Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி.

இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர்.

கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான்.

ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி.

எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை.

விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான்.

"அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான்.

"என்ன மச்சி நீயே இப்டி சொல்லிட்டே! நான் பண்ணது தப்பா?"

"பின்ன? யாரா இருந்தாலும் அவங்க மனசு பூண்படும் படி பேசுறது தப்பு தான் அது decency கிடையாது போய் சாரி கேளு!"என்றான்.

ஒரு வாரம் ஓடிற்று. பிரியாவும் ஹரியும் மௌனம் காதத்னர்.

மற்றொரு நாள் ஹரி அவளிடம் சென்றான்.

"பிரியா.." என்றான்.

"சொல்லுங்க ஹரி ஸார். என்ன வேணும்? என்று மிரட்சியுடன் நோக்கினாள் அவள்.

"என்கூட இனிக்கி மத்தியானம் சாப்பிட வரீங்களா?" என்றான்.

"என்ன ஹரி திடீர்னு கேக்குறீங்க? சரி வர்றேன்." என்று கேள்விக்குறி புன்னகையுடன் விடை அளித்தாள் பிரியா.

அன்று சாப்பிடும் அறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஏதும் இல்லை என்றாலும் தண்ணீர் குடிக்கும் சாக்கிலும் காப்பி பிடிக்கும் சாக்கிலும்,அடுத்த மேசையில் சாப்பிடும் சாக்கிலும் பலரும் ஹரியும் பிரியாவும் சேர்ந்து சாப்பிடும் காட்சியினை கண்டு அதிசயித்தனர்.

வாய் இருந்தது அப்போது சாப்பிட மட்டுமே என்று சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் இருவரும்.

முதலில் மௌனம் கலைத்தது ஹரி தான்.

"என்ன..மன்னிச்சிடு..பிரியா உன்கிட்ட அன்னிக்கி கடுமையா நடந்துகிட்டேன்.சாரி! நீ..வா.. போ..ன்னு ஸொல்லலாம்ல?"

"பரவால்ல ஹரி ஸார். எதுக்கு இப்போ நீங்க திடீர்னு மன்னிப்பெல்லாம்?"

"ப்ளீஸ் என்ன இனிமே ஹரின்னு பேர் சொல்லியே கூப்பிடலாமே!" என்று ஹரி மறுமொழி கூறினான்.

"நீங்க ஓகே சொன்னா அப்டியே கூப்பிடுறேன் ஹரி;-)!" என்று பட்டென பதில் அளித்தாள் பிரியா.

"சரி சந்தோஷம். பட் வேலை செய்யும் போது வேண்டாம்.பார்க்கிறவங்க ஏதாச்சும் சொல்லுவாங்க."

"ஹ்ம் அப்டியே தங்கள் உத்தரவு."

"நல்லா பேசுற, நல்ல வாயும் ஆடுற ..."

"ஒரு உண்மைய சொல்லணும்னா நான் வேணும்னே இத்தனை நாள் உன்ன திட்டல்ல..
ஆனா வேலை ன்னு வந்துசின்னா நான் அதுல தான் ரொம்ப ஆழமா போய்டுறேன். என்ன பண்றது?"

"எனக்கு தெரியும் ஹரி ஸார் சாரி :-) ஹரி நீங்க work tensionல நெறைய பண்றீங்க அதுனால என் activities உங்களுக்கு பிரச்னையா இருந்தது வாஸ்தவம் தான் என்னயும் மன்னிக்கணும்."

"இருந்தாலும் நான் கொஞ்சம் அதிகாமவே பேசி சாரி திட்டி இருக்கேன்.."

"அய்யோ அது என் நல்லத்துக்காக தானே ..."

"சரி சரி இனிமே நாம ஃப்ரண்ட்ஸ் ஆக வே இருப்போம் என்ன சொல்ற ஹரி?"

இன்ப அதிர்ச்சிக்கு அவ்வளவாகவே பழக்கபடாதவன் ஹரி. எனினும் சுதாரித்துக் கொண்டான்.
நெடுநேரம் போனது கூட தெரியாமல் உணவு உண்டனர் இருவரும்.
சிரிப்பும் ரசிப்பும் கலந்து அன்று நீண்ட மதிய உணவாக போனது அவர்கள் இருவருக்கும்
---------------------------------

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 10

--------------------------------- "பாலைவனத்தில் ஓர் சோலை தெரிந்தது.ஆசையாய் அதை துரத்தி சென்றேன். கால்கள் ஏறிய, கண்கள் கூசும் வெய்யிலில் சென்ற பின் தான் தெரிந்தது அது கானல் நீரென்று!" --------------------------------- இரண்டு நாட்கள் அவர்கள் முன்பு போல சகஜமாக பேசிக் கொள்ளவில்லை.அலுவலகத்தில் பொதுவாக ஹரியை ஓர் இடத்தில் யாரும் சேர்ந்தர்ப்போல் ஒரு ஐந்து நிமிடங்கள் கூட பார்த்தது இல்லை.பரபப்புக்கும் சுறுசுறுப்பிர்கும் பேர் போனவன் ஹரி. அவன் வேலை செய்யாமல் இருந்தே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ஹரி சோபையுடன் காணப்பட்டது எல்லோருக்கும் சற்று ஆச்சரியத்தை அளித்தது. அவனை பார்க்கும் போதெல்லாம் பிரியா அவனிடம் முகம் கொடுக்காமல் பேசினாள். எதை கேட்டாலும் இயந்திரம் போல பதில் சொன்னாள்.வேலையை பற்றி மட்டும் பேசினாள் தவிர மற்ற நேரத்தில் மௌனீயாக அமர்ந்திருந்தாள்.மற்றொரு நாள் அவன் மிகவும் வற்புறுத்தி அவளிடம் பேச தொடங்கினான் ஹரி. "தயவு செய்து என்ன மன்னிச்சிடு பிரியா. நான் உன்னை ரொம்ப நோக வெச்சிடென்னு நினைக்கிறேன். ஆனால் என் காதல் உண்மை பிரியா. உன் கூட மட்டும் தான் பழகினேன் அப்படிங்கிறததுக்கு...

வாசகி நானல்ல! - பக்கம் 2

"நான் தான் கிடைச்சேனா உங்களுக்கு?" என்று எப்போதும் இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்காமல்அவர் ' டீம் லீட்' இடம் கேட்டான் ஹரி. "பின்ன? உன்ன விட்ட யாருடா அவங்களுக்கு Training குடுக்கறது? உன்ன மாதிரி Qualified employee' தான் அந்த வெள்ளக்காரிக்கு Trainer ஆ வேணுமாம் தலை ழா நிக்கிறா அவ!" என்றார் அவர். "என்னவோ போங்க என்ன வெச்சி ஏதோ விளையாடனும்னு முடிவு பண்ணிட்டீங்க. நடத்துங்க." என்று பொருமினான். "டாய்! என் டா பயப்டுற? சும்மா போய் ஜமாய் இது எல்லாம் ஒரு experience தானே ?" என்றே அவர் ஆசை அஸ்திரம் ஏவினார். "Project completion இருக்கு coding work வேற இருக்கு. இப்போ போய் எனக்கு இந்த வேலை குடுகுறீங்க நான் என்னத்த சொல்றது?" " வேண்டாம்ணு சொல்லாதே அதுசின்ன ப்ராஜெக்ட் தான் நாலு மாசத்துல முடிஞ்சிடும். இவங்களுக்கு நீ training குடுதிட்டேன்னா வேலை முடிஞ்சித்து. ஹாயா இருக்கலாம் அப்புறம் அந்த பசங்க உனக்காக வேலை பக்க போறானுங்க." என்று சாத்தான் வேதம் ஓதினார் அவர் மேலாளர். 15 பெருக்கு அவன் பணி நேரம் போக 4 மணி நேரம் கூடுதல் பயிற்சி வகுப்புகள் ...

வாசகி நானல்ல! - பக்கம் 9

ஆசை ஒரு பக்கம் பயம் ஒரு பக்கமும் பிடுங்கி தின்றன ஹரிக்கு.இந்த நாள் அவன் வாழ்க்கையை எப்படி திருப்பி செலுத்த போகின்றது என்று அவனுக்கே தெரியாது. எதுவானாலும் சரி இன்று கேட்டு விடுவது என்றும்,அதே சமயம் எப்படி கேட்பது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தான் அவன். வீட்டில் யாரும் இல்லை.அன்று விடுப்பு வேறு இன்று தான் சரியான தினம் என்று முடிவு செய்தான். சரியான சமயத்தில் செல்பேசி அடித்தது. "ஹலோ ஹரி!" "...." "ஹரி??!" "ஹ்ம்ம் சொல்லு பிரியா.." "இப்போ தான என்திரிசீங்க?என்ன சமையல்? வீட்டுல யாரும் இல்லேன்னு நேத்திக்கி மெசேஜ் பண்ணி இருந்தீங்க? இன்னிக்கி என்ன ப்ரோக்ராம்?"என்று கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தாள் அவள். "ஒண்ணும் இல்ல..இனிக்கி திருவல்லிக்கேணி கோயிலுக்கு போறேன்.. நீயும் வரியா ..எனக்கு ஒரு சந்தேகம்..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பிரியா..இன்னிக்கி நீ என்கூட வர சம்மதமா?" "என்னடா இது?சார் அதிசயமா இன்னிக்கி கோயிலுக்கு எல்லாம் போறீங்க? என்ன மத்தியானம் லஞ்சு அங்கேயேவா :-D? சரி சரி என்ன திடீர்னு?" என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டாள்...