Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 3

அனுப்ப பட்ட மின்னஞ்சலை மறுமுறை பார்த்தான் ஹரி. பிரியா, பட்டப் படிப்பு கணினி பொறியியல் அளவான குடும்பம், பல குறுகிய கால ப்ராஜக்ட் களில் பணி புரிந்த அனுபவமும் நற்சான்றிதழ் மட்டுமே அவள் பாயோ டேட்டாவில் இருந்தன.

"You have a Meeting at 6:15 PM" என்று எட்டிப்பார்த்து வெறுப்பேற்றியது மின்னஞ்சல்.
------------------------------------------------
மாலை மணி 6:30. கொஞ்சம் மங்கிய வெளிச்சமும், ஒளிக்கற்ரைகள் சிந்தும் 'ப்ரஜெக்டர்' ஒளியும் ஹரியின் மன நிலையினை இன்னும் வெறுப்பாக்கின.

"Hi! Hello! And a warm welcome to you from Techspark Technologies. I am Hari Jagadeesan..I am going to be your Mentor for your entire probation period."

Could you please introduce yourselves one by one?என்று கூறி அவன காப்பியை உறிஞ்சியபடி அந்த ஹாலில் உள்ள அனைவரையும் நோட்டம் விட்டான். மாலை அவன் இந்நேரம் வீட்டின் பாதி வழி சென்றிருப்பான்.

"கடுப்பு! இந்த சந்தை மாடெல்லாம் என்ன மேக்க விட்டுட்டு இவனுங்க எல்லாம் ஜாலியா வீட்டுக்கு போய்ட்டாங்க பாரு! என்று உள்ளூர திட்டிக்கொண்டான் அவன்.

மலர்.. வாசு.. தயாள்..ரமேஷ்..வகுப்பு முடிந்தது ...எங்கே அந்த பிரியா?

"Hi! May I come in?"

தன் கண்களை பயிற்சி அறையின் கதவுகளில் குத்தி நிறுத்தினான். பளிச் என்ற முன்பக்க விளக்கில் அவளை சரியாக பார்க்க இயலவில்லை. குரல் மட்டும் கேட்டது.
Hi I am ...Priya...May I come in? என்று குரல். இன்னும பார்க்க முடியவில்லை. ப்ரஜெக்டர் வெளிச்சம் கண்ணை உறுத்தியது.

பிரியா தான் வந்தாள்.
"நீங்க தான் மிஸ் பிரியா வா?" என்றான்.
"ஆமாம் ஸர். உள்ள வரலாமா?" என்றாள் அவள்.
"உள்ள வாங்க! மிஸ் பிரியா.அப்படியே உங்கள அறிமுக படுத்திக்கங்க. நீங்க தான் லேட்." என்று கிண்டல் செய்தான். எல்லோரும் உடனடி சிரிப்பினை உகுத்தனர்.

"Hi! Let me introduce my self I am Priya Vasudevan. Graduated in Hidustan college of Engineering for ECE,2007 passed out...." ரயில் எஞ்சின் போல பேசினாள்.

" ஒ.கே! உக்காருங்க. என்று மத்தியில் வெட்டி நிறுத்தினான். நாம இனிக்கி கிளாஸ் பாக்கலாம். "

வகுப்பு முடிந்தது. வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தான் ஹரி.

"ஹரி ஸார்!! ஒரு நிமிஷம்!" ஒரு குயில் கூவிற்று. ஆனால் கழுதைக்கு தெரியுமா...;-)

"சொல்லுங்க பிரியா!
"நான் சீக்கிரமா தான் கிளம்பினேன். வண்டி பிரச்னை பண்ணிடுத்து. அதுனால தான் மணிக்கு வர முடியல. மன்னிச்சிடுங்க. "

"இந்த மாதிரி சாக்கு சொல்றத விட்டுட்டு இனிமே ப்ளான் பண்ணி கிளம்பி வர்றத பாருங்க." என்று ஊசி குத்தி விட்டு கிளம்பினான். பிரியாவின் முகம் வாடியது.

வண்டியை தட்டினான் ஹரி. "அப்படி பேசி இருக்க கூடாது தான். சே! இது முறை அல்லவே! "என்று அவளை பற்றி சிந்தனை சுற்ற விட்டான்.

இரண்டு வார பயிற்சி வகுப்பு முடிந்தது. பிரியா தான் மிகவும் சந்தேகங்கள் கேட்டாள். விகாஸ் உடன் தான் அதிக நேரம் ஜீ chatல்அரட்டை அடிப்பான் ஹரி. அமேரிக்கா வில் இருந்தாலும் அவன் தான் நித்தம் பேசும் நண்பன். பள்ளியிலிருந்து ஒரே நண்பன் ஆதலால் அவன் இடம் மட்டுமே அனைத்தாயும் பகிர்ந்து கொள்வான் ஹரி.

"ரொம்ப அதிகமா பண்ற டா அவ" என்று ஹரி கூற.. "விடு மச்சான்! பொண்ணுங்க அவங்க இடத்தை காண்பிக்கணும்னு எப்பொவுமே படம் காட்டுரது வழக்கம் தானே" என்று சமாதானம் செய்தான் விகாஸ்.

ஒரு நாள் மாலை டீக்கடையில் ஒரு பனிப்போர் வந்தது. "பாருடா யோகத்தை! நம்ம சாமியாருக்கு ரதி வந்து சிக்கிட்டா போல" அன்று நண்பர்கள் கிண்டல் அடித்தனர். என்றுமே இல்லாத அளவிர்க்கு அன்று கோபம் பீறிட்டு கிளம்பியது.
"என்ன மச்சி உளர்ற?" என்று அவன் சகாவை முறைத்தான்.

"பய்யன் சிக்கிட்டான். என்ன மச்சான் பிரியா மேல உனக்கு ஒரு கண்ணு போல.." என்று கிண்டல் செய்தனர். அவ்வளவு தான்.
"இந்த ஹரி அப்டி பட்டவன் இல்லடா! பொண்ணுங்க முன்னாடி பல்ல இளிச்சிகிட்டு போக என்ன என்ன மூணாம் தர மனுஷன் போல நெனச்சியா?" என்று வேடிதுவிட்டான்.

டீக்கடையில் இருந்த தொலைக்காட்சியில் பிதாமகன் படத்தின் வசனம் மட்டும் அலறியது.
"விதி வலியது.....!!"

விதிக்கு மட்டுமே தெரியும் அவன் தன்னை அறியாமல் விழா போகிறான் என்று:-)

அப்படி வெடித்தான் தவிர உள்ளுக்குள் அவள் எண்ணம் அவ்வப்போது வருவதும் அதை தட்டி கழிப்பதும் அவன் உள்ளத்தில் நடந்து கொண்டிருந்தான் இருந்தது. அத்தனை சுலபமாக அந்த எண்ணங்களை அவனால் அடக்க முடியவில்லை. என் என்றும் தெரியவில்லை.

பிரியா. அவ்வளவு சிகப்பு நிறம் இல்லை என்றாலும் களையான முகம். உயரம் 5 அடி இருக்கும். குரல் அழகாக இருந்தது. நல்ல வாசனை பரப்பும் பர்ஃப்யூம் போட்டு இருந்தாள். கண்கள் பேசின.கொவ்வை வாய் கிண்கிணி பாடின. வீட்டில் உள்ள வானொலி பண்பலையில் கேட்டது "சுடிதார் அணிந்து வந்த சொற்கமே..." சூரியா வின் பாட்டு.
இப்போதெல்லாம் அலுவலகத்திலும் அவனுக்கு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது.
---------------------------

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
காமினி யோகினி - 8 காமினி இப்போதும் ஒரு ரண வேதனையை அனுபவித்து கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போது வரைக்கும் எங்கிருக்கிறோம் தான் யார் என்பது கூட தெரியாமல் போயிருந்தது. தன்னுடைய ஸ்நேகிதிகளுடன் வரும்போது ஒருவர் காரில் ஏறிக்கொள்ள லிப்ட் கேட்டதும் பின்னர் அவரிடமிருந்து ஒரு கடுமையான வாடை வந்ததும் அதில் அவர்கள் மயக்கமுற்று கொண்டைஊசி வளைவில் தங்களுடைய வாகனம் மோதி தலைகுப்புற விழுவதும் மட்டுமே அவளுக்கு நினவிருந்தது. அதுவும் யார் எதற்க்காக அவர்களோடு வந்தனர் என்று தெரியவில்லை. சூரஸ்வாமி அவர்களை ஒரு பெட்டியில் வைத்து ஆசிரம நிலவறையில் கிடத்த  சொன்னதும் உப சீடர்கள் அவர்களை பெட்டியில் வைத்து பின்னர் அவர்களை கிடத்தி கொண்டு போயினர். அப்போது இருபதடி உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒரு பெரிய படம் அவள் கண்களில் தென்பட்டது. பெட்டியில் கிட்டத்தட்ட சவம் போல அசைவின்றி படுத்திருந்த அவளுடைய கண்கள் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தன. அவை பெட்டியின் துவாரத்தின் வழியே அந்த படத்தினை பார்த்தன. ஆமாம் அது அந்த உருவம் யாரோ ஸ்வாமியை போல உள்ளதே, ஆமாம் இதை நான் எங்கோ கண்டமாதிரி இருக்கே என்ற கேள்விகளுடன் அவள் நினைவு...
காமினி யோகினி - பகுதி 10 காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!! எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள்.  கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்க...