Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 7


புதுவை கடற்க்கரை அன்று கூட்டமாக காணப்பட்டது. ஹரி அலுவலகம் முழுவதும் கேளிக்கை சுற்றுலா விற்கு வந்ததால் அங்கு வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் கூட்ட மிகுதியுடன் தான் காணப்பட்டது.

தேவதை என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறான் ஹரி. அனால் அதை பற்றி அப்போது அவன் அதிகமாக சிந்தனை செய்ததில்லை. ப்ரியாவை அன்று பார்த்தபின் அவள் தன் தேவதையோ என்று நினைத்தான். நீளமான கூந்தல் அலை கடல் போல் பாய்ந்தது. அதில் சிறிய படகு போல் சிவந்த நிற ஒற்றை ரோஜா. .
வில் புருவங்களின் கீழ் மை இட்டிறுந்தால் போல இயற்கை நிறம் கொண்ட அகலமான வேல் விழிகள். அவள் சற்று ஏறக்குறைய அகலமான நெற்றி அதில் ஒரு கற்றை முடியை அவள் சரி செய்து கொண்டாள். ஏழினை கவிழ்த்தார் போல அளவான நாசி. தன் செம்பருத்தி நிற அதரங்களை சுழித்து அவள் தோழியிடம் எதோ பேசிக்கொண்டிருந்தாள் .சந்தன நிற மேனியை மஞ்சள் நிற சுடிதார் மறைத்தது . மானம் போற்றும் மங்கை அவளல்லவா? கைகளா அது? எதோ தாமரை மலர்களின் மொட்டுக்கள் கூம்பி இருந்தது போல! அதில் வெண்டை விரல்களை 'கொன்னுடுவேன்' என்ற பாவனை செய்து அவள் தோழிகளில் ஒருத்தியை முறைத்தாள். வாழை தண்டு செதுக்கி அமைத்தார் போல் இருக்கும் என்று கதைகளில் படித்ததுண்டு அந்த கால்கள் இது தானோ?

பிரியா தானே இது? என் கண்கள் என்னை ஏமாற்றுகிறதா? என்று வியந்து கொண்டிருந்தபோது..

"ஹரி! "எப்போ வந்தீங்க ? அய்யோ எவ்ளோ ஸ்மார்டா இருக்கீங்க தெரியுமா?" என்று குழந்தை போல சிரித்துக்கொண்டே வந்தாள்.குரலா அது? ஆயிரம் குயில்கள் ஒன்றாக கீதம் பாடும் ஓசை போல் இன்று கேட்கின்றதே?"பேச நா எழ வில்லை அவனுக்கு ஒரு அடி அடித்தாள் பிரியா.

"ஹலோ! என்னாச்சு?"

அப்போது தான் அவன இக வுலகில் இருப்பதை உணர்ந்தான்.

"பிரியா...ஒன்னு சொல்லட்டுமா? "

"ஹ்ம்ம் சொல்லுங்க?"

"உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...நீ இனிக்கி நெஜமாவே தேவதை போல இருக்க!"

"ஆங்?!! அப்படியா! ரொம்ப நன்றி! ஆயிரம் கோடி நன்றி..இனிக்கி தான் என்ன வாய் திறந்து பாராட்டி இருக்கீங்க..அதை விட முக்கியமான விஷயம் இனிக்கி என்ன நீங்க திட்டாம இருக்கறது. மழை தான் வரணும்" என்று கிண்டல் செய்தாள்.

"ச்சே பைத்தியம்! உன்ன எப்போவும் திட்ட நான் என்ன சிடு மூஞ்சி யா ? சரி சரி என்ன சாப்பிடுற ?"

"எதிர்க்க இருக்கிற குச்சி ஐஸ் கடை இருக்கில்ல அங்க எனக்கு ரெண்டு குச்சி ஐஸ் வேணும் "

"என்னது சின்ன புள்ள மாதிரி குச்சி ஐஸ் கேக்குற?"

"எனக்கு சின்ன புள்ளயிலிருந்தே குச்சி ஐஸ் மேல கொள்ள அசை! எங்க அப்பா வங்கி தரவே மாட்டார். ப்ளீஸ் எனக்கு இப்போ வங்கி தரீங்களா?" என்று குழந்தை போல கெஞ்சினாள்.

"எனக்கு வேண்டாம் நீ பொய் வங்கிக்கோ!" என்று கூறி காசை அவளிடம் கொடுத்தான்.

மகிழ்ச்சியுடன் குச்சி ஐஸ் வங்கி கொண்டு சாலை இருவரும் கடந்து வந்தனர் பிரியா அப்போது திடீரென சிறு பெண்ணை போல துள்ளிக்கொண்டு ஓட சாலையை கடந்தாள் அவள்.

"ப்ரியா! நில்லு!" என்று அவள் மீது மோதி தள்ளினான். இருவரும் சற்றும் எதிர் பார்க்க வில்லை திருப்பத்தில் இருந்து வந்த கார் அவளை மோதாமல் இருக்க அவன் அவள் மீது பாய்ந்து அவளை தள்ளி விட்டிருந்தான் ஹரி. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவன் காலை பதம் பார்த்தது அந்த கார். எல்லாம் கண நேரத்தில் நடந்து முடிந்தது.

"ஐயோ ஹரி! என்று பிரியா வீறிட்டாள் ". மின்சாரம் பாய்ந்தது போல அலறி துடித்தான் ஹரி. அவன் கண்கள் மயக்கத்தில் சேருகின. உலகம் இருண்டது.
-----------------------

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...