Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 8

-----------
"எட்டி சென்றால் கிட்டி வரும்
கிட்ட சென்றால் எட்டி போகுமோ? "
--------------
மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டு விழித்தான் ஹரி. பிரியா அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள். அப்போது அவன் கால்கள் மிகுந்த வலி ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். " சிரமப்படாத ஹரி! ஒண்ணும் இல்ல என்று அவன் நெஞ்சின் மேல் மெல்ல அழுத்தினாள் பிரியா.

" பிரியா? உனக்கு ஒன்னும் ஆகலியே? அடி படல்லியே?" என்று விசாரித்தான் ஹரி.
"எனக்கு என்ன ஆயிருந்தாலும் பரவா இல்ல. நல்ல வேளையா உனக்கு எதுவும் ஆகல்லை அது போதும் சாமி !". என்று கூறினாள் அவள்.

அப்போது டாக்டர் வந்தார். "என்ன ஹரி எப்படி இருக்கீங்க ?"

"கொஞ்சம் வலிக்கிறது டாக்டர் என்னாச்சு என் காலுக்கு?"
Nothing serious! Thank God there is no fracture or injury.Just a sprain தான் காலில டயர் ஏறினதால நீங்க அதிர்ச்சி ஆயிடீங்க அவ்வளவு தான். சாயங்காலம் கொஞ்சம் சரி ஆயிடும். நீங்க போயிடலாம். ரெண்டு நாள் வீட்டில ரெஸ்டு எடுத்துகிட்டு ஆபிஸ் போங்க போதும். பாவம் இந்த பொண்ணு தான் ரொம்ப பயந்து போய்ட்டா. "என்று தேற்றினார் அவர்.

"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். " என்று ஹரி புன்னகைதான்.

ஹரியை பிரியா விட்டிற்கு கொண்டு சென்று விட்டாள். அவன் விட்டில் அல்லோ கலோல பட்டது. ஹரியின் அம்மா மிகவும் பயந்து விட்டாள். பின் அனைத்து விவரங்களும் சொன்ன பிறகு ஓர் அளவிற்கு அமைதி ஆனாள்.

பிரியா பின்னர் விடை பெற்று சென்ற பின் அப்பா அவன் அருகில் வந்தார்.

"ரொம்ப நல்ல பொண்ண இருக்காடா அவ! ரொம்ப நல்ல வேலை செஞ்சிருக்க இனிக்கி உன் உயிரை பத்தி கவலை படாம நீ அவள காபாத்தி இருக்க . நிஜம்மாவே ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு!" என்றார்.

-----------------------------
அவன் தேறி வந்ததும் அன்று தேனீர் நேரத்தில் பேச்சு தொடங்கியது.

"உன்கிட்ட எத்தன கோடி தடவ தேங்க்ஸ் சொன்னாலும் போதாது!" என்று கண்கள் பனிக்க சொன்னாள் பிரியா.

"அட போதும் பா! நான் என்ன உலக சாதனைய செஞ்சிட்டேன். உனக்கு ஒரு பிரச்சனை அப்டின்னா நான் சும்மா இருபேன என்ன? நண்பர்களுக்குள்ள என்ன இருக்கு? அதுலயும் நீ எனக்கு ஒரு படி மேல. "

"என் மேல அவ்வளோ மதிப்பு வெச்சிருக்கியா ஹரி? என்ன அவ்வளவு புடிக்கும உனக்கு? நான் அவ்வளவு அருகதை உள்ள நண்பியா என்ன ?"

"அப்படி சொல்லாதே நீ தான் எனக்கு எல்லாமே.. இல்லேன்னா உன்கிட்ட இப்படி பழக மாட்டேன் பிரியா.வாழ் நாள் எல்லாம் எனக்கு உன்னை புடிக்கும் ."

"நீங்க ஒரு புரியாத புத்தகம். சில நேரம் உங்கள படிக்க முடியல சில நேரம் கொஞ்சம் படிக்க முடியுது. என்ன அவமான படுத்தி நோக அடிச்சா ஹரியா இனிக்கி என்ன நண்பியா ஒரு உயர்ந்த ஸ்தானத்தில வேசிருகாருன்னு நினைக்கும்போது எனக்கு திகைப்பாவும் மலைப்பாவும் இருக்கு. அதே சமயம் உங்கள பத்தி முழுசவும் தெரிஞ்சிக்கிற அளவிற்கு இன்னும் நாம பழகல்ல அதுக்குள்ள எவ்வளோவோ பெரிய விஷயங்கள கத்தும் குடுத்தீங்க ஏன்? என் உயிரை காபற்றிநீங்க . "

"எனக்கு தெரியும் நான் அவ்வளவு அழகில்லை. பெரிய வேலை எல்லாம் கூட இல்லை சும்மா திரிஞ்சி கிட்டு இருந்தேன், அம்மா அப்பா அக்க கல்யாணத்திற்கு காசு சேர்க்க கஷ்ட படுரங்கன்னு தெரிஞ்ச அப்புறம் தான் பொறுப்பா வேலைக்கு சேர்ந்து செய்ய ஆரம்பிச்சேன்.

"எனக்கு கிடைச்ச முதல் நண்பன் நிங்கதான். உங்கள பாத்து தான் ரொம்ப பொறுப்பா இருக்க கத்துகிட்டேன். நீங்க என்ன திட்டும் பொது எல்லாம் அப்படியே உங்கள கொன்ன என்னனு நினைக்க தோணும். பிறகு தான் நீங்க ஏன் மேல அக்கரை எடுத்து கிட்டு சொல்றிங்கன்னு புரிஞ்சிது. நானும் ரொம்ப அதிர்ஷ்ட காரி தான். அதுக்கு தான் நன்றி சொன்னேன். "

"எனக்கு மட்டும் என்ன பிரியா உனக்கே தெரியும். நான் யாரையும் வெறுக்கிறது இல்லை. என்ன யாரும் புரிஞ்சிகல்லை. நான் எதை சொன்னாலும் என்னை சிடு மூஞ்சி நு திட்டினாங்க. நான் வலியப் பொய் எந்த பொண்ணுங்க கிட்டயும் பேசினது இல்ல. அனால் நீ தான் ஏன் கூட என்ன புரிஞ்சி கிட்டு பேசின. நிர்பந்தைனால என்கூட இருக்க வேச்சங்கன்ன்னு நினைச்சேன் அனால் இப்போ அது நட்பா ஒரு நல்ல துணையா எனக்கு கிடைச்சதுதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுனால நான் தான் உனக்கு நன்றி சொல்லணும்.."

"சரிதான் நீங்க ஒரு புரியாத மொழி புத்தகம் தான் உக்காந்து. நிறைய படிக்கணும்." என்றாள் பிரியா.

விகாசிடம் அனைத்தையும் சொன்னான் ஹரி. அவர்க அன்று நிறைய பேசினார்கள்.

"உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் விகாஸ். இப்போ சொல்லு உனக்கு எதாச்சும் புரியுதா?

"நல்ல புரியுது உனக்கு முத்தி போச்சு ன்னு ."

"விளையாடாதடா! சரியாய் சொல்லு அவ ஏன் மேல வெச்சிருக்கிறது என்ன? "

"இன்னும் சொல்ல தெரியலடா! ஆனா நீ சொல்றத பாத்தா அவளுக்கு உன்மேல ஒரு அபிப்ராயம் இருக்கிற மாதிரி தான் தெரியுது என்றான்."

"அது போதும்! நான் அவ கிட்ட மனச திறக்க வேண்டியது தான். என்னால இனிமே காத்துகிட்டு இருக்க முடியாதுடா."

"எனக்கு ஒண்ணும் இது சரியான நேரம் மாதிரி தோணல. இருந்தாலும் உன் ஆசை நிறைவேறட்டும்.வாழ்த்துக்கள்!" என்றான்.

விகாசிடம் சொல்லிவிட்டனே தவிர அவன் எடுத்த முடிவு சரியா என்று மூளை தர்க்கம் செய்து கொண்டிருந்தது.அனால் மனம் ? அது யாருக்கேனும் அடங்கியது உண்டோ ? ஹரியும் விதி விலக்கல்ல. விரைவில் அவளிடம் சொல்லி விடுவது என்று முடிவெடுத்தான்.
*******************

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
காமினி யோகினி - 8 காமினி இப்போதும் ஒரு ரண வேதனையை அனுபவித்து கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போது வரைக்கும் எங்கிருக்கிறோம் தான் யார் என்பது கூட தெரியாமல் போயிருந்தது. தன்னுடைய ஸ்நேகிதிகளுடன் வரும்போது ஒருவர் காரில் ஏறிக்கொள்ள லிப்ட் கேட்டதும் பின்னர் அவரிடமிருந்து ஒரு கடுமையான வாடை வந்ததும் அதில் அவர்கள் மயக்கமுற்று கொண்டைஊசி வளைவில் தங்களுடைய வாகனம் மோதி தலைகுப்புற விழுவதும் மட்டுமே அவளுக்கு நினவிருந்தது. அதுவும் யார் எதற்க்காக அவர்களோடு வந்தனர் என்று தெரியவில்லை. சூரஸ்வாமி அவர்களை ஒரு பெட்டியில் வைத்து ஆசிரம நிலவறையில் கிடத்த  சொன்னதும் உப சீடர்கள் அவர்களை பெட்டியில் வைத்து பின்னர் அவர்களை கிடத்தி கொண்டு போயினர். அப்போது இருபதடி உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒரு பெரிய படம் அவள் கண்களில் தென்பட்டது. பெட்டியில் கிட்டத்தட்ட சவம் போல அசைவின்றி படுத்திருந்த அவளுடைய கண்கள் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தன. அவை பெட்டியின் துவாரத்தின் வழியே அந்த படத்தினை பார்த்தன. ஆமாம் அது அந்த உருவம் யாரோ ஸ்வாமியை போல உள்ளதே, ஆமாம் இதை நான் எங்கோ கண்டமாதிரி இருக்கே என்ற கேள்விகளுடன் அவள் நினைவு...
காமினி யோகினி - பகுதி 10 காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!! எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள்.  கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்க...