Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 7


புதுவை கடற்க்கரை அன்று கூட்டமாக காணப்பட்டது. ஹரி அலுவலகம் முழுவதும் கேளிக்கை சுற்றுலா விற்கு வந்ததால் அங்கு வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் கூட்ட மிகுதியுடன் தான் காணப்பட்டது.

தேவதை என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறான் ஹரி. அனால் அதை பற்றி அப்போது அவன் அதிகமாக சிந்தனை செய்ததில்லை. ப்ரியாவை அன்று பார்த்தபின் அவள் தன் தேவதையோ என்று நினைத்தான். நீளமான கூந்தல் அலை கடல் போல் பாய்ந்தது. அதில் சிறிய படகு போல் சிவந்த நிற ஒற்றை ரோஜா. .
வில் புருவங்களின் கீழ் மை இட்டிறுந்தால் போல இயற்கை நிறம் கொண்ட அகலமான வேல் விழிகள். அவள் சற்று ஏறக்குறைய அகலமான நெற்றி அதில் ஒரு கற்றை முடியை அவள் சரி செய்து கொண்டாள். ஏழினை கவிழ்த்தார் போல அளவான நாசி. தன் செம்பருத்தி நிற அதரங்களை சுழித்து அவள் தோழியிடம் எதோ பேசிக்கொண்டிருந்தாள் .சந்தன நிற மேனியை மஞ்சள் நிற சுடிதார் மறைத்தது . மானம் போற்றும் மங்கை அவளல்லவா? கைகளா அது? எதோ தாமரை மலர்களின் மொட்டுக்கள் கூம்பி இருந்தது போல! அதில் வெண்டை விரல்களை 'கொன்னுடுவேன்' என்ற பாவனை செய்து அவள் தோழிகளில் ஒருத்தியை முறைத்தாள். வாழை தண்டு செதுக்கி அமைத்தார் போல் இருக்கும் என்று கதைகளில் படித்ததுண்டு அந்த கால்கள் இது தானோ?

பிரியா தானே இது? என் கண்கள் என்னை ஏமாற்றுகிறதா? என்று வியந்து கொண்டிருந்தபோது..

"ஹரி! "எப்போ வந்தீங்க ? அய்யோ எவ்ளோ ஸ்மார்டா இருக்கீங்க தெரியுமா?" என்று குழந்தை போல சிரித்துக்கொண்டே வந்தாள்.குரலா அது? ஆயிரம் குயில்கள் ஒன்றாக கீதம் பாடும் ஓசை போல் இன்று கேட்கின்றதே?"பேச நா எழ வில்லை அவனுக்கு ஒரு அடி அடித்தாள் பிரியா.

"ஹலோ! என்னாச்சு?"

அப்போது தான் அவன இக வுலகில் இருப்பதை உணர்ந்தான்.

"பிரியா...ஒன்னு சொல்லட்டுமா? "

"ஹ்ம்ம் சொல்லுங்க?"

"உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...நீ இனிக்கி நெஜமாவே தேவதை போல இருக்க!"

"ஆங்?!! அப்படியா! ரொம்ப நன்றி! ஆயிரம் கோடி நன்றி..இனிக்கி தான் என்ன வாய் திறந்து பாராட்டி இருக்கீங்க..அதை விட முக்கியமான விஷயம் இனிக்கி என்ன நீங்க திட்டாம இருக்கறது. மழை தான் வரணும்" என்று கிண்டல் செய்தாள்.

"ச்சே பைத்தியம்! உன்ன எப்போவும் திட்ட நான் என்ன சிடு மூஞ்சி யா ? சரி சரி என்ன சாப்பிடுற ?"

"எதிர்க்க இருக்கிற குச்சி ஐஸ் கடை இருக்கில்ல அங்க எனக்கு ரெண்டு குச்சி ஐஸ் வேணும் "

"என்னது சின்ன புள்ள மாதிரி குச்சி ஐஸ் கேக்குற?"

"எனக்கு சின்ன புள்ளயிலிருந்தே குச்சி ஐஸ் மேல கொள்ள அசை! எங்க அப்பா வங்கி தரவே மாட்டார். ப்ளீஸ் எனக்கு இப்போ வங்கி தரீங்களா?" என்று குழந்தை போல கெஞ்சினாள்.

"எனக்கு வேண்டாம் நீ பொய் வங்கிக்கோ!" என்று கூறி காசை அவளிடம் கொடுத்தான்.

மகிழ்ச்சியுடன் குச்சி ஐஸ் வங்கி கொண்டு சாலை இருவரும் கடந்து வந்தனர் பிரியா அப்போது திடீரென சிறு பெண்ணை போல துள்ளிக்கொண்டு ஓட சாலையை கடந்தாள் அவள்.

"ப்ரியா! நில்லு!" என்று அவள் மீது மோதி தள்ளினான். இருவரும் சற்றும் எதிர் பார்க்க வில்லை திருப்பத்தில் இருந்து வந்த கார் அவளை மோதாமல் இருக்க அவன் அவள் மீது பாய்ந்து அவளை தள்ளி விட்டிருந்தான் ஹரி. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவன் காலை பதம் பார்த்தது அந்த கார். எல்லாம் கண நேரத்தில் நடந்து முடிந்தது.

"ஐயோ ஹரி! என்று பிரியா வீறிட்டாள் ". மின்சாரம் பாய்ந்தது போல அலறி துடித்தான் ஹரி. அவன் கண்கள் மயக்கத்தில் சேருகின. உலகம் இருண்டது.
-----------------------

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 10

--------------------------------- "பாலைவனத்தில் ஓர் சோலை தெரிந்தது.ஆசையாய் அதை துரத்தி சென்றேன். கால்கள் ஏறிய, கண்கள் கூசும் வெய்யிலில் சென்ற பின் தான் தெரிந்தது அது கானல் நீரென்று!" --------------------------------- இரண்டு நாட்கள் அவர்கள் முன்பு போல சகஜமாக பேசிக் கொள்ளவில்லை.அலுவலகத்தில் பொதுவாக ஹரியை ஓர் இடத்தில் யாரும் சேர்ந்தர்ப்போல் ஒரு ஐந்து நிமிடங்கள் கூட பார்த்தது இல்லை.பரபப்புக்கும் சுறுசுறுப்பிர்கும் பேர் போனவன் ஹரி. அவன் வேலை செய்யாமல் இருந்தே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ஹரி சோபையுடன் காணப்பட்டது எல்லோருக்கும் சற்று ஆச்சரியத்தை அளித்தது. அவனை பார்க்கும் போதெல்லாம் பிரியா அவனிடம் முகம் கொடுக்காமல் பேசினாள். எதை கேட்டாலும் இயந்திரம் போல பதில் சொன்னாள்.வேலையை பற்றி மட்டும் பேசினாள் தவிர மற்ற நேரத்தில் மௌனீயாக அமர்ந்திருந்தாள்.மற்றொரு நாள் அவன் மிகவும் வற்புறுத்தி அவளிடம் பேச தொடங்கினான் ஹரி. "தயவு செய்து என்ன மன்னிச்சிடு பிரியா. நான் உன்னை ரொம்ப நோக வெச்சிடென்னு நினைக்கிறேன். ஆனால் என் காதல் உண்மை பிரியா. உன் கூட மட்டும் தான் பழகினேன் அப்படிங்கிறததுக்கு...

வாசகி நானல்ல! - பக்கம் 2

"நான் தான் கிடைச்சேனா உங்களுக்கு?" என்று எப்போதும் இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்காமல்அவர் ' டீம் லீட்' இடம் கேட்டான் ஹரி. "பின்ன? உன்ன விட்ட யாருடா அவங்களுக்கு Training குடுக்கறது? உன்ன மாதிரி Qualified employee' தான் அந்த வெள்ளக்காரிக்கு Trainer ஆ வேணுமாம் தலை ழா நிக்கிறா அவ!" என்றார் அவர். "என்னவோ போங்க என்ன வெச்சி ஏதோ விளையாடனும்னு முடிவு பண்ணிட்டீங்க. நடத்துங்க." என்று பொருமினான். "டாய்! என் டா பயப்டுற? சும்மா போய் ஜமாய் இது எல்லாம் ஒரு experience தானே ?" என்றே அவர் ஆசை அஸ்திரம் ஏவினார். "Project completion இருக்கு coding work வேற இருக்கு. இப்போ போய் எனக்கு இந்த வேலை குடுகுறீங்க நான் என்னத்த சொல்றது?" " வேண்டாம்ணு சொல்லாதே அதுசின்ன ப்ராஜெக்ட் தான் நாலு மாசத்துல முடிஞ்சிடும். இவங்களுக்கு நீ training குடுதிட்டேன்னா வேலை முடிஞ்சித்து. ஹாயா இருக்கலாம் அப்புறம் அந்த பசங்க உனக்காக வேலை பக்க போறானுங்க." என்று சாத்தான் வேதம் ஓதினார் அவர் மேலாளர். 15 பெருக்கு அவன் பணி நேரம் போக 4 மணி நேரம் கூடுதல் பயிற்சி வகுப்புகள் ...

வாசகி நானல்ல! - பக்கம் 9

ஆசை ஒரு பக்கம் பயம் ஒரு பக்கமும் பிடுங்கி தின்றன ஹரிக்கு.இந்த நாள் அவன் வாழ்க்கையை எப்படி திருப்பி செலுத்த போகின்றது என்று அவனுக்கே தெரியாது. எதுவானாலும் சரி இன்று கேட்டு விடுவது என்றும்,அதே சமயம் எப்படி கேட்பது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தான் அவன். வீட்டில் யாரும் இல்லை.அன்று விடுப்பு வேறு இன்று தான் சரியான தினம் என்று முடிவு செய்தான். சரியான சமயத்தில் செல்பேசி அடித்தது. "ஹலோ ஹரி!" "...." "ஹரி??!" "ஹ்ம்ம் சொல்லு பிரியா.." "இப்போ தான என்திரிசீங்க?என்ன சமையல்? வீட்டுல யாரும் இல்லேன்னு நேத்திக்கி மெசேஜ் பண்ணி இருந்தீங்க? இன்னிக்கி என்ன ப்ரோக்ராம்?"என்று கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தாள் அவள். "ஒண்ணும் இல்ல..இனிக்கி திருவல்லிக்கேணி கோயிலுக்கு போறேன்.. நீயும் வரியா ..எனக்கு ஒரு சந்தேகம்..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பிரியா..இன்னிக்கி நீ என்கூட வர சம்மதமா?" "என்னடா இது?சார் அதிசயமா இன்னிக்கி கோயிலுக்கு எல்லாம் போறீங்க? என்ன மத்தியானம் லஞ்சு அங்கேயேவா :-D? சரி சரி என்ன திடீர்னு?" என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டாள்...