Skip to main content

Kamini_Yogini 5

காமினி யோகினி 5


இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனுக்கு இன்று தினசரி ராசி பலன் பார்த்திருப்பார் என்றால் அவருக்கு இன்று அதிர்ச்சி ஆச்சரியம் எதிர்பாராத திருப்பம் என்றே போட்டிருக்கும். அன்று அவர் அலுவலகத்திற்கு ஒரு ஃ போன் வந்தது.
அதில் காமினி இருக்கும் இடம் தனக்கு தெரியும் என்றும் உடனே தான் சொல்லும் இடத்திற்கு வருமாறு சொல்லிவிட்டு மறுமுனையில் இருந்த நபர் தொடர்பை துண்டித்து விட்டார்.

அந்த இடம் ஊட்டி மைசூரு  ஒட்டி ஒரு மலை கிராமம் என்று தெரிந்து கொள்ளவே சுவாமிநாதனுக்கு பத்து நிமிடம் பிடித்தது. அங்கு எதற்காக இந்த நபர் வர சொல்கிறான் என்று சந்தேகி த்துக்கொடே ஒரு சிகரெட்டை பற்ற வைத்து கொண்டார். இப்போதெல்லாம் அவருக்கு இந்த பழக்கம் புதிதாய் தொத்தி கொண்டது. கங்கா அவளின் பதவியையும் மீறிய ஒரு உரிமையில் கடிந்து கொண்டாள் . அதனால் இந்த பழக்கத்தை ஒருவாறாக  கட்டு படுத்த படாத பாடு பட்டு கொண்டிருந்தார்.
கங்கா என்னமா! அங்க உனக்கு தெரிஞ்ச ஆளுங்க  யாராவது அங்கே இருக்காங்களா? என்று கேட்க இருக்கானே சார் என்ன ஒண்ணுவிட்ட அண்ணன் மவன் கான்ச்டபிள் செல்வம். என்று ஒரு போடு போட்டு விட்டு அவன் என்னை டயல் செய்ய ஆரம்பித்து விட்டாள் . இவளுக்கு இந்தியா பூரா சொந்தக்காரங்களை வெச்சிருப்பாளா ? என்று சற்று அதிர்ந்து போனார் சுவாமிநாதன்.

------------------------------------------------------------------------------------------------------------------

மணி பன்னிரண்டை நெருங்கிக்கிண்டிருந்தது

தீக்ஷண்ய ஸ்வாமிஜி தன்னிலை மறந்து யோகினி ஜெபத்தை நடத்தி கொண்டிருந்தார். அவர் தோளில் மிருதுவான ஸ்பரிசம் பட்டது. அன்பரே! எழுந்திரும் என்று யோகினி அவரை எழுப்பினாள். அவர் முகம் ஆயிரம் மின்சார விளக்குகள்  ஜொலித்தது. வந்துவிடாயா யோகினி என்று வாஞ்சையுடன் பற்றினார்.
பின்னிரவு முழுவதும் அவருக்கு யோகினி சுகத்தினை அல்லி தெளித்து    கொண்டிருந்தாள். அன்பரே! உங்கள் ஜாதகத்தினை என்றேனும் உணர்ந்துள்ளீர்களா? என்று  கேட்டால். தாம்பூலத்தினை சுவைத்துக்கொண்டு இல்லை  கவலை இல்லை, நீ  நான் ஏன் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?  என்றார்.யோகினி , உங்கள் ஜாதக படி அஷ்டம சனியும் சுக்கிரனும் வக்கிரம்  பெற்றுள்ளனர்.என்றாள் . இதனை கேட்ட தீக்ஷண்ய ஸ்வாமி முகம் பேயறைந்தது போல உள்ளது  உங்களுக்கு கண்ட சனி வந்திருக்கும் காலம் இது. இதனை நீங்கள் எப்படியேனும் ஜெயிக்க வேண்டும். மேலும் சந்திரனும் புதன் உங்களுக்கு  சாதகமாக இல்லை சந்திரன் மனத்துக்காரன். ஆகவே  நீர் எதையும் இனிமேல் சர்வ ஜாக்கிரதையாய் செயல் படுத்தவேண்டும். கவனம்! இது தேவ ரகசியம், இதனை கணவன் மனைவிக்கும் தெரிவிக்கலாகாது, இதனால் எனக்கு என்ன ஆகுமோ என்றும் எனக்கு தெரியாது, மற்ற உபாசகங்களை விட நீ சிறப்பு பெற்றவர் ஆகவே உங்களுக்கு இதனை சொன்னேன். உங்கள் வாக்கோ செயல்பாடுகளோ  உங்களை என்னிடமிருந்து  பிரித்து விடலாம். நினைவிருக்கட்டும் நீங்கள் வேறு பெண்களிடமிருந்து ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் இல்லையெனில் மரணம் நிச்சயம் .
இதனை தடுக்க வழியே கிடையாதா? என்றார் தீக்ஷண்ய ஸ்வாமி.   இருக்கிறது உம்மிடம்  ஒரே நட்சத்திரத்தில், அதுவும் மிருகஷீரிஷ நட்சத்திரமாக இருந்தால் உன் ஜாதகத்திற்கு விசேஷம்  நீ ஒரே நேரத்தில் நான்கு கன்னிப்பெண்களையும் மயானக்காளிக்கு ஆத்ம பிரசாதம் அளித்தால் உன் ஆயுள் தப்பும் என்றாள். இது நடக்குமா என்றார் தீக்ஷண்ய ஸ்வாமி முயற்சி திருவினையாக்கும். மேலும் இதனை ஒரு மாத்திற்குள் முடிக்க வேண்டும் நிறைந்த அமாவாசையில் முடிந்தால் உனக்கு சகல காரியமும் சிரஞ்சீவி தன்மையும் கிடைக்கும்.

அப்படியே செயகிறேன் எனக்கு இன்னொரு உதவியும் வேண்டும் என்றார் தீக்ஷண்ய ஸ்வாமி என்ன கூறும் என்றாள்  யோகினி, எனக்கு நிறைய ஸ்வர்ண பாளங்கள் வேண்டும் இந்த மடத்தினை நான் விரிவு படுத்தி ஒரு பெரிய அமைப்பாக உருவாக்க வேண்டும் அதற்க்கு இந்த உதவியை தேவி அருள வேண்டும் என்றார். எம்மை விடவும் பெரும் அழியாப்பதவியம் பரம்பொருளை உணரும் யோக சித்தியினை விட்டு சிற்றின்பத்திலேயே  இந்த மானிடர்கள் அலையும் அல்ப ஆசைகள் என்னே! என்று யோகினி நினைந்து சிரித்தாள்.
அதற்க்கென்ன தந்தேன்! ஆனால் பேராசை பெருநஷ்டம்.  உமக்கு இயற்கையிலேயே வசிய சக்தி உள்ளது. நான் இதுவரை கொடுக்கும் பொன்னும் நகைகளும் உமக்கு போதும். ஆயினும் உமக்கு ஒரு பக்ஷத்திற்கு  பொருள் தரும் வசியத்தினை அளிக்கிறேன். விதி வசத்தால் யாரேனும் உம்மை காண வந்தால் அவர்கள் உம்  வாக்கினால் அடிமை படுவர்.  அது ஒரு பக்ஷத்திற்கு வேலை செய்யும் அப்படியே கொடுங்கள் என்று சொன்னார். அவள் தன் வாய் தாம்பூலத்தில் ஒரு சிறு துளியை ஏந்தி அவர் வாயில் விட்டாள். இதையும் உமக்கு தருகிறேன் என்று சொல்லி அவள் அணிந்திருந்த நகைகளை அனைத்தையும் களைந்து  விட்டு  ஒற்றை ஆடையுடன் மறைந்தாள்.
------------------------------------------------------------------------------------------------------------------
சம்பத் படுத்திருந்த இடம் மிகவும் புதுமையாகவும் புதிராகவும் இருந்தது. அது மலை குகைகளிலேயே ஒரு பெரும் குகை. அங்கு வெளிச்சம் என்பது மருந்தளவிற்கு கூட இருக்க கூடாது. ஆனால் நல்ல உற்சாகம் அளிக்கும் விதமாக நறுமணமும், மூலிகை வாசமும் கொண்ட புகை அவன் நாசியை சுற்றியது. அவனை சுற்றி நல்ல வெளிச்சம் நிறைந்திருந்தது. புன்னகையும் தெளிவும் கொண்ட ஒரு மனிதர் அவனை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார். அவர் தாடி மீசைகளை தாண்டி ஒரு மெல்லிய புன்னகை மலந்திருந்தது. எழுந்துட்டியா சம்பத்? எப்படி இருக்கே? என்று ஒரு தெளிவான குரல் அவன் காதுகளில் ஒலித்தது. அந்த கண்கள். அப்பா வைரங்கள் டால் அடிப்பது போல எத்தனை தேஜஸ்! அந்த பார்வை சொக்க வைக்கும் திறன் உடையதாய் இருக்க வேண்டும். எத்தனை தீர்க்கமான அருள் பார்வை.
சம்பத் மெதுவாக  எழுந்தான். அவன் உடலை கூறு போட்டால் போல் வலியினை ஒருவாரமாக அனுபவித்து வந்தது அவன் நினைவிற்கு வந்தது. அப்போது அவன் பார்த்தது அந்த முகமம்  அந்த கண்களும் மட்டுமே, அப்புறம் அவன் இறந்து விட்டதாகவே அவன் நினைத்திருந்தான். இரண்டு நாட்களில் அவன் சற்றே சுயநினைவுக்கு திரும்பிய பொது உடல் எங்கும் தீ காயங்களும் கால் எலும்பு இரண்டாக பிளந்திருந்ததும் அவனுக்கு நினைவு வந்தது. முகத்தில் ஒரு எரிச்சல் நிச்சயம் அவன் முகம் தீயினால் சிதைந்து போயிருக்கும் என்று  நினைத்திருந்தான். அந்த நினைப்பு இப்போது மிரட்டவே உடனே அவன் கை கால்களை பார்த்தான். ஒரு இடத்திலும் தீக்காயங்கள் இல்லை, அவன் கால் எலும்பு முறிந்தது போல நினைவு. ஆனால் அந்த இடத்தில் சற்றே வலி இருந்தது  தவிர காயங்களை காண வில்லை. முகத்தை தடவி பார்த்தான் ஆனால் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவன் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை.
என்ன நாம உயிரோட இருக்கோமா  இல்லை செத்து போயிட்டோமா  இல்லை செத்தவன் எப்படி பிழைச்சேன்னு பார்க்கிறாயா? என்று கடகடவென்று சிரித்தார்   பாலைசித்தர் என்று அழைக்க பெற்ற சிவா ஸ்வாமிகள்.
======================================================================

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
காமினி யோகினி - 8 காமினி இப்போதும் ஒரு ரண வேதனையை அனுபவித்து கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போது வரைக்கும் எங்கிருக்கிறோம் தான் யார் என்பது கூட தெரியாமல் போயிருந்தது. தன்னுடைய ஸ்நேகிதிகளுடன் வரும்போது ஒருவர் காரில் ஏறிக்கொள்ள லிப்ட் கேட்டதும் பின்னர் அவரிடமிருந்து ஒரு கடுமையான வாடை வந்ததும் அதில் அவர்கள் மயக்கமுற்று கொண்டைஊசி வளைவில் தங்களுடைய வாகனம் மோதி தலைகுப்புற விழுவதும் மட்டுமே அவளுக்கு நினவிருந்தது. அதுவும் யார் எதற்க்காக அவர்களோடு வந்தனர் என்று தெரியவில்லை. சூரஸ்வாமி அவர்களை ஒரு பெட்டியில் வைத்து ஆசிரம நிலவறையில் கிடத்த  சொன்னதும் உப சீடர்கள் அவர்களை பெட்டியில் வைத்து பின்னர் அவர்களை கிடத்தி கொண்டு போயினர். அப்போது இருபதடி உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒரு பெரிய படம் அவள் கண்களில் தென்பட்டது. பெட்டியில் கிட்டத்தட்ட சவம் போல அசைவின்றி படுத்திருந்த அவளுடைய கண்கள் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தன. அவை பெட்டியின் துவாரத்தின் வழியே அந்த படத்தினை பார்த்தன. ஆமாம் அது அந்த உருவம் யாரோ ஸ்வாமியை போல உள்ளதே, ஆமாம் இதை நான் எங்கோ கண்டமாதிரி இருக்கே என்ற கேள்விகளுடன் அவள் நினைவு...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...