Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி.

இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர்.

கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான்.

ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி.

எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை.

விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான்.

"அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான்.

"என்ன மச்சி நீயே இப்டி சொல்லிட்டே! நான் பண்ணது தப்பா?"

"பின்ன? யாரா இருந்தாலும் அவங்க மனசு பூண்படும் படி பேசுறது தப்பு தான் அது decency கிடையாது போய் சாரி கேளு!"என்றான்.

ஒரு வாரம் ஓடிற்று. பிரியாவும் ஹரியும் மௌனம் காதத்னர்.

மற்றொரு நாள் ஹரி அவளிடம் சென்றான்.

"பிரியா.." என்றான்.

"சொல்லுங்க ஹரி ஸார். என்ன வேணும்? என்று மிரட்சியுடன் நோக்கினாள் அவள்.

"என்கூட இனிக்கி மத்தியானம் சாப்பிட வரீங்களா?" என்றான்.

"என்ன ஹரி திடீர்னு கேக்குறீங்க? சரி வர்றேன்." என்று கேள்விக்குறி புன்னகையுடன் விடை அளித்தாள் பிரியா.

அன்று சாப்பிடும் அறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஏதும் இல்லை என்றாலும் தண்ணீர் குடிக்கும் சாக்கிலும் காப்பி பிடிக்கும் சாக்கிலும்,அடுத்த மேசையில் சாப்பிடும் சாக்கிலும் பலரும் ஹரியும் பிரியாவும் சேர்ந்து சாப்பிடும் காட்சியினை கண்டு அதிசயித்தனர்.

வாய் இருந்தது அப்போது சாப்பிட மட்டுமே என்று சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் இருவரும்.

முதலில் மௌனம் கலைத்தது ஹரி தான்.

"என்ன..மன்னிச்சிடு..பிரியா உன்கிட்ட அன்னிக்கி கடுமையா நடந்துகிட்டேன்.சாரி! நீ..வா.. போ..ன்னு ஸொல்லலாம்ல?"

"பரவால்ல ஹரி ஸார். எதுக்கு இப்போ நீங்க திடீர்னு மன்னிப்பெல்லாம்?"

"ப்ளீஸ் என்ன இனிமே ஹரின்னு பேர் சொல்லியே கூப்பிடலாமே!" என்று ஹரி மறுமொழி கூறினான்.

"நீங்க ஓகே சொன்னா அப்டியே கூப்பிடுறேன் ஹரி;-)!" என்று பட்டென பதில் அளித்தாள் பிரியா.

"சரி சந்தோஷம். பட் வேலை செய்யும் போது வேண்டாம்.பார்க்கிறவங்க ஏதாச்சும் சொல்லுவாங்க."

"ஹ்ம் அப்டியே தங்கள் உத்தரவு."

"நல்லா பேசுற, நல்ல வாயும் ஆடுற ..."

"ஒரு உண்மைய சொல்லணும்னா நான் வேணும்னே இத்தனை நாள் உன்ன திட்டல்ல..
ஆனா வேலை ன்னு வந்துசின்னா நான் அதுல தான் ரொம்ப ஆழமா போய்டுறேன். என்ன பண்றது?"

"எனக்கு தெரியும் ஹரி ஸார் சாரி :-) ஹரி நீங்க work tensionல நெறைய பண்றீங்க அதுனால என் activities உங்களுக்கு பிரச்னையா இருந்தது வாஸ்தவம் தான் என்னயும் மன்னிக்கணும்."

"இருந்தாலும் நான் கொஞ்சம் அதிகாமவே பேசி சாரி திட்டி இருக்கேன்.."

"அய்யோ அது என் நல்லத்துக்காக தானே ..."

"சரி சரி இனிமே நாம ஃப்ரண்ட்ஸ் ஆக வே இருப்போம் என்ன சொல்ற ஹரி?"

இன்ப அதிர்ச்சிக்கு அவ்வளவாகவே பழக்கபடாதவன் ஹரி. எனினும் சுதாரித்துக் கொண்டான்.
நெடுநேரம் போனது கூட தெரியாமல் உணவு உண்டனர் இருவரும்.
சிரிப்பும் ரசிப்பும் கலந்து அன்று நீண்ட மதிய உணவாக போனது அவர்கள் இருவருக்கும்
---------------------------------

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
காமினி யோகினி - 8 காமினி இப்போதும் ஒரு ரண வேதனையை அனுபவித்து கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போது வரைக்கும் எங்கிருக்கிறோம் தான் யார் என்பது கூட தெரியாமல் போயிருந்தது. தன்னுடைய ஸ்நேகிதிகளுடன் வரும்போது ஒருவர் காரில் ஏறிக்கொள்ள லிப்ட் கேட்டதும் பின்னர் அவரிடமிருந்து ஒரு கடுமையான வாடை வந்ததும் அதில் அவர்கள் மயக்கமுற்று கொண்டைஊசி வளைவில் தங்களுடைய வாகனம் மோதி தலைகுப்புற விழுவதும் மட்டுமே அவளுக்கு நினவிருந்தது. அதுவும் யார் எதற்க்காக அவர்களோடு வந்தனர் என்று தெரியவில்லை. சூரஸ்வாமி அவர்களை ஒரு பெட்டியில் வைத்து ஆசிரம நிலவறையில் கிடத்த  சொன்னதும் உப சீடர்கள் அவர்களை பெட்டியில் வைத்து பின்னர் அவர்களை கிடத்தி கொண்டு போயினர். அப்போது இருபதடி உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒரு பெரிய படம் அவள் கண்களில் தென்பட்டது. பெட்டியில் கிட்டத்தட்ட சவம் போல அசைவின்றி படுத்திருந்த அவளுடைய கண்கள் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தன. அவை பெட்டியின் துவாரத்தின் வழியே அந்த படத்தினை பார்த்தன. ஆமாம் அது அந்த உருவம் யாரோ ஸ்வாமியை போல உள்ளதே, ஆமாம் இதை நான் எங்கோ கண்டமாதிரி இருக்கே என்ற கேள்விகளுடன் அவள் நினைவு...
காமினி யோகினி - பகுதி 10 காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!! எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள்.  கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்க...