Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 3

அனுப்ப பட்ட மின்னஞ்சலை மறுமுறை பார்த்தான் ஹரி. பிரியா, பட்டப் படிப்பு கணினி பொறியியல் அளவான குடும்பம், பல குறுகிய கால ப்ராஜக்ட் களில் பணி புரிந்த அனுபவமும் நற்சான்றிதழ் மட்டுமே அவள் பாயோ டேட்டாவில் இருந்தன.

"You have a Meeting at 6:15 PM" என்று எட்டிப்பார்த்து வெறுப்பேற்றியது மின்னஞ்சல்.
------------------------------------------------
மாலை மணி 6:30. கொஞ்சம் மங்கிய வெளிச்சமும், ஒளிக்கற்ரைகள் சிந்தும் 'ப்ரஜெக்டர்' ஒளியும் ஹரியின் மன நிலையினை இன்னும் வெறுப்பாக்கின.

"Hi! Hello! And a warm welcome to you from Techspark Technologies. I am Hari Jagadeesan..I am going to be your Mentor for your entire probation period."

Could you please introduce yourselves one by one?என்று கூறி அவன காப்பியை உறிஞ்சியபடி அந்த ஹாலில் உள்ள அனைவரையும் நோட்டம் விட்டான். மாலை அவன் இந்நேரம் வீட்டின் பாதி வழி சென்றிருப்பான்.

"கடுப்பு! இந்த சந்தை மாடெல்லாம் என்ன மேக்க விட்டுட்டு இவனுங்க எல்லாம் ஜாலியா வீட்டுக்கு போய்ட்டாங்க பாரு! என்று உள்ளூர திட்டிக்கொண்டான் அவன்.

மலர்.. வாசு.. தயாள்..ரமேஷ்..வகுப்பு முடிந்தது ...எங்கே அந்த பிரியா?

"Hi! May I come in?"

தன் கண்களை பயிற்சி அறையின் கதவுகளில் குத்தி நிறுத்தினான். பளிச் என்ற முன்பக்க விளக்கில் அவளை சரியாக பார்க்க இயலவில்லை. குரல் மட்டும் கேட்டது.
Hi I am ...Priya...May I come in? என்று குரல். இன்னும பார்க்க முடியவில்லை. ப்ரஜெக்டர் வெளிச்சம் கண்ணை உறுத்தியது.

பிரியா தான் வந்தாள்.
"நீங்க தான் மிஸ் பிரியா வா?" என்றான்.
"ஆமாம் ஸர். உள்ள வரலாமா?" என்றாள் அவள்.
"உள்ள வாங்க! மிஸ் பிரியா.அப்படியே உங்கள அறிமுக படுத்திக்கங்க. நீங்க தான் லேட்." என்று கிண்டல் செய்தான். எல்லோரும் உடனடி சிரிப்பினை உகுத்தனர்.

"Hi! Let me introduce my self I am Priya Vasudevan. Graduated in Hidustan college of Engineering for ECE,2007 passed out...." ரயில் எஞ்சின் போல பேசினாள்.

" ஒ.கே! உக்காருங்க. என்று மத்தியில் வெட்டி நிறுத்தினான். நாம இனிக்கி கிளாஸ் பாக்கலாம். "

வகுப்பு முடிந்தது. வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தான் ஹரி.

"ஹரி ஸார்!! ஒரு நிமிஷம்!" ஒரு குயில் கூவிற்று. ஆனால் கழுதைக்கு தெரியுமா...;-)

"சொல்லுங்க பிரியா!
"நான் சீக்கிரமா தான் கிளம்பினேன். வண்டி பிரச்னை பண்ணிடுத்து. அதுனால தான் மணிக்கு வர முடியல. மன்னிச்சிடுங்க. "

"இந்த மாதிரி சாக்கு சொல்றத விட்டுட்டு இனிமே ப்ளான் பண்ணி கிளம்பி வர்றத பாருங்க." என்று ஊசி குத்தி விட்டு கிளம்பினான். பிரியாவின் முகம் வாடியது.

வண்டியை தட்டினான் ஹரி. "அப்படி பேசி இருக்க கூடாது தான். சே! இது முறை அல்லவே! "என்று அவளை பற்றி சிந்தனை சுற்ற விட்டான்.

இரண்டு வார பயிற்சி வகுப்பு முடிந்தது. பிரியா தான் மிகவும் சந்தேகங்கள் கேட்டாள். விகாஸ் உடன் தான் அதிக நேரம் ஜீ chatல்அரட்டை அடிப்பான் ஹரி. அமேரிக்கா வில் இருந்தாலும் அவன் தான் நித்தம் பேசும் நண்பன். பள்ளியிலிருந்து ஒரே நண்பன் ஆதலால் அவன் இடம் மட்டுமே அனைத்தாயும் பகிர்ந்து கொள்வான் ஹரி.

"ரொம்ப அதிகமா பண்ற டா அவ" என்று ஹரி கூற.. "விடு மச்சான்! பொண்ணுங்க அவங்க இடத்தை காண்பிக்கணும்னு எப்பொவுமே படம் காட்டுரது வழக்கம் தானே" என்று சமாதானம் செய்தான் விகாஸ்.

ஒரு நாள் மாலை டீக்கடையில் ஒரு பனிப்போர் வந்தது. "பாருடா யோகத்தை! நம்ம சாமியாருக்கு ரதி வந்து சிக்கிட்டா போல" அன்று நண்பர்கள் கிண்டல் அடித்தனர். என்றுமே இல்லாத அளவிர்க்கு அன்று கோபம் பீறிட்டு கிளம்பியது.
"என்ன மச்சி உளர்ற?" என்று அவன் சகாவை முறைத்தான்.

"பய்யன் சிக்கிட்டான். என்ன மச்சான் பிரியா மேல உனக்கு ஒரு கண்ணு போல.." என்று கிண்டல் செய்தனர். அவ்வளவு தான்.
"இந்த ஹரி அப்டி பட்டவன் இல்லடா! பொண்ணுங்க முன்னாடி பல்ல இளிச்சிகிட்டு போக என்ன என்ன மூணாம் தர மனுஷன் போல நெனச்சியா?" என்று வேடிதுவிட்டான்.

டீக்கடையில் இருந்த தொலைக்காட்சியில் பிதாமகன் படத்தின் வசனம் மட்டும் அலறியது.
"விதி வலியது.....!!"

விதிக்கு மட்டுமே தெரியும் அவன் தன்னை அறியாமல் விழா போகிறான் என்று:-)

அப்படி வெடித்தான் தவிர உள்ளுக்குள் அவள் எண்ணம் அவ்வப்போது வருவதும் அதை தட்டி கழிப்பதும் அவன் உள்ளத்தில் நடந்து கொண்டிருந்தான் இருந்தது. அத்தனை சுலபமாக அந்த எண்ணங்களை அவனால் அடக்க முடியவில்லை. என் என்றும் தெரியவில்லை.

பிரியா. அவ்வளவு சிகப்பு நிறம் இல்லை என்றாலும் களையான முகம். உயரம் 5 அடி இருக்கும். குரல் அழகாக இருந்தது. நல்ல வாசனை பரப்பும் பர்ஃப்யூம் போட்டு இருந்தாள். கண்கள் பேசின.கொவ்வை வாய் கிண்கிணி பாடின. வீட்டில் உள்ள வானொலி பண்பலையில் கேட்டது "சுடிதார் அணிந்து வந்த சொற்கமே..." சூரியா வின் பாட்டு.
இப்போதெல்லாம் அலுவலகத்திலும் அவனுக்கு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது.
---------------------------

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...