Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 6

-------------------------
"முழுச் சந்திரனை கிரகணம் பிடித்தது அன்று. சந்திரன் எந்த தவரும் செய்யவில்லை. ஏனோ இருளிர்க்கு அவளை அணைத்திட ஆசை. ஆனால் அவனுக்கு மட்டும் தான் அவள் சொந்த என்பது போல இந்த இருள் அரக்கன் சந்திரன் காணாமல் செய்து விட்டானே பாவி?"
-------------------------

"நிஜமா வா சொல்றீங்க?" ஹரி முகத்தில் கலவரம் விகாரத்துடன் வெளிப்பட்டது.

"இனிக்கி தான் எனக்கு தகவல் வந்தது டா. இன்னும் ஒரு மாசம் தான் நீ பண்ணிட்டு இருக்கிற இந்த Short-Term ப்ராஜெக்ட் முடிஞ்சி போய்டும். எப்படி இருந்தாலும் உனக்கு தலை வலி விட்டது."

"அப்போ இந்த பசங்க எல்லாம்?"

"அவங்க எல்லாரும் இன்னொரு வேலைக்கு போக வேண்டியது தான்?!" அவங்க 'Provider' ஆபீஸ்ல அத பாத்துக்க போறாங்க நாம 'Client' தானே நமக்கு என்ன கவலை?" என்று அமைதியாக பதில் அளித்தார் மேலாளர்.

சிறிது நேரம் அவன் முகத்தை நோக்கிய வாறே இருந்தார் அவர்.

மிகுந்த கவலையோடும் ஆர்வத்துடனும் ஹரி அவரை பார்த்து கொண்டிருந்தான்.

"டாய் சாமியார்! நீ இவ்வளோ மாறி போவேன்னு நான் எதிர் பாக்கல்ல.
என்னடா லவ்வா?;-)" என்று கண் அடித்த வாரே கேட்டார்.

ஹரி மறு மொழி கூறாமல் 'இல்லை' என்று மட்டும் தலை ஆட்டினான்.

"நான் ஒண்ணு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டியே? " என்றார்.

"சே! சே! நீங்க சொல்றதை போய் தப்பா எடுத்துப்பேனா ஸார்?
எனக்கு எவ்ளோ பிரச்சனை இருந்தும் உங்க கிட்ட நான் மறைக்கிறது இல்ல. நீங்க எது சொன்னாலும் அதை கேட்டு நடந்துக்குறேன். சொல்லுங்க .." என்றான் ஹரி.

"உன்னோட நடவடிக்கை எல்லாம் மாறி போச்சு டா"

"இல்லையே! எதை வெச்சி அப்படி சொல்றீங்க?" என்று மறுத்தான்.

"எனக்கென்னவோ அந்த பொண்ணு மேல நீ ஏதோ over-infatuation வெச்சிறுக்கிற மாதிரி தெரியுது. அவளோட மனச புரிஞ்சி அப்புறம் எதுவா இருந்தாலும் முடிவு பண்ணிக்கோ அது தான் உனக்கு நல்லது. தேவை இல்லாம ஆசை வளர்த்துக்கிறது அவ்வளவு நல்லதா படல்ல." என்று ஓங்கி உடைத்தாற்போல் பேசினார்.

"அய்யோ! அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல ஸார்! எனக்கு ஒண்ணும் அந்த பொண்ணு மேல அபிப்பிராயம் எல்லாம் இல்லை." என்று கூறினான்.

"என் மறைக்கிறாய்? ப்ராஜெக்ட் முடியப் போகுதுன்னு சொன்ன உடனேயே உன் மூஞ்சி மாறி போச்சே? அவள பத்தி தானே நினைச்ச நீ? அதை சர்வ லட்சணமா உன் முகமே அதை காட்டிக்குடுத்திருச்சே?" என்றார் அவர்.

"ஸார்..அது வந்து" என்றதும்

"எல்லாம் எனக்கு தெரியும் அந்த பொண்ணு கூட நீ சாப்பிட போறதும் வீட்டுக்கு கொண்டு விடுவதும். இதெல்லாம் தேவையா உனக்கு?"என்றார் அவர்.

பதில் ஏதும் கூற நா எழ வில்லை அவனுக்கு.

"அப்படியே அந்த பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்ச அவள propose பண்ணுவியா நீ? என்று வெடி வைத்தார் அவர்.

"ஸார்..எனக்கு ஒண்ணும் அந்த மாதிரி நெனப்பெல்லாம் இல்ல இருந்தாலும் அத அவ கிட்ட சொல்லிடுவேன். எனக்கு எதுவும் பிரச்னை இல்ல. " என்று அசட்டு தைரியத்துடன் பதில் சொல்லிவிட்டான் ஹரி.

"ஓ பரவால்ல டா! நல்ல இம்ப்ரூவ் பண்ணி இருக்கா உன்னை! வாழ்த்துக்கள்! இன்னொரு முக்கிய மான விஷயம் அவங்க ஆபீசில நாங்க பேசி இருக்கோம் 15 பேர்ல 5 பேரை இங்கேயே வேலைக்கு சேர்க்கிறத்துக்கான முயற்சி நடந்துகிட்டு இருக்கு தெரிஞ்சிக்கோ."

"அவங்க யாரு ஸார்?" முகத்தில் மின் விளக்கு எறிந்தது ஹரிக்கு.

"இன்னும் முடிவாகல்ல..இந்த தகவல் உனக்கு போதும்"? என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார் அவர்.

"இப்போதைக்கு இது போதும்:-)"என்று விடை பெற்றான் ஹரி.

------*********---------

மாலை வழக்கம் போல அவன் இணைய அரட்டையில் அவன் நண்பன் விகாசுக்கு காலையில் நடந்தவை எல்லாம் ஒப்பித்திதான்.

"மச்சான்! உங்க மேனேஜர் இந்த வேலை எல்லாம் பாப்பாரு ன்னு சொல்லவே இல்ல ;-) ஆனாலும் அவர் கரெக்டா உன்னை மடக்கிடரே "

"அத விடுடா! எனக்கு இப்போ குழப்பாமா இருக்கு! அவ என்ன பத்தி என்ன அபிப்பிராயம் வெச்சிறுக்கான்னு தெரியல? நான் அவ பழகுற விதத்தை உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்ல இப்போ சொல்லு இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?"

" பொண்ணுங்கள அவ்ளோ சுலபத்தில எடை போட்டு விட முடியாது டா! இன்னும்
நல்லா பழகிப்பார் அப்போ தான் ஓரளவுக்கு தெரிஞ்சிக்க முடியும்." என்றான் விகாஸ்.

"ஹரி! உண்மையா சொல்லு அவள நீ லவ் பண்ணுறியா என்ன ?"

"ஆமாம்! அப்படி தான் இருக்கும்ன்னு நினைக்க தோணுது டா ! அவ பேசுறது, பழகுறது, சிரிக்கறது அழறது என்கூட இருக்கிற எல்லா நேரமும் எதோ தனி உலகத்துல இருக்கிற மாதிரி தோணுது டா ! அவ என் கூடவே இருக்கனுமுன்னு எப்போதும் ஒரு நினைப்பு இருந்திகிட்டே இருக்கு. ." என்றான் ஹரி.

"வாழ்த்துக்கள் டா! சொன்ன நம்பணும் நீயும் காதல் வலையில விழுந்துவிட்டாய் சிக்கிரம் அதை அந்த பொண்ணு கிட்ட சொல்லிடு டா :-)
ஆனால் ஒண்ணு அவளுக்கு இந்த எண்ணம் இருக்கான்னு முதலில் தெரிஞ்சிக்கிட்டு அப்புறமா உன்னோட மனச திறந்து காட்டு!" என்றான்.

"அப்படியே குருஜி! தங்கள் ஆணை ! ;-)" என்று முடித்தான் ஹரி.

தூக்கம் வருவது போல் இருந்தாலும் தூங்க பிடிக்கவில்லை அவனுக்கு. ஏதோ எண்ணங்கள் வந்து போயின. ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் சற்று பயமாகவும் இருந்தது அவனுக்கு.அவள்அப்படி ஒரு எண்ணத்துடன் இத்தனை நாளாக பழக வில்லை அவன் இருந்தாலும் அவள் அவனிடம் சொன்ன வாசகம் இன்னும் அவன் மனதில் ஓடிற்று.

"உங்கள மாதிரி ஒரு வித்தியாசமான மனிதரை இது வரை என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை. உங்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு வேண்டும் போல இருக்கிறது தெரியுமா?" என்று பிரியா சொன்னது இன்னும் அவன் காதுகளில் ரீங்காரம் இட்டது.

நெடுநேரம் இப்படியே அவன் இதனை பற்றியே எண்ணிக்கொண்டு தூங்கி போனான் ஹரி . தன் அம்மாவின் விழிகள் அவனை கவனிப்பது கூட தெரியாமலே!

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
Kamini_Yogini 7 காமினி_யோகினி 7 எஸ் பி ஸ்வாமிநாதன் கொஞ்சம் ஆடித்தான் போனார். அடேயப்பா! என்னய்யா இது? இந்த ஆசிரமன்தான் இவங்க எட் ஆபிஸா? என்றார் ஆச்சரியம் தாளாமல் இல்ல சார்! இது இவங்களோட தமிழ்நாடு பிராஞ்சு ஆபீஸ் சார் .எட் ஆபீஸ் மைசூரில் இருக்குது சார். என்றாள் கங்கா ஓ அப்படியா! இந்த பிள்டிங்கே  கோடி கணக்கிலே மதிப்பிற்கும் போல இருக்குதே இதுவே மாளிகை போல இருக்குதுன்னா அப்போ அங்கேனே? சொர்க்கம் போல இருக்கும் சார்  அதோ அங்க பாருங்க! என்று கங்கா சுட்டி காட்டிய திசையில் படிய வாரிய தலை, கொஞ்சம் மாநிறம். நரைத்த திருத்தப்பட்ட மீசை தாடி. அகலமான நெற்றியில் குங்கும பொட்டு.  இளம் சிவப்பு நிற வெட்டி அதில் வெள்ளை பச்சை நீல கரை கதர் சட்டை வைர மோதிரம் பிரேஸிலேட் மின்ன வேட்டை நாய் போல கத்தி கொண்டிருந்த சேகரமூர்த்தி தென்பட்டார். பல பேர் அங்கு பளிங்கு தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதில் பலரும் வட நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் என்று அவர்கள் முகத்தை பார்த்த உடனே தெரிந்து கொண்டனர் போலீசார். பலர் பெரிய ரோஜா தோட்டத்தினை செப்பனிட்டு கொண்டிருந்தனர். வானளா...