Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 8

-----------
"எட்டி சென்றால் கிட்டி வரும்
கிட்ட சென்றால் எட்டி போகுமோ? "
--------------
மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டு விழித்தான் ஹரி. பிரியா அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள். அப்போது அவன் கால்கள் மிகுந்த வலி ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். " சிரமப்படாத ஹரி! ஒண்ணும் இல்ல என்று அவன் நெஞ்சின் மேல் மெல்ல அழுத்தினாள் பிரியா.

" பிரியா? உனக்கு ஒன்னும் ஆகலியே? அடி படல்லியே?" என்று விசாரித்தான் ஹரி.
"எனக்கு என்ன ஆயிருந்தாலும் பரவா இல்ல. நல்ல வேளையா உனக்கு எதுவும் ஆகல்லை அது போதும் சாமி !". என்று கூறினாள் அவள்.

அப்போது டாக்டர் வந்தார். "என்ன ஹரி எப்படி இருக்கீங்க ?"

"கொஞ்சம் வலிக்கிறது டாக்டர் என்னாச்சு என் காலுக்கு?"
Nothing serious! Thank God there is no fracture or injury.Just a sprain தான் காலில டயர் ஏறினதால நீங்க அதிர்ச்சி ஆயிடீங்க அவ்வளவு தான். சாயங்காலம் கொஞ்சம் சரி ஆயிடும். நீங்க போயிடலாம். ரெண்டு நாள் வீட்டில ரெஸ்டு எடுத்துகிட்டு ஆபிஸ் போங்க போதும். பாவம் இந்த பொண்ணு தான் ரொம்ப பயந்து போய்ட்டா. "என்று தேற்றினார் அவர்.

"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். " என்று ஹரி புன்னகைதான்.

ஹரியை பிரியா விட்டிற்கு கொண்டு சென்று விட்டாள். அவன் விட்டில் அல்லோ கலோல பட்டது. ஹரியின் அம்மா மிகவும் பயந்து விட்டாள். பின் அனைத்து விவரங்களும் சொன்ன பிறகு ஓர் அளவிற்கு அமைதி ஆனாள்.

பிரியா பின்னர் விடை பெற்று சென்ற பின் அப்பா அவன் அருகில் வந்தார்.

"ரொம்ப நல்ல பொண்ண இருக்காடா அவ! ரொம்ப நல்ல வேலை செஞ்சிருக்க இனிக்கி உன் உயிரை பத்தி கவலை படாம நீ அவள காபாத்தி இருக்க . நிஜம்மாவே ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு!" என்றார்.

-----------------------------
அவன் தேறி வந்ததும் அன்று தேனீர் நேரத்தில் பேச்சு தொடங்கியது.

"உன்கிட்ட எத்தன கோடி தடவ தேங்க்ஸ் சொன்னாலும் போதாது!" என்று கண்கள் பனிக்க சொன்னாள் பிரியா.

"அட போதும் பா! நான் என்ன உலக சாதனைய செஞ்சிட்டேன். உனக்கு ஒரு பிரச்சனை அப்டின்னா நான் சும்மா இருபேன என்ன? நண்பர்களுக்குள்ள என்ன இருக்கு? அதுலயும் நீ எனக்கு ஒரு படி மேல. "

"என் மேல அவ்வளோ மதிப்பு வெச்சிருக்கியா ஹரி? என்ன அவ்வளவு புடிக்கும உனக்கு? நான் அவ்வளவு அருகதை உள்ள நண்பியா என்ன ?"

"அப்படி சொல்லாதே நீ தான் எனக்கு எல்லாமே.. இல்லேன்னா உன்கிட்ட இப்படி பழக மாட்டேன் பிரியா.வாழ் நாள் எல்லாம் எனக்கு உன்னை புடிக்கும் ."

"நீங்க ஒரு புரியாத புத்தகம். சில நேரம் உங்கள படிக்க முடியல சில நேரம் கொஞ்சம் படிக்க முடியுது. என்ன அவமான படுத்தி நோக அடிச்சா ஹரியா இனிக்கி என்ன நண்பியா ஒரு உயர்ந்த ஸ்தானத்தில வேசிருகாருன்னு நினைக்கும்போது எனக்கு திகைப்பாவும் மலைப்பாவும் இருக்கு. அதே சமயம் உங்கள பத்தி முழுசவும் தெரிஞ்சிக்கிற அளவிற்கு இன்னும் நாம பழகல்ல அதுக்குள்ள எவ்வளோவோ பெரிய விஷயங்கள கத்தும் குடுத்தீங்க ஏன்? என் உயிரை காபற்றிநீங்க . "

"எனக்கு தெரியும் நான் அவ்வளவு அழகில்லை. பெரிய வேலை எல்லாம் கூட இல்லை சும்மா திரிஞ்சி கிட்டு இருந்தேன், அம்மா அப்பா அக்க கல்யாணத்திற்கு காசு சேர்க்க கஷ்ட படுரங்கன்னு தெரிஞ்ச அப்புறம் தான் பொறுப்பா வேலைக்கு சேர்ந்து செய்ய ஆரம்பிச்சேன்.

"எனக்கு கிடைச்ச முதல் நண்பன் நிங்கதான். உங்கள பாத்து தான் ரொம்ப பொறுப்பா இருக்க கத்துகிட்டேன். நீங்க என்ன திட்டும் பொது எல்லாம் அப்படியே உங்கள கொன்ன என்னனு நினைக்க தோணும். பிறகு தான் நீங்க ஏன் மேல அக்கரை எடுத்து கிட்டு சொல்றிங்கன்னு புரிஞ்சிது. நானும் ரொம்ப அதிர்ஷ்ட காரி தான். அதுக்கு தான் நன்றி சொன்னேன். "

"எனக்கு மட்டும் என்ன பிரியா உனக்கே தெரியும். நான் யாரையும் வெறுக்கிறது இல்லை. என்ன யாரும் புரிஞ்சிகல்லை. நான் எதை சொன்னாலும் என்னை சிடு மூஞ்சி நு திட்டினாங்க. நான் வலியப் பொய் எந்த பொண்ணுங்க கிட்டயும் பேசினது இல்ல. அனால் நீ தான் ஏன் கூட என்ன புரிஞ்சி கிட்டு பேசின. நிர்பந்தைனால என்கூட இருக்க வேச்சங்கன்ன்னு நினைச்சேன் அனால் இப்போ அது நட்பா ஒரு நல்ல துணையா எனக்கு கிடைச்சதுதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுனால நான் தான் உனக்கு நன்றி சொல்லணும்.."

"சரிதான் நீங்க ஒரு புரியாத மொழி புத்தகம் தான் உக்காந்து. நிறைய படிக்கணும்." என்றாள் பிரியா.

விகாசிடம் அனைத்தையும் சொன்னான் ஹரி. அவர்க அன்று நிறைய பேசினார்கள்.

"உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் விகாஸ். இப்போ சொல்லு உனக்கு எதாச்சும் புரியுதா?

"நல்ல புரியுது உனக்கு முத்தி போச்சு ன்னு ."

"விளையாடாதடா! சரியாய் சொல்லு அவ ஏன் மேல வெச்சிருக்கிறது என்ன? "

"இன்னும் சொல்ல தெரியலடா! ஆனா நீ சொல்றத பாத்தா அவளுக்கு உன்மேல ஒரு அபிப்ராயம் இருக்கிற மாதிரி தான் தெரியுது என்றான்."

"அது போதும்! நான் அவ கிட்ட மனச திறக்க வேண்டியது தான். என்னால இனிமே காத்துகிட்டு இருக்க முடியாதுடா."

"எனக்கு ஒண்ணும் இது சரியான நேரம் மாதிரி தோணல. இருந்தாலும் உன் ஆசை நிறைவேறட்டும்.வாழ்த்துக்கள்!" என்றான்.

விகாசிடம் சொல்லிவிட்டனே தவிர அவன் எடுத்த முடிவு சரியா என்று மூளை தர்க்கம் செய்து கொண்டிருந்தது.அனால் மனம் ? அது யாருக்கேனும் அடங்கியது உண்டோ ? ஹரியும் விதி விலக்கல்ல. விரைவில் அவளிடம் சொல்லி விடுவது என்று முடிவெடுத்தான்.
*******************

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
Kamini_Yogini 7 காமினி_யோகினி 7 எஸ் பி ஸ்வாமிநாதன் கொஞ்சம் ஆடித்தான் போனார். அடேயப்பா! என்னய்யா இது? இந்த ஆசிரமன்தான் இவங்க எட் ஆபிஸா? என்றார் ஆச்சரியம் தாளாமல் இல்ல சார்! இது இவங்களோட தமிழ்நாடு பிராஞ்சு ஆபீஸ் சார் .எட் ஆபீஸ் மைசூரில் இருக்குது சார். என்றாள் கங்கா ஓ அப்படியா! இந்த பிள்டிங்கே  கோடி கணக்கிலே மதிப்பிற்கும் போல இருக்குதே இதுவே மாளிகை போல இருக்குதுன்னா அப்போ அங்கேனே? சொர்க்கம் போல இருக்கும் சார்  அதோ அங்க பாருங்க! என்று கங்கா சுட்டி காட்டிய திசையில் படிய வாரிய தலை, கொஞ்சம் மாநிறம். நரைத்த திருத்தப்பட்ட மீசை தாடி. அகலமான நெற்றியில் குங்கும பொட்டு.  இளம் சிவப்பு நிற வெட்டி அதில் வெள்ளை பச்சை நீல கரை கதர் சட்டை வைர மோதிரம் பிரேஸிலேட் மின்ன வேட்டை நாய் போல கத்தி கொண்டிருந்த சேகரமூர்த்தி தென்பட்டார். பல பேர் அங்கு பளிங்கு தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதில் பலரும் வட நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் என்று அவர்கள் முகத்தை பார்த்த உடனே தெரிந்து கொண்டனர் போலீசார். பலர் பெரிய ரோஜா தோட்டத்தினை செப்பனிட்டு கொண்டிருந்தனர். வானளா...