Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 3

அனுப்ப பட்ட மின்னஞ்சலை மறுமுறை பார்த்தான் ஹரி. பிரியா, பட்டப் படிப்பு கணினி பொறியியல் அளவான குடும்பம், பல குறுகிய கால ப்ராஜக்ட் களில் பணி புரிந்த அனுபவமும் நற்சான்றிதழ் மட்டுமே அவள் பாயோ டேட்டாவில் இருந்தன.

"You have a Meeting at 6:15 PM" என்று எட்டிப்பார்த்து வெறுப்பேற்றியது மின்னஞ்சல்.
------------------------------------------------
மாலை மணி 6:30. கொஞ்சம் மங்கிய வெளிச்சமும், ஒளிக்கற்ரைகள் சிந்தும் 'ப்ரஜெக்டர்' ஒளியும் ஹரியின் மன நிலையினை இன்னும் வெறுப்பாக்கின.

"Hi! Hello! And a warm welcome to you from Techspark Technologies. I am Hari Jagadeesan..I am going to be your Mentor for your entire probation period."

Could you please introduce yourselves one by one?என்று கூறி அவன காப்பியை உறிஞ்சியபடி அந்த ஹாலில் உள்ள அனைவரையும் நோட்டம் விட்டான். மாலை அவன் இந்நேரம் வீட்டின் பாதி வழி சென்றிருப்பான்.

"கடுப்பு! இந்த சந்தை மாடெல்லாம் என்ன மேக்க விட்டுட்டு இவனுங்க எல்லாம் ஜாலியா வீட்டுக்கு போய்ட்டாங்க பாரு! என்று உள்ளூர திட்டிக்கொண்டான் அவன்.

மலர்.. வாசு.. தயாள்..ரமேஷ்..வகுப்பு முடிந்தது ...எங்கே அந்த பிரியா?

"Hi! May I come in?"

தன் கண்களை பயிற்சி அறையின் கதவுகளில் குத்தி நிறுத்தினான். பளிச் என்ற முன்பக்க விளக்கில் அவளை சரியாக பார்க்க இயலவில்லை. குரல் மட்டும் கேட்டது.
Hi I am ...Priya...May I come in? என்று குரல். இன்னும பார்க்க முடியவில்லை. ப்ரஜெக்டர் வெளிச்சம் கண்ணை உறுத்தியது.

பிரியா தான் வந்தாள்.
"நீங்க தான் மிஸ் பிரியா வா?" என்றான்.
"ஆமாம் ஸர். உள்ள வரலாமா?" என்றாள் அவள்.
"உள்ள வாங்க! மிஸ் பிரியா.அப்படியே உங்கள அறிமுக படுத்திக்கங்க. நீங்க தான் லேட்." என்று கிண்டல் செய்தான். எல்லோரும் உடனடி சிரிப்பினை உகுத்தனர்.

"Hi! Let me introduce my self I am Priya Vasudevan. Graduated in Hidustan college of Engineering for ECE,2007 passed out...." ரயில் எஞ்சின் போல பேசினாள்.

" ஒ.கே! உக்காருங்க. என்று மத்தியில் வெட்டி நிறுத்தினான். நாம இனிக்கி கிளாஸ் பாக்கலாம். "

வகுப்பு முடிந்தது. வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தான் ஹரி.

"ஹரி ஸார்!! ஒரு நிமிஷம்!" ஒரு குயில் கூவிற்று. ஆனால் கழுதைக்கு தெரியுமா...;-)

"சொல்லுங்க பிரியா!
"நான் சீக்கிரமா தான் கிளம்பினேன். வண்டி பிரச்னை பண்ணிடுத்து. அதுனால தான் மணிக்கு வர முடியல. மன்னிச்சிடுங்க. "

"இந்த மாதிரி சாக்கு சொல்றத விட்டுட்டு இனிமே ப்ளான் பண்ணி கிளம்பி வர்றத பாருங்க." என்று ஊசி குத்தி விட்டு கிளம்பினான். பிரியாவின் முகம் வாடியது.

வண்டியை தட்டினான் ஹரி. "அப்படி பேசி இருக்க கூடாது தான். சே! இது முறை அல்லவே! "என்று அவளை பற்றி சிந்தனை சுற்ற விட்டான்.

இரண்டு வார பயிற்சி வகுப்பு முடிந்தது. பிரியா தான் மிகவும் சந்தேகங்கள் கேட்டாள். விகாஸ் உடன் தான் அதிக நேரம் ஜீ chatல்அரட்டை அடிப்பான் ஹரி. அமேரிக்கா வில் இருந்தாலும் அவன் தான் நித்தம் பேசும் நண்பன். பள்ளியிலிருந்து ஒரே நண்பன் ஆதலால் அவன் இடம் மட்டுமே அனைத்தாயும் பகிர்ந்து கொள்வான் ஹரி.

"ரொம்ப அதிகமா பண்ற டா அவ" என்று ஹரி கூற.. "விடு மச்சான்! பொண்ணுங்க அவங்க இடத்தை காண்பிக்கணும்னு எப்பொவுமே படம் காட்டுரது வழக்கம் தானே" என்று சமாதானம் செய்தான் விகாஸ்.

ஒரு நாள் மாலை டீக்கடையில் ஒரு பனிப்போர் வந்தது. "பாருடா யோகத்தை! நம்ம சாமியாருக்கு ரதி வந்து சிக்கிட்டா போல" அன்று நண்பர்கள் கிண்டல் அடித்தனர். என்றுமே இல்லாத அளவிர்க்கு அன்று கோபம் பீறிட்டு கிளம்பியது.
"என்ன மச்சி உளர்ற?" என்று அவன் சகாவை முறைத்தான்.

"பய்யன் சிக்கிட்டான். என்ன மச்சான் பிரியா மேல உனக்கு ஒரு கண்ணு போல.." என்று கிண்டல் செய்தனர். அவ்வளவு தான்.
"இந்த ஹரி அப்டி பட்டவன் இல்லடா! பொண்ணுங்க முன்னாடி பல்ல இளிச்சிகிட்டு போக என்ன என்ன மூணாம் தர மனுஷன் போல நெனச்சியா?" என்று வேடிதுவிட்டான்.

டீக்கடையில் இருந்த தொலைக்காட்சியில் பிதாமகன் படத்தின் வசனம் மட்டும் அலறியது.
"விதி வலியது.....!!"

விதிக்கு மட்டுமே தெரியும் அவன் தன்னை அறியாமல் விழா போகிறான் என்று:-)

அப்படி வெடித்தான் தவிர உள்ளுக்குள் அவள் எண்ணம் அவ்வப்போது வருவதும் அதை தட்டி கழிப்பதும் அவன் உள்ளத்தில் நடந்து கொண்டிருந்தான் இருந்தது. அத்தனை சுலபமாக அந்த எண்ணங்களை அவனால் அடக்க முடியவில்லை. என் என்றும் தெரியவில்லை.

பிரியா. அவ்வளவு சிகப்பு நிறம் இல்லை என்றாலும் களையான முகம். உயரம் 5 அடி இருக்கும். குரல் அழகாக இருந்தது. நல்ல வாசனை பரப்பும் பர்ஃப்யூம் போட்டு இருந்தாள். கண்கள் பேசின.கொவ்வை வாய் கிண்கிணி பாடின. வீட்டில் உள்ள வானொலி பண்பலையில் கேட்டது "சுடிதார் அணிந்து வந்த சொற்கமே..." சூரியா வின் பாட்டு.
இப்போதெல்லாம் அலுவலகத்திலும் அவனுக்கு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது.
---------------------------

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 10

--------------------------------- "பாலைவனத்தில் ஓர் சோலை தெரிந்தது.ஆசையாய் அதை துரத்தி சென்றேன். கால்கள் ஏறிய, கண்கள் கூசும் வெய்யிலில் சென்ற பின் தான் தெரிந்தது அது கானல் நீரென்று!" --------------------------------- இரண்டு நாட்கள் அவர்கள் முன்பு போல சகஜமாக பேசிக் கொள்ளவில்லை.அலுவலகத்தில் பொதுவாக ஹரியை ஓர் இடத்தில் யாரும் சேர்ந்தர்ப்போல் ஒரு ஐந்து நிமிடங்கள் கூட பார்த்தது இல்லை.பரபப்புக்கும் சுறுசுறுப்பிர்கும் பேர் போனவன் ஹரி. அவன் வேலை செய்யாமல் இருந்தே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ஹரி சோபையுடன் காணப்பட்டது எல்லோருக்கும் சற்று ஆச்சரியத்தை அளித்தது. அவனை பார்க்கும் போதெல்லாம் பிரியா அவனிடம் முகம் கொடுக்காமல் பேசினாள். எதை கேட்டாலும் இயந்திரம் போல பதில் சொன்னாள்.வேலையை பற்றி மட்டும் பேசினாள் தவிர மற்ற நேரத்தில் மௌனீயாக அமர்ந்திருந்தாள்.மற்றொரு நாள் அவன் மிகவும் வற்புறுத்தி அவளிடம் பேச தொடங்கினான் ஹரி. "தயவு செய்து என்ன மன்னிச்சிடு பிரியா. நான் உன்னை ரொம்ப நோக வெச்சிடென்னு நினைக்கிறேன். ஆனால் என் காதல் உண்மை பிரியா. உன் கூட மட்டும் தான் பழகினேன் அப்படிங்கிறததுக்கு...

வாசகி நானல்ல! - பக்கம் 6

------------------------- "முழுச் சந்திரனை கிரகணம் பிடித்தது அன்று. சந்திரன் எந்த தவரும் செய்யவில்லை. ஏனோ இருளிர்க்கு அவளை அணைத்திட ஆசை. ஆனால் அவனுக்கு மட்டும் தான் அவள் சொந்த என்பது போல இந்த இருள் அரக்கன் சந்திரன் காணாமல் செய்து விட்டானே பாவி?" ------------------------- "நிஜமா வா சொல்றீங்க?" ஹரி முகத்தில் கலவரம் விகாரத்துடன் வெளிப்பட்டது. "இனிக்கி தான் எனக்கு தகவல் வந்தது டா. இன்னும் ஒரு மாசம் தான் நீ பண்ணிட்டு இருக்கிற இந்த Short-Term ப்ராஜெக்ட் முடிஞ்சி போய்டும். எப்படி இருந்தாலும் உனக்கு தலை வலி விட்டது." "அப்போ இந்த பசங்க எல்லாம்?" "அவங்க எல்லாரும் இன்னொரு வேலைக்கு போக வேண்டியது தான்?!" அவங்க 'Provider' ஆபீஸ்ல அத பாத்துக்க போறாங்க நாம 'Client' தானே நமக்கு என்ன கவலை?" என்று அமைதியாக பதில் அளித்தார் மேலாளர். சிறிது நேரம் அவன் முகத்தை நோக்கிய வாறே இருந்தார் அவர். மிகுந்த கவலையோடும் ஆர்வத்துடனும் ஹரி அவரை பார்த்து கொண்டிருந்தான். "டாய் சாமியார்! நீ இவ்வளோ மாறி போவேன்னு நான் எதிர் பாக்கல்ல. என்னடா லவ்வா?;-)...

வாசகி நானல்ல! - பக்கம் 9

ஆசை ஒரு பக்கம் பயம் ஒரு பக்கமும் பிடுங்கி தின்றன ஹரிக்கு.இந்த நாள் அவன் வாழ்க்கையை எப்படி திருப்பி செலுத்த போகின்றது என்று அவனுக்கே தெரியாது. எதுவானாலும் சரி இன்று கேட்டு விடுவது என்றும்,அதே சமயம் எப்படி கேட்பது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தான் அவன். வீட்டில் யாரும் இல்லை.அன்று விடுப்பு வேறு இன்று தான் சரியான தினம் என்று முடிவு செய்தான். சரியான சமயத்தில் செல்பேசி அடித்தது. "ஹலோ ஹரி!" "...." "ஹரி??!" "ஹ்ம்ம் சொல்லு பிரியா.." "இப்போ தான என்திரிசீங்க?என்ன சமையல்? வீட்டுல யாரும் இல்லேன்னு நேத்திக்கி மெசேஜ் பண்ணி இருந்தீங்க? இன்னிக்கி என்ன ப்ரோக்ராம்?"என்று கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தாள் அவள். "ஒண்ணும் இல்ல..இனிக்கி திருவல்லிக்கேணி கோயிலுக்கு போறேன்.. நீயும் வரியா ..எனக்கு ஒரு சந்தேகம்..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பிரியா..இன்னிக்கி நீ என்கூட வர சம்மதமா?" "என்னடா இது?சார் அதிசயமா இன்னிக்கி கோயிலுக்கு எல்லாம் போறீங்க? என்ன மத்தியானம் லஞ்சு அங்கேயேவா :-D? சரி சரி என்ன திடீர்னு?" என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டாள்...