புதுவை கடற்க்கரை அன்று கூட்டமாக காணப்பட்டது. ஹரி அலுவலகம் முழுவதும் கேளிக்கை சுற்றுலா விற்கு வந்ததால் அங்கு வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் கூட்ட மிகுதியுடன் தான் காணப்பட்டது.
தேவதை என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறான் ஹரி. அனால் அதை பற்றி அப்போது அவன் அதிகமாக சிந்தனை செய்ததில்லை. ப்ரியாவை அன்று பார்த்தபின் அவள் தன் தேவதையோ என்று நினைத்தான். நீளமான கூந்தல் அலை கடல் போல் பாய்ந்தது. அதில் சிறிய படகு போல் சிவந்த நிற ஒற்றை ரோஜா. .
வில் புருவங்களின் கீழ் மை இட்டிறுந்தால் போல இயற்கை நிறம் கொண்ட அகலமான வேல் விழிகள். அவள் சற்று ஏறக்குறைய அகலமான நெற்றி அதில் ஒரு கற்றை முடியை அவள் சரி செய்து கொண்டாள். ஏழினை கவிழ்த்தார் போல அளவான நாசி. தன் செம்பருத்தி நிற அதரங்களை சுழித்து அவள் தோழியிடம் எதோ பேசிக்கொண்டிருந்தாள் .சந்தன நிற மேனியை மஞ்சள் நிற சுடிதார் மறைத்தது . மானம் போற்றும் மங்கை அவளல்லவா? கைகளா அது? எதோ தாமரை மலர்களின் மொட்டுக்கள் கூம்பி இருந்தது போல! அதில் வெண்டை விரல்களை 'கொன்னுடுவேன்' என்ற பாவனை செய்து அவள் தோழிகளில் ஒருத்தியை முறைத்தாள். வாழை தண்டு செதுக்கி அமைத்தார் போல் இருக்கும் என்று கதைகளில் படித்ததுண்டு அந்த கால்கள் இது தானோ?
பிரியா தானே இது? என் கண்கள் என்னை ஏமாற்றுகிறதா? என்று வியந்து கொண்டிருந்தபோது..
"ஹரி! "எப்போ வந்தீங்க ? அய்யோ எவ்ளோ ஸ்மார்டா இருக்கீங்க தெரியுமா?" என்று குழந்தை போல சிரித்துக்கொண்டே வந்தாள்.குரலா அது? ஆயிரம் குயில்கள் ஒன்றாக கீதம் பாடும் ஓசை போல் இன்று கேட்கின்றதே?"பேச நா எழ வில்லை அவனுக்கு ஒரு அடி அடித்தாள் பிரியா.
"ஹலோ! என்னாச்சு?"
அப்போது தான் அவன இக வுலகில் இருப்பதை உணர்ந்தான்.
"பிரியா...ஒன்னு சொல்லட்டுமா? "
"ஹ்ம்ம் சொல்லுங்க?"
"உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...நீ இனிக்கி நெஜமாவே தேவதை போல இருக்க!"
"ஆங்?!! அப்படியா! ரொம்ப நன்றி! ஆயிரம் கோடி நன்றி..இனிக்கி தான் என்ன வாய் திறந்து பாராட்டி இருக்கீங்க..அதை விட முக்கியமான விஷயம் இனிக்கி என்ன நீங்க திட்டாம இருக்கறது. மழை தான் வரணும்" என்று கிண்டல் செய்தாள்.
"ச்சே பைத்தியம்! உன்ன எப்போவும் திட்ட நான் என்ன சிடு மூஞ்சி யா ? சரி சரி என்ன சாப்பிடுற ?"
"எதிர்க்க இருக்கிற குச்சி ஐஸ் கடை இருக்கில்ல அங்க எனக்கு ரெண்டு குச்சி ஐஸ் வேணும் "
"என்னது சின்ன புள்ள மாதிரி குச்சி ஐஸ் கேக்குற?"
"எனக்கு சின்ன புள்ளயிலிருந்தே குச்சி ஐஸ் மேல கொள்ள அசை! எங்க அப்பா வங்கி தரவே மாட்டார். ப்ளீஸ் எனக்கு இப்போ வங்கி தரீங்களா?" என்று குழந்தை போல கெஞ்சினாள்.
"எனக்கு வேண்டாம் நீ பொய் வங்கிக்கோ!" என்று கூறி காசை அவளிடம் கொடுத்தான்.
மகிழ்ச்சியுடன் குச்சி ஐஸ் வங்கி கொண்டு சாலை இருவரும் கடந்து வந்தனர் பிரியா அப்போது திடீரென சிறு பெண்ணை போல துள்ளிக்கொண்டு ஓட சாலையை கடந்தாள் அவள்.
"ப்ரியா! நில்லு!" என்று அவள் மீது மோதி தள்ளினான். இருவரும் சற்றும் எதிர் பார்க்க வில்லை திருப்பத்தில் இருந்து வந்த கார் அவளை மோதாமல் இருக்க அவன் அவள் மீது பாய்ந்து அவளை தள்ளி விட்டிருந்தான் ஹரி. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவன் காலை பதம் பார்த்தது அந்த கார். எல்லாம் கண நேரத்தில் நடந்து முடிந்தது.
"ஐயோ ஹரி! என்று பிரியா வீறிட்டாள் ". மின்சாரம் பாய்ந்தது போல அலறி துடித்தான் ஹரி. அவன் கண்கள் மயக்கத்தில் சேருகின. உலகம் இருண்டது.
-----------------------
Comments
Post a Comment