எடுத்து கிட்டு சொல்றிங்கன்னு புரிஞ்சிது. நானும் ரொம்ப அதிர்ஷ்ட காரி தான். அதுக்கு தான் நன்றி சொன்னேன். "

"எனக்கு மட்டும் என்ன பிரியா உனக்கே தெரியும். நான் யாரையும் வெறுக்கிறது இல்லை. என்ன யாரும் புரிஞ்சிகல்லை. நான் எதை சொன்னாலும் என்னை சிடு மூஞ்சி நு திட்டினாங்க. நான் வலியப் பொய் எந்த பொண்ணுங்க கிட்டயும் பேசினது இல்ல. அனால் நீ தான் ஏன் கூட என்ன புரிஞ்சி கிட்டு பேசின. நிர்பந்தைனால என்கூட இருக்க வேச்சங்கன்ன்னு நினைச்சேன் அனால் இப்போ அது நட்பா ஒரு நல்ல துணையா எனக்கு கிடைச்சதுதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுனால நான் தான் உனக்கு நன்றி சொல்லணும்.."

"சரிதான் நீங்க ஒரு புரியாத மொழி புத்தகம் தான் உக்காந்து. நிறைய படிக்கணும்." என்றாள் பிரியா.

விகாசிடம் அனைத்தையும் சொன்னான் ஹரி. அவர்க அன்று நிறைய பேசினார்கள்.

"உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் விகாஸ். இப்போ சொல்லு உனக்கு எதாச்சும் புரியுதா?

"நல்ல புரியுது உனக்கு முத்தி போச்சு ன்னு ."

"விளையாடாதடா! சரியாய் சொல்லு அவ ஏன் மேல வெச்சிருக்கிறது என்ன? "

"இன்னும் சொல்ல தெரியலடா! ஆனா நீ சொல்றத பாத்தா அவளுக்கு உன்மேல ஒரு அபிப்ராயம் இருக்கிற மாதிரி தான் தெரியுது என்றான்."

"அது போதும்! நான் அவ கிட்ட மனச திறக்க வேண்டியது தான். என்னால இனிமே காத்துகிட்டு இருக்க முடியாதுடா."

"எனக்கு ஒண்ணும் இது சரியான நேரம் மாதிரி தோணல. இருந்தாலும் உன் ஆசை நிறைவேறட்டும்.வாழ்த்துக்கள்!" என்றான்.

விகாசிடம் சொல்லிவிட்டனே தவிர அவன் எடுத்த முடிவு சரியா என்று மூளை தர்க்கம் செய்து கொண்டிருந்தது.அனால் மனம் ? அது யாருக்கேனும் அடங்கியது உண்டோ ? ஹரியும் விதி விலக்கல்ல. விரைவில் அவளிடம் சொல்லி விடுவது என்று முடிவெடுத்தான்.
*******************

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...