Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே
அதனை நினைவு படுத்துகின்றது.."

புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி.

நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது.

ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது.

"ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான்.

அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது.

மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செய்தாள் பிரியா.
அவனை போலவே திடீரென அவன் முன்னால் வந்து "மிஸ்டர் ஹரி நீங்க தானே? மரியதாயா என்கூடகாப்பி சாப்பிட இப்போ வறீங்க." என்று அதிகார தோரணையில் சொல்லிவிட்டு சென்றாள்.சற்றும் எதிர் பாரமல் அவள் நடந்து கொண்டதால் அவனுக்கு அவள் மீதிருந்த கோபம் விலகியது.

"ஹே எங்க போய் தொலைஞ்ச நீ? இங்க மேனேஜர் என்ன கோடாஞ்சி எடுகிறாங்க. லூசு..என்று திட்ட ஆரம்பித்தான்."

"நீங்க திட்டினா இப்போ எல்லாம் எனக்கு கோவம் வரமாட்டேங்கிதே எனக்கு என்னாச்சு?" என்று சிரித்த முகத்துடன் பதில் சொன்னாள் பிரியா.

"ஹே என்ன பா? நான் என்ன கேக்குறேன் நீ என்னத்த பதில் சொல்ற?""சொல்றேன் டா முந்திரிக்கோட்டை! ( கொஞ்ச நாளில் அவள் பேச்சு இப்படி ஆகி விட்டது பற்றி வாசகர்களுக்கு சொல்ல மறந்து விட்டோம்!)

"எங்க அக்கா என்ன ஊருக்கு வர சொல்லி கால் பண்ணி இருந்தா. நான் வர மாட்டேன் ன்னு சொல்லி இருந்தேன்.திடீர்னு அன்னிக்கு எங்க அம்மா அப்பா ரெண்டு பெரும் பேசி அவசரமா ஊருக்கு வர சொல்லிருந்தாங்க. போன அப்புறம் தான் தெரிஞ்சித்து எங்க அக்காவை பொண்ணு பாக்க வர போறங்கன்னு."

"ஓஹோ! பொண்ணு தானே பக்க போறாங்க அதுவும் உங்க அக்காவை நீ எதுக்கு போகணும்?"

"நானும் அப்படி தான் நெனச்சேன். ஆனா எனக்கும் சேர்த்து தான் அண்ணன், தம்பி ரெண்டு பேரயும் வர சொல்லி இருக்காங்கன்னு எனக்கு அப்புறம் தான் தெரியும்."

சுரீர் என்று காப்பி கையை சுட்டது ஹாரிக்கு.

"அ..அப்புறம்:O?என்று மென்று விழுங்கினான்.

"அப்புறம் என்ன? எங்க ரெண்டு பெருக்கும் புடிச்சி போச்சு. நாங்க சரின்னு சொல்லிட்டொம் கல்யாணம் பிப்ரவரியில் நடக்கும் னு நிச்சயம் ஆயிடுச்சு. மாப்பிளைங்க பெரிய I.T software என்ஜினீர் தெரியுமா?" என்று சொல்லி விட்டு அவன் கண்ணை உற்று நோக்கினாள் பிரியா.

"நிஜமாத்தான் சொல்றியா பிரியா?" என்று அவன் விரக்தியோடு கேட்டான்.
பட்டென சிரித்தது பிரியாவின் அதரங்கள். "அய்யொடா! பாரேன் பச்ச புள்ள முகத்தை.." என்று கிண்டல் செய்தாள்.

"அப்டியே போட்டேன்னா தெரியுமா? காமெடி பண்ற விஷயமா இது?" என்று கடுமையாக கோபித்திதான்.

"ஐ ஐ ஆஸ்க்கு பூஸ்க்கு! நீங்க மட்டும் என்ன திட்டுறா மாதிரி மேனேஜர் கிட்ட நல்ல வேலை பாத்தேன்னு ஸர்டிஃபிகேட் குடுக்கலாம் . நாங்க இப்டி உங்கள எமாத்த கூடாதோ?"

ஆம். அவள் கடுமையாக பணி செய்ததர்க்காக நற்சான்றிதழ் கொடுக்க ஆவன செய்திருந்தான். அதனை தெரிந்து கொண்டு தான் அவள் சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டான். இப்படி சண்டையும் சமாதானமுமாக அவர்கள் கதை தொடர்ந்தது.

அவளுக்கு பிடித்த அத்தனையும் தெரிந்து கொண்டான். அதை செய்தும் காட்டினான். பிரீயவும் அவனும் பழகியது முதல் இருந்த உறவு இப்போது. ஒரு படி உயர்ந்தது. ஒருமையில் பேசினர். அடிக்கடி சேடிங் செய்தனர். எவ்வளவு பேசினர் என்று தெரியாது என்? என்ன பேசினர் என்றும் தெரியாது.
--------------------------
அன்று ஹரியின் பிறந்தநாள். பொதுவாக அவன் கொண்டாடாத பண்டிகைகளில் அதுவும் சேரும்.

"சாமியாரும், ரதி தேவியும் இன்று அவன் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்." என்று ஹரியின் அலுவலக ஸகாக்கள் குறுந் தகவல் பரிமாறி கொண்டனர்.
பிரியா அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தாள். "பிறந்தநாள் வாழ்த்துகள்! ஹரி! என்று வாழ்த்து அட்டை ஒன்றை தந்தாள். "இனிக்கி நான் என் கைய்யால என்னோட நண்பருக்கு இனிப்பு செஞ்சி கொண்டு வந்திருக்கேன் என்று இனிப்பினை அவனுக்கு கொடுத்தாள்.

அம்மாவின் நினைவு வந்தது ஹரிக்கு. அவன் அப்பா அம்மா தவிர வேறு எவரும் அவன் பிறந்த நாளினை சிறப்பாக கருதுவதில்லை. அதன் பின் பிரியா தான் அவன் கண் முன்னே நின்றாள்.

"Thank you very much my dear! But, இந்த present எனக்கு போதாது. நான் ஒண்ணு கேப்பேன் அப்போ நீ எனக்கு அதை தரணும் சரியா?"

"அது என்னால குடுக்க முடிஞ்சா கண்டிப்பா தரேன்!" என்றாள் பிரியா.

"இப்போ வேண்டாம் சமயம் வரும் போது கேக்குறேன்." என்றான் அவன்.

"Hey if you dont mind , can I ask you something? இப்போ எல்லாம் என்னய உத்து உத்து பாக்குரீங்க.. எது கேட்டாலும் சுத்திச் சுத்தி பேசுறீங்க.I dont know what has happened in you? என்னவோ தெரியல்ல என்ன ஆச்சுன்னு! இருந்தாலும் உங்கள நான் ரசிக்கிறேன்". என்று குழந்தை முகத்துடன் சிரித்தாள்.

"Yes you're right!Something has happened to me. So what? It's tasting sweet and sounds melody. I like it the most:)" என்று நினைத்துக்கொண்டான்.

Comments

  1. Nalla improvement theriyudhu indha part le... Nalla ending kooda!

    ReplyDelete
  2. Thank you for your valuble comments! Upon request I have changed the slang:-)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
காமினி யோகினி - 8 காமினி இப்போதும் ஒரு ரண வேதனையை அனுபவித்து கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போது வரைக்கும் எங்கிருக்கிறோம் தான் யார் என்பது கூட தெரியாமல் போயிருந்தது. தன்னுடைய ஸ்நேகிதிகளுடன் வரும்போது ஒருவர் காரில் ஏறிக்கொள்ள லிப்ட் கேட்டதும் பின்னர் அவரிடமிருந்து ஒரு கடுமையான வாடை வந்ததும் அதில் அவர்கள் மயக்கமுற்று கொண்டைஊசி வளைவில் தங்களுடைய வாகனம் மோதி தலைகுப்புற விழுவதும் மட்டுமே அவளுக்கு நினவிருந்தது. அதுவும் யார் எதற்க்காக அவர்களோடு வந்தனர் என்று தெரியவில்லை. சூரஸ்வாமி அவர்களை ஒரு பெட்டியில் வைத்து ஆசிரம நிலவறையில் கிடத்த  சொன்னதும் உப சீடர்கள் அவர்களை பெட்டியில் வைத்து பின்னர் அவர்களை கிடத்தி கொண்டு போயினர். அப்போது இருபதடி உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒரு பெரிய படம் அவள் கண்களில் தென்பட்டது. பெட்டியில் கிட்டத்தட்ட சவம் போல அசைவின்றி படுத்திருந்த அவளுடைய கண்கள் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தன. அவை பெட்டியின் துவாரத்தின் வழியே அந்த படத்தினை பார்த்தன. ஆமாம் அது அந்த உருவம் யாரோ ஸ்வாமியை போல உள்ளதே, ஆமாம் இதை நான் எங்கோ கண்டமாதிரி இருக்கே என்ற கேள்விகளுடன் அவள் நினைவு...
காமினி யோகினி - பகுதி 10 காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!! எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள்.  கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்க...