Skip to main content

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு,

உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது.

நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது.

இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள் நான். ஆனால் மற்றவர்களிடம் பழகியத்தை விட உங்களிடம் நான் சற்று அதிகமாக பாசமும் நட்பும் காட்டியது தான் என் தவறு என்று இப்போது நினைக்கின்றேன். நம் கண்ணியம் மிக்க நம் நட்பு கண்ணாடி சில்கள் போல நொறுங்கி விட்டதன் காரணம் இது தான் என்று நான் நினைக்கிறேன். நம் நட்பின் இந்த துயரமான முடிவிர்க்கு நாம் இருவரும் காரணமாகி விட்டோம். நீங்கள் எனக்கு ஒன்று மட்டும் காற்று கொடுத்து விட்டீர்கள். கசப்பான உண்மை அது! இனி யாராயும் நம்ப கூடாது என்பது தான் அது! இனி யாரிடத்திலும் நான் இவ்வளவு உயிரை பழக போவதும் இல்லை. இனி இந்த பிரியா பழய பிரியாவாக இருக்க போவதும் இல்லை.

இனி நாம் எப்போது நேருக்கு நேர் சந்தித்தாலும் இந்த எண்ணம் தான் உங்கள் மனத்தில் வருமே தவிர நட்பு வளராது என்று எனக்கு தெரியும்.

"என்னை பற்றி என்ன படித்தாய்? என்று நீங்கள் அடிக்கடி கேட்பததுண்டு. உங்களை நான் படிக்க ஆசைப்பட்டது உண்மை தான் ஆனாலும் உங்கள் புத்தகத்தின் பக்கங்களில் கிறுக்கியது என் குற்றம் தான். அப்படி பட்ட வாசகி அந்த நூலின் எதிரி. ஆம் ஹரி உங்கள் மன புத்தகதினை படிக்கும் அறுகதை இனி எனக்கு இல்லை. இனி நான் இந்த புத்தகததினை படிக்கவும் விருப்ப படவில்லை. உள்ள வாசகி நானல்ல! உங்கள் வாசகி என்றேனும் உங்களுக்கு நிச்சயம் கிடைப்பாள்.

நல்லவர்களுக்கு அழகு சொல்லாமல் போவது தான் என்று படித்து இருக்கின்றேன். ஆனால் என் நிலையை உங்களுக்கு தெளிவு படுத்தாமல் போனால் அது தவறு. ஆதலால் நான் இந்த கடிதத்தினை எழுததுகின்றேன்.

உங்களிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்று தான் இந்த கடிதத்தினை நீங்கள் உடனே அழித்து விடவும். அப்படியே என் எண்ணங்களையும் சேர்த்து தான். இந்த உரிமை நம் நட்பின் அடையாளமாக கேட்கின்றேன். நீங்கள் பழையபடி உங்கள் எண்ணங்களை சிதற விடாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவேண்டும்.

என் ஆசையினை நிறைவேற்ருங்கள். நான் என்னுடைய பழைய முகவரிகள், செல்பேசி சேவை அனைத்தையும் அழித்து விட்டேன். இனி என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம்.

இப்படிக்கு,
பிரியா.

*************
நெடு நேரம் கடிதத்தினை உற்று பார்த்துக்கொண்டிருந்தான் ஹரி. இரு கண்ணீர்த் துளிகளின் கரை அதில் ஓர் இடத்தில் சிந்தி இருந்தது. ஹரி மனத்தில் பெரிய கல் ஒன்று கனத்தது.

"என் வாசகியே! உன்னை மகிழ்விக்காத புத்தகமாக போய்விட்டேனே! உன் வேண்டுகோளை நிராகரிக்கின்றேன். ஆமாம் இந்த கடிதத்தை நான் அழிக்க போவதில்லை. உண்மையான நட்பை பகுக்க தெரியாத முட்டாள்களுக்கு இது ஒரு சாட்சி. எனக்கு இன்னொரு வாசகி கிடைப்பாள் என்பது சந்தேகமே.அப்படியே கிடைத்தாலும் அவள் உன் போல உயர்ந்த வாசகியாக இருக்க முடியாது.என்னை மன்னிப்பாயா என் தோழியே?"

அவன் அறியாமல் அவன் விட்ட கண்ணீரும் அதில் சேர்ந்து அந்த காகிதத்தில் கலந்தது. அவர்கள் தான் சேரவில்லை அவர்கள் கண்ணீராவது சேரட்டுமே!

முற்றும்
-------------------------------------------------------------------------------
(இது என் முதல் முயற்சி. முட்களோ பூக்களோ ஏதுவாயினும் நான் எற்க்கிறேன். தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.)

நன்றி - ஸ்ரீராம்
*******************************************************************************

Comments

  1. ஒரு அருமையான கதை, அருமையாக சொல்லப்பட்டது. முதலில் கொஞ்சம் எழுத்து நடை எளிமையாக இருந்தாலும் பின் வரும் பகுதிகள் அருமை! இன்னும் எழுத என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

காமினி யோகினி - 8 காமினி இப்போதும் ஒரு ரண வேதனையை அனுபவித்து கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போது வரைக்கும் எங்கிருக்கிறோம் தான் யார் என்பது கூட தெரியாமல் போயிருந்தது. தன்னுடைய ஸ்நேகிதிகளுடன் வரும்போது ஒருவர் காரில் ஏறிக்கொள்ள லிப்ட் கேட்டதும் பின்னர் அவரிடமிருந்து ஒரு கடுமையான வாடை வந்ததும் அதில் அவர்கள் மயக்கமுற்று கொண்டைஊசி வளைவில் தங்களுடைய வாகனம் மோதி தலைகுப்புற விழுவதும் மட்டுமே அவளுக்கு நினவிருந்தது. அதுவும் யார் எதற்க்காக அவர்களோடு வந்தனர் என்று தெரியவில்லை. சூரஸ்வாமி அவர்களை ஒரு பெட்டியில் வைத்து ஆசிரம நிலவறையில் கிடத்த  சொன்னதும் உப சீடர்கள் அவர்களை பெட்டியில் வைத்து பின்னர் அவர்களை கிடத்தி கொண்டு போயினர். அப்போது இருபதடி உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒரு பெரிய படம் அவள் கண்களில் தென்பட்டது. பெட்டியில் கிட்டத்தட்ட சவம் போல அசைவின்றி படுத்திருந்த அவளுடைய கண்கள் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தன. அவை பெட்டியின் துவாரத்தின் வழியே அந்த படத்தினை பார்த்தன. ஆமாம் அது அந்த உருவம் யாரோ ஸ்வாமியை போல உள்ளதே, ஆமாம் இதை நான் எங்கோ கண்டமாதிரி இருக்கே என்ற கேள்விகளுடன் அவள் நினைவு...
காமினி யோகினி - பகுதி 10 காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!! எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள்.  கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்க...